Aranmanai Kili Serial: நடக்க முடியாத தனது கணவர் அர்ஜூனை நடக்க வைக்க நிறைய சிரமங்களை சந்திக்கிறாள் ஜானு. தெய்வங்களை வேண்டி, காடு மலை ஏறி, மூலிகை எடுத்து வந்து அர்ஜூனை கொஞ்சம் கொஞ்சமாக எழுந்து நடக்க வைத்தாள். நாக தெய்வம் கோயிலுக்கு போனபோது என் உயிரை காணிக்கையாகத் தருகிறேன் என்றும் வேண்டிக் கொள்கிறாள்.
தான் வைத்த வேண்டுதலை ஜானு மறந்துவிட்ட சமயத்தில், சித்தர் வந்து மிரட்டுகிறார். ”நீ சொன்னபடி காணிக்கையாக உன் உயிரை தந்தால் மட்டுமே உன் கணவன் நன்றாக எழுந்து நடப்பான்” என ஜானுவை கதி கலங்க வைக்கிறார் சித்தர். ’ஒரு மாதத்தில் வருகிறேன்’ என்று ஜானு சொல்ல, ’உன்னை ஒரு சர்ப்பம் தீண்டும். உன் உடம்பில் அந்த சர்ப்பத்தின் விஷம் ஏறி ஒரு மாதத்துக்குள் உன்னை சாகடிக்கும். அதற்குள் நீ உயிரைத் தருவதாக வாக்கு கொடுத்த அந்த கோயிலுக்கு வந்துவிட வேண்டும்’ எனவும் ஜானுவை எச்சரிக்கிறார் சித்தர்.
இந்த விஷயம் அர்ஜூனுக்கு தெரிய வந்து, நொறுங்கிப் போகிறான். உன்னை காப்பாற்ற நான் போராடுவேன், என தனது மனைவியிடம் சொல்கிறான். ட்ரிப் போவதாக வீட்டில் சொல்லிவிட்டு, இருவரும் கோயிலுக்கு செல்ல ஆயத்தமாகிறார்கள்.
அர்ஜூனின் அம்மா மீனாட்சியிடம், “மேடம் எனக்கு அம்மா பாசம் கிடைக்கவே இல்லை. உங்களை நான் என் அம்மா மாதிரி நினைக்கிறேன்” என ஜானு சொல்ல, ”எனக்கும் பெண் குழந்தை இல்லை ஜானு. எனக்கு வரும் மருமகளை நான் என் பொண்ணா நினைச்சு பாசம் காட்டணும்னு நினைச்சு இருந்தேன். இப்போது தான் உன் மேல எனக்கு அந்த அன்பு வந்து இருக்குன்னு சொல்றாங்க”. ”ஒரே ஒருமுறை உங்களை அத்தைன்னு கூப்பிடட்டுமா” என ஜானு கேட்க, கண்கலங்கிய மீனாட்சி ‘கூப்பிடும்மா’ என்கிறார்.
ஒரு மருமகள் தனது அத்தையை அத்தை என்று கூப்பிடுவதற்கே ஓராண்டுகள் கடந்திருக்கின்றன.