Azhagu Serial today : சன் டிவியில் ஒளிப்பரப்பாகும் அழகு சீரியல் வாரத்திற்கு வாரம் பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் சென்றுக் கொண்டிருக்கிறது.
Advertisment
அழகம்மையின் குடும்பம் இப்போது சிக்கி சின்னாபின்னமாக சிதறிக் கிடக்கிறது. ரவியை திருமணம் செய்துக் கொள்ள வேண்டும் என நினைக்கிறாள் பூர்ணா. ஆனால் எங்கிருந்தோ வந்த ரவியின் நண்பன் இறந்து விட, சந்தர்ப்ப சூழ்நிலையால், அவனது மனைவி சுதா திருமணம் செய்துக் கொள்கிறான் ரவி. ரவியின் தம்பியை திருமணம் செய்துக் கொள்கிறாள் பூர்ணா. இங்கே வெடித்தது முதல் பிரச்சனை.அப்போதிலிருந்து சுதாவை கண்டாலே பூர்ணாவிற்கு பிடிக்காமல் போகிறது.
அழகு குடும்பத்தில் செல்ல மருமகளாகிறார் சுதா. இதை நினைத்து தினம் தினம் பொங்குகிறார் பூர்ணா. இந்தியாவிலேயே பெரிய வக்கீலான சகுந்தலா தேவி தனது 2 மகள்களையும் குழந்தைகளாக தொலைத்து விடுகிறார். பேர், புகழ், பணம் இருந்தும் குழந்தைகளை தொலைத்து விட்டதால் சந்தோஷம் இல்லாமல் அவர்களை தேடிக் கொண்டிருக்கிறார்.பின்னர் திருமணமான இளைய மகள் பூர்ணாவை சகுந்தலா கண்டுப்பிடிக்க சில நாட்கள் கழித்து சுதா தான் அவரின் மூத்த மகள் என்ற உண்மையும் புலப்படுகிறது.
சொந்த அக்கா என்று தெரிந்த பின்பும், சுதா மீது பூர்ணாவிற்கு வெறுப்பு குறையவில்லை. அதன் வெளிப்பாடு தான் பூர்ணா எடுக்கும் அதிரடி முயற்சிகள்.
kanmani:
எவ்வளவோ பிரச்சனைக்கு அப்புறம் செளந்தர்யாவுக்கும் - கண்ணணுக்கும், ஆகாஷூக்கும் - வளர்மதிக்கும் திருமணம் நடந்து முடிந்தது. கிருஷ்ணவேனியின் தீய எண்ணங்கள் வளர்மதிக்கும் ஒட்டிக்கொண்டது போல் நாளுக்கு நாள் ஆகாஷ் மீது சந்தேக பார்வையை நோக்குகிறார் வளர்ம்தி.
இந்த சந்தேகம் முதல் இரவு வரை போக, கோபத்தில் வளர்மதியை அடித்து விடுகிறார் ஆகாஷ். ஒருபக்கம் கண்ணன் - செளந்தர்யா சந்தோஷமாக இருக்க, மறுபுறம் ஆகாஷூம், வளர்மதியும் அடித்துக் கொள்கிறார்கள். இதெல்லாம் எங்க போய் முடிய போகுதோ.
Advertisment
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
Follow us:
Subscribe to our Newsletter!
Be the first to get exclusive offers and the latest news