கோபி பாக்யா இடையே விவாகரத்து ஆகிவிட்ட நிலையில், இத்தனை வருடங்களாக பாக்யா இந்த வீட்டில் வெறும் சமையல்காரி தான் என்று கோபி கூறியுள்ளது பாக்யாவுக்கு பெரிய அதிர்ச்சியை கொடுத்துள்ளது.
விஜய் டிவியின் பாக்கியலட்சுமி சீரியல் தற்போது விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ள நிலையில், கோபியின் சுயரூபத்தை தெரிந்துகொண்ட பாக்யா கடந்த சில தினங்களுக்கு முன்பு வீட்டை விட்டு வெளியேறிவிட்டார்.இதனால் அடுத்து என்ன நடக்கும் கோபி ராதிகாவை திருமணம் செய்துகொள்வாரா என்ற எதிர்பார்ப்பு அதிகரித்தது.
இதனிடையே கோபி பாக்யா விவாகாரத்து கேஸ் கோர்ட்டுக்கு வந்த நிலையில், தைரியமாக கோர்டுக்கு வந்த பாக்யா கோபியை விவாகரத்து செய்வதாக கூறியதை தொடர்ந்து இருவருக்கும் விவாகரத்து முடிந்துவிட்டது அதனைத் தொடர்ந்து பாக்யாவை திட்டிவிட்டு நேராக ராதிகா வீட்டுக்கு சென்ற கோபி விஷயத்தை சொல்லிவிட்டார்.
அதன்பிறகு வீட்டுக்கு வந்த கோபி விவாகரத்து பற்றி தனது குடும்பத்தாரிடம் சொல்லி, இனிமேல் பாக்யாவுக்கு இந்த வீட்டில் இடமில்லை என்று சொல்லிவிடுகிறார். அப்போது பாக்யா வீட்டுக்கு வருகிறார் அவளிடம் குடும்பத்தினர் அனைவரும் கோபி நல்லவர் போலவும். பாக்யா தப்பு செய்தது போலவும் பேசுகின்றனர்.
இத்தனை பேச்சுக்கும் பாக்யா அமைதியாகவே நிற்கிறார் இதனிடையே தற்போது வெளியாகியுள்ள ப்ரமோவில், பாக்யாவை சராமாரியாக திட்டும் கோபி, பாக்யா இத்தனை நாள் இந்த வீட்டு சமையல்காரிதான் என் மனைவி இல்லை. செல்விக்கும் அவளுக்கும் எந்த வித்தியாசமும் இல்லை என்று சொல்கிறார்.
இதை கேட்டு பாக்யா அதிர்ச்சியடைய அத்துடன் ப்ரமோ முடிவடைகிறது. கடந்த 2 நாட்களாக கோபி சராமாரியாக திட்டியும், பாக்யா இதுவரை ஒரு வார்த்தை கூட அவரை எதிர்த்து பேசவில்லை. முன்பு கணவருக்கு மரியாதை என்ற பெயரில் அவர் எது சொன்னாலும் அமைதியாக இருந்தார். ஆனால் இப்போது எதற்காக அமைதியாக இருக்க வேண்டும் என்பதே ரசிகர்களின் கேள்வியாக உள்ளது. இதற்கு பதில் இயக்குநருக்கே வெளிச்சம்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.