‘காதல் எனும் வார்த்தைக்கான அர்த்தத்தை நானும் தேடிக் கொண்டிருக்கிறேன்’ என நடிகை த்ரிஷா தெரிவித்துள்ளார்.
குழந்தைகள் நலனுக்காக உலகம் முழுவதும் இயங்கிவரும் அமைப்பு யுனிசெஃப். இந்த அமைப்பின் செலிபிரிட்டி அட்வகேட்டாக த்ரிஷா நியமிக்கப்பட்டுள்ளார். தமிழ்நாடு மற்றும் கேரள மாநிலங்களுக்கான செலிபிரிட்டி அட்வகேட்டாக அவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
சென்னையில் யுனிசெஃப் சார்பில் குழந்தைகள் தின விழா இன்று நடைபெற்றது. இந்த விழாவில் பேசிய த்ரிஷா, “விழிப்புணர்வு இல்லாததே எல்லாவிதமான பாலியல் குற்றங்களுக்கும் காரணம். திரைப்படங்களை சீரியஸாக எடுத்துக் கொள்ளக்கூடாது. அவை வெறும் பொழுதுபோக்கு மட்டுமே” எனத் தெரிவித்துள்ளார்.
மேலும், “காதல் எனும் வார்த்தைக்கான அர்த்தத்தை நானும் தேடிக்கொண்டு இருக்கிறேன்” எனவும் த்ரிஷா கூறியுள்ளார்.