கட்டிய கணவனை சார் என்று அழைக்கும் புதிய பரிமாணத்தை (!?) கொண்டுவந்த சீரியல் அரண்மனை கிளி.
கணவன் அர்ஜுனின் முன்னாள் காதலி சுப்பு லட்சுமி பற்றி விஜயா ஜானுவிடம் கூறியதால், அவருக்கு பொசஸிவ் வருகிறது. சுப்புலட்சுமி, அர்ஜுன் காதல் விஷயம் பற்றி கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக ஜானுவிடம் கதை சொல்லிக் கொண்டு இருந்தார் விஜயா. ஜானுவும் கதையை சுவாரஸ்யமாக கேட்டுக்கொண்டு இருந்தார். ஆடியன்ஸும் தான். லவ் சீன் கொஞ்சம் ஓவராகவே சென்று கொண்டு இருக்க, இப்போதுதான் போதும்க்கா அர்ஜுன் சார் இப்படி எல்லாமா சுப்பு லட்சுமியை காதலிச்சு இருக்காரா? என்னால தாங்கிக்க முடியலேன்னு சொல்லிட்டு போகிறார்.
ஜானு பார்த்தியா உனக்கும் பொஸசிவ் வந்துருச்சு. நீ அர்ஜுனை லவ் பண்றே தானேன்னு விஜயா கேட்க... எனக்கு சுப்பு மேல பொறாமையா இருக்குக்கான்னு சொல்கிறார் ஜானு. இதைத்தாண்டி நானும் எதிர்பார்த்தேன். எத்தனை நாளைக்குத்தான் அர்ஜுன் மேல இருக்கற காதலை மறைச்சுக்கிட்டு வாழ்த்துகிட்டு இருப்பேன்னு தனக்குத்தானே பேசிக்கறார் விஜயா. ஜானுவோ, அர்ஜுன் போட்டோவை எடுத்து கையில் வச்சுக்கிட்டு, என்ன சார் நீங்க சுப்பு லட்சுமியை இவ்ளோ ஆழமா காதலிச்சு இருக்கீங்க. அதை விட உங்களை நான் ரொம்ப ஆழமா காதலிக்கிறேன். அதை ஏன் சார் புரிஞ்சுக்க மாட்டேங்கிறீங்கன்னு சொல்லி அழுகிறார்.
வரும் வாரத்தில் ஜானுவின் காதலை புரிந்து கொள்வாரா அர்ஜுன்?