Advertisment

பாகுபலி-2 முந்தைய சாதனைகளை முறியடிக்கவில்லை... சொல்கிறார் இயக்குனர் அனில் ஷர்மா

அந்த வசூலை தற்போதைய கால கட்டத்தோடு ஒப்பிட்டு பார்த்தால் ரூ.5,000 கோடிக்கு சமமானது

author-image
Ganesh Raj
புதுப்பிக்கப்பட்டது
New Update
பாகுபலி-2 முந்தைய சாதனைகளை முறியடிக்கவில்லை... சொல்கிறார் இயக்குனர் அனில் ஷர்மா

எஸ் எஸ் ராஜமௌலி இயக்கத்தில் வெளியான பாகுபலி 2 பாக்ஸ் ஆஃபிஸ் பல சாதனைகளை முறியடித்தது. ஆனால், அப்படி ஒன்றும் பாகுபலி பெரிய சாதனை படைக்கவில்லை என்கிறார் இயக்குநர் அனில் ஷர்மா.

Advertisment

அனில் ஷர்மாவா? அது யார் என கேட்பது புரிகிறது. பாலிவுட்டின் பிரபல இயக்குனரான அனில் ஷர்மா இயக்கிய கடார் திரைப்படம் கடந்த 2001-ல் வெளிவந்தது. சன்னி டியோல் மற்றும் அமீஷா படேல் நடித்திருந்த அப்படம் மெஹா ஹிட் அடித்தது.

இந்நிலையில், பாகுபலி 2 திரைப்படமானது தற்பேதைய நிலையில் ரூ.1500 கோடியை கடந்துவிட்டது. ஆனாலும், அந்த திரைப்படம் இதுவரை முந்தைய சாதனையை முறியடிக்கவிலை என்று அனில் ஷர்மா கூறியுள்ளார்.

இது தொடர்பாக அனில் ஷர்மா கூறியதாவது: கடந்த 2001-ம் ஆண்டு வெளியான கடார் (Ek Prem Katha ) திரைப்படம் வர்த்தக ரீதியாக பெரும் சாதனை படைத்தது. அந்த காலகாட்டத்திலேயே ரூ.265 கோடி வசூல் செய்தது. அந்த வசூலை தற்போதைய கால கட்டத்தோடு ஒப்பிட்டு பார்த்தால் ரூ.5,000 கோடிக்கு சமமானது என்றார்.

அது தொடர்பான தொடர்சியான கேள்விகளுக்கு பதில் அளித்த அவர், நல்ல திரைப்படங்கள் வந்தால், சாதனைகள் முறியடிக்கப்படும். பாகுபலி 2 திரைப்படத்தை பொறுத்தவரையில், இதுவரை அந்தப் படம் எந்த சாதனையையும் முறியடிக்கவில்லை. முன்னதாக நான் குறிப்பிட்டது போல, 2001-ம் ஆண்டில் கடார் திரைப்படம் வெளியானபோது அப்போதைய டிக்கெட் விலை ரூ.25 தான். ஆனாலும், அப்போதே கடார் திரைப்படம் ரூ.265 கோடி வசூல் செய்தது. தற்போதைய மதிப்பில் அது கிட்டத்தட்ட ரூ.5,000 கோடியாகும். ஆனால், தற்போது பாகுபலி-2 திரைப்படமோ ரூ.1,500 கோடி மட்டுமே வசூல் செய்துள்ளது. அதன்படி பார்த்தால் பாகுபலி 2 திரைப்படம் முந்தைய சாதனையை முறியடிக்கவில்லை என்று தெரிவித்தார்.

Baahubali 2
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment