Advertisment

அமிதாப்-அபிஷேக் உடல்நிலை: தீவிர சிகிச்சை தேவையில்லை - மருத்துவமனை வட்டாரம்

ஐஸ்வர்யா மற்றும் ஆராத்யாவின் நோயறிதலை அபிஷேக் பச்சன் ஞாயிற்றுக் கிழமை உறுதிப்படுத்தினார்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Amitabh Bachchan, son Abhishek test positive for Covid-19

Amitabh Bachchan, son Abhishek test positive for Covid-19

கொரோனா வைரஸ் பரிசோதனையில் பாஸிட்டிவ் சோதனை செய்த பின்னர், பாலிவுட் மெகா ஸ்டார் அமிதாப் பச்சனும், அபிஷேக் பச்சனும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்கள் இருவரும், "மருத்துவ ரீதியாக நிலையானவர்கள்" என்று மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.

Advertisment

கொரோனா மருந்து சோதனையை முடித்துள்ளதாக ரஷ்யா அறிவிப்பு – நெட்டிசன்களின் உலகமே தனிதான்

77 வயதான அமிதாப் மற்றும் 44 வயதான அபிஷேக், நானாவதி மருத்துவமனையின் தனிமை வார்டில் இருப்பதாக, ஜூலை 11-ஆம் தேதி ட்விட்டரில் தெரியப்படுத்தினார்கள்.

"அவர்கள் இருவரும் (தனிமைப்படுத்தப்பட்ட) வார்டில் உள்ளனர். மருத்துவ ரீதியாக நிலையாக இருக்கிறார்கள். தற்போது, அவர்களுக்கு தீவிர சிகிச்சை தேவையில்லை. ஃபர்ஸ்ட் லைன் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது” என  மருத்துவமனையுடன் தொடர்புடையவர் தெரிவித்திருக்கிறார்.

"அவர்களுக்கு உயிரணுக்களும் பசியும் நன்றாக இருக்கிறது" எனவும் அந்த வட்டாரம் கூறியுள்ளது.

ஞாயிற்றுக்கிழமை, அமிதாப் பச்சனின் மருமகளும், நடிகையுமான ஐஸ்வர்யா ராய் (வயது 46), மற்றும் அவரது எட்டு வயது மகள் ஆராத்யா ஆகியோரும் கோவிட் -19 க்கு நேர்மறையாக சோதிக்கப்பட்டனர்.

ஐஸ்வர்யா மற்றும் ஆராத்யாவின் நோயறிதலை அபிஷேக் பச்சன் ஞாயிற்றுக் கிழமை உறுதிப்படுத்தினார். மேலும் அவர்கள் “வீட்டில் சுய தனிமைப்படுத்தலில் இருப்பதாகவும்” குறிப்பிட்டிருந்தார்.

அவரும் அவரது தந்தையும் “மருத்துவர்கள் முடிவு செய்யும் வரை மருத்துவமனையில் இருப்பார்கள்” எனவும் அபிஷேக் பச்சன் தெரிவித்துள்ளார்.

ஞாயிற்றுக்கிழமை தனது பிளாகில், பிரார்த்தனையுடன், தன்னையும் அவரது குடும்ப உறுப்பினர்களையும் கவனித்தமைக்கு நன்றி தெரிவித்தார்.

"எனது நீண்ட அன்பான குடும்பத்திற்கு, உங்கள் அக்கறை, உங்கள் பிரார்த்தனைகள், அபிஷேக், ஐஸ்வர்யா, ஆராத்யா மற்றும் எனக்கான உங்கள் வாழ்த்துகளும், நாங்கள் விரைவாக மீட்கப்பட வேண்டும் என்ற வேண்டுதலும் என்னுள் முடிவில்லாத நன்றியுணர்வை நிரப்பியுள்ளது. உங்கள் அனைவருக்கும் நன்றி” என்று எழுதியிருந்தார்.

இந்தியாவில் 10 பில்லியன் டாலர் முதலீடு செய்ய முடிவு – கூகுள்

ஞாயிற்றுக்கிழமை 1,263 புதிய கோவிட் -19 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், மும்பையின் வழக்கு எண்ணிக்கை 92,720 ஆக உயர்ந்துள்ளதாக பிரஹன் மும்பை மாநகராட்சி (பிஎம்சி) தெரிவித்துள்ளது.

“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”

Aishwarya Rai Bachchan Amitabh Bachchan Abhishek Bachchan
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment