Advertisment

Baakiyalakshmi Serial: பொய் பொய்யாக சொல்லும் கோபி; என்னா நடிப்புடா சாமி!

பாக்கியலட்சுமி சீரியலில் இன்று கோபி தான் மாட்டிக்கொள்ளக் கூடாது என்பதற்காக ராதிகாவிடமும் தனது குடும்பத்தினரிடமும் பொய் பொய்யாக சொல்லி சமாளிக்கும் காட்சியைப் பார்க்கிற யாரும் எப்பா என்னா நடிப்புடா சாமி என்று வியக்கும்படி உள்ளது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Baakiyalakshmi Serial, vijay tv, baakiyalakshmi serial today episode, baakiyalakshmi, விஜய் டிவி, பாக்கியலட்சுமி சீரியல், விஜய் டிவி சீரியல், பாக்யலட்சுமி சீரியல் கதை, பாக்கியலட்சுமி, கோபி, ராதிகா, அமிர்தா, எழிலன், vijay tv serials, tamil tv serials, baakiyalakshmi serial today story, today baakiyalakshmi serial, baakiyalakshmi, gopi, radhika, amirtha, ezhilan

Baakiyalakshmi Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பாக்கியலட்சுமி சீரியலில் இன்றைய எபிசோடில் நடைபெறும் கதையை சுவாரஸ்யத்துடன் இங்கே காணலாம்.

Advertisment

பாக்கியலட்சுமி சீரியலில் இன்று பாக்யா விட்டில் இருந்து மயூவை ராதிகா வீட்டுக்கு அழைத்துச் செல்கிறார்கள். ராதிகாவுடன் வீட்டுக்கு வந்த கோபி, வீட்டில் உள்ளவர்களின் கண்ணில் படாமல் வீட்டுக்கு வெளியே நின்று இருந்து மயூவை அழைத்துச் செல்கிறார்கள். மயு வீட்டுக்கு போனதும், ராதிகா அவளிடம் ஸ்நாக்ஸ் ஏதாவது சாப்பிடுறயா என்று கேட்கிறாள். அதற்கு, மயூ, “இல்லம்மா ஆண்ட்டி எனக்கு ஃபுல்லா கொடுத்துட்டாங்க போதும்…” என்று கூறுகிறாள். அப்போது கோபி வீட்டுக்கு செல்வதற்கு தயாராகி வந்து ராதிகாவை பார்த்து, “அப்ப நான் கிளம்புறேன் ராதிகா” என்று சொல்கிறான். ராதிகாவும் சரி கோபி சென்று பதில் சொல்கிறாள். அப்போது சிறுமி மயூ, “எங்கப்பா வரமாட்டாரு இல்ல, சண்டை போட மாட்டாரு இல்ல” என்று கேட்கிறாள். அதற்கு கோபி, சண்டை போட மாட்டார் அதற்கு எல்லாம் ஏற்பாடு பண்ணிட்டேன் என்று கூறுகிறான். மயூ கோபியிடம் உண்மையாகவா பிராமிஸ் என்று கேட்கிறாள். கோபியும் சண்டை போடமாட்டாரு பிராமிஸ் என்று கூறி மயூவை போய் தூங்கச் சொல்கிறான். மயூவும் புறப்பட்டு செல்கிறாள்.

publive-image

இதையடுத்து, ராதிகாவிடம் பேசும் கோபி, “ராதிகா நீ மயூவ டீச்சர் வீட்ல இருந்து கூட்டிகிட்டு வர போயிருக்கும்போது எனக்கு தெரிஞ்ச ஒரு போலீஸ் ஆஃபீசர் கிட்ட பேசினேன். ராஷேஷ் விஷமாத்தான். நாம் மயூவைக் கூட்டிகிட்டு வர கிளம்பும்போது ராஜேஷ் இங்க வந்து பண்ணது ரொம்ப டூ மச் ராதிகா. நீ வேற ஒரு வீட்டைப் பார்த்துகிட்டு இங்கிருந்து போறவரைக்கும் நீ இந்த வீடல்தானே இருந்தாகனும். இப்போ நானும் விட்டுட்டு போறனு வச்சுக்கோ ராஜேஷ் திரும்பவும் வந்து தொந்தரவு பண்ணக்கூடாது இல்ல அதான்” என்று கூறுகிறான்.

இதற்கு ராதிகா, “நீங்க இருந்தாலும் அவன் அதைத்தானே செய்யறான்” என்று கேட்கிறாள். இதற்கு கோபி, “அது சரிதான். உனக்கு நான் இருக்கேன். அதனால், உங்களுக்கு பெரிய ஆபத்து ஒன்னும் இல்ல. ஆனால், நான் போனக்கு அப்புறமா அவன் வந்தா, அதை நெனச்சாதான் எனக்கு ரொம்ப டிஸ்டர்பிங்கா இருக்குது. அதனாலதான், அந்த போலீஸ் ஆஃபிஸர் கிட்ட பேசி வச்சிருக்கேன். ராஜேஷ் கிட்ட இந்நேரத்துக்கு ஓரளவுக்கு பேசி மிரட்டி வச்சிருப்பாருன்னு நெனைக்கிறேன். இன்னும் கொஞ்ச நாளைக்காவது நீ ராஜேஷ்ஷோட டிஸ்டர்பிங் இல்லாம நீ நிம்மதியா இருக்கலாம். அதற்கு அப்புறம் நீ வேற வீடு பார்த்துட்டு போகலாம்” என்று கூறுகிறான்.

இதைக் கேட்டுகொண்ட ராதிகா, “உங்ககிட்ட நான் சொன்னனா இல்லையானு தெரியல. நான் மறந்துட்டேன்னு நினைக்கிறேன்.” என்று கூறுகிறாள். கோபி ஆர்வத்துடன் என்ன என்று கேட்க, ராதிகா, “டீச்சர் வீட்டுக்கு போயி மயூவ கூப்பிட போன அப்போ, டீச்சர் ஒரு ஐடியா சொன்னாங்க… அவங்க வீட்டு பக்கம் ஏதோ ஒரு வீடு இருக்காம். அங்கே போகமலாம்னு இருக்கேன்.” என்று சொன்னாள்.

publive-image

இதை கேட்டு ஷாக் ஆன கோபி மைண்ட் வாய்ஸில், “இவ்வளவு தூரம் இருக்கும்போதே நான் மாட்டிகிட்டு முழிக்கிறேன்… இதுல பக்கத்துல வேறவா” என்று பேச்சில்லாமல் நிற்கிறான்.

கோபி அமைதியாக இருப்பதைப் பார்த்த ராதிகா என்ன கோபி என்று கேட்கிறாள். கோபி எதற்கு என்று கேட்கிறான். “ஆமாம் கோபி அவங்க வீடு பக்கம் ஏதோ கட்டுன வீடு இருக்காம். அதையே வாங்கிடலாம்னு நினைக்கேறேன்.” என்று கூறுகிறாள். இதைக் கேட்டு தடுமாறும் கோபி “என்ன ராதிகா அதுவேற ஏரியா, அது எங்க இருக்கு… எவ்வளவு தூரத்தில இருந்து அங்க எதுக்கு ஷிஃப்ட் பண்ணனும்” என்று கேட்கிறான்.

“தெரியல கோபி, அவங்க சொன்னாங்க டீச்சர் சொன்னதும் எனக்கு ஓகேவா தோணுச்சு” என்று கூறுகிறாள் ராதிகா. இதனால், டென்ஷன் ஆகும் கோபி, “ராதிகா இதான் உன் கிட்ட இருக்குற பிராப்ளம் யாரு என்ன சொன்னாலும் உடனே அதை நம்பிடறது… டீச்சர் சொன்னாங்கன்றதுக்காக நீ எதுக்கு அந்த ஏரியாவுக்கு ஷிப்ட் ஆகணும்? இதுவே ஒரு நல்ல ஏரியாதான். இங்கேயே இருக்கலாமே. அந்த ஏரியா ரொம்ப தூரம் ஆச்சே. இந்த இடத்திற்கும் அந்த இடத்துக்கும் சம்பந்தமே இல்லையே. இல்லன்னா ஒன்னு பண்ணலாம் வேணும்னா மயூ படிக்கிற ஸ்கூலுக்கு பக்கத்திலேயே இடம் பாத்துக்கலாம்.” என்று கூறி ராதிகாவின் மனதை மாற்ற முயற்சிக்கிறான்.

“இல்ல கோபி நான் டீச்சர் கிட்ட விசாரிக்க சொல்லிட்டேன். நான் பார்க்க வரேன்னு சொல்லிட்டேன். ” என்று ராதிகா மீண்டும் தனது விருப்பத்தை வலியுறுத்துகிறாள். இதைக் கேட்டு கோபி, “நீ ஏன் ராதிகா இப்படி அவசரப் படுற?” என்று கேட்கிறான்.

“உங்களுக்கு சிக்கல் தெரியாதா இந்த வீட்டோட ஓனர் காலி பண்ண சொல்லிட்டாங்க நான் உடனே காலி பண்ணித்தான் ஆகணும்” என்று ராதிகா தனக்கு இருக்கிற நெருக்கடியை கூறுகிறாள்.

publive-image

ராதிகா கூறுவதைக் கேட்ட கோபி, “அதற்கு இன்னும் வேற எங்கனா நல்ல வீடு இருக்கலாம். அதிலிருந்து செலக்ட் பண்ணலாமே… ஏன் டீச்சர் சொன்ன ஏரியாவில் போய் வீடு பாக்கணும்” என்று கூறி மீண்டும் மீண்டும் ராதிகாவின் முடிவை ஆட்சேபனை செய்யும் விதமாக கேட்கிறான்.

“எனக்கு என்னனு தெரியல அந்த வீட்டில் இருந்தப்போ ரொம்ப கம்ஃபர்டபுளா ஃபீல் பண்ண முடிஞ்சது. ஒரு ஃபேமிலியா இருக்காங்க, டீச்சரோட அத்தை, மாமா, பசங்க எல்லாம் இருக்காங்க. அங்கே பிரச்சினை வந்தாலும் அவங்க ஹெல்ப் பண்ணுவாங்கனு நினைக்கிறேன். அதுக்கு தான் சொல்றேன்.” என்று அங்கே வீடு மாற்றிகொண்டு செல்வதற்கான காரணத்தைக் கூறுகிறாள். ஆனால், கோபி, ராதிகா அங்கே வீடு மாற்றிக்கொண்டு சென்றுவிட்டால், ராதிகாவுடன் தொடர்பில் இருப்பது வீட்டுக்கு தெரிந்துவிடும். பாக்யாதான் கோபியின் மனைவி என்பதும் ராதிகாவுக்கும் தெரிந்துவிடும் என்பதால் இருதலைக்கொள்ளி எறும்பாய் தவிக்கிறான்.

எப்படியாவது ராதிகாவின் முடிவை மாற்றிவிட வேண்டும் என்ற நோக்கத்தில் கோபி, “அதுக்காக உடனே ஓகே சொல்லிடுவியா.” என்று கேட்கிறான். ஆனால், ராதிகா, “நீங்க இப்போ டென்ஷன் ஆகாதீங்க… நான் இன்னும் வீடு பார்க்கவே இல்லை. வீடு பார்த்ததுக்கு அப்புறம் முடிவு பண்ணிக்கலாம். இப்போதைக்கு நான் பார்க்க மட்டும் வரேன்னுதான் சொல்லிட்டு வந்திருக்கேன். ஒருவேளை வீடு பிடிக்காம கூட இருக்கலாம். புடிச்சா யோசிக்கலாம் இல்ல.” என்று கூறுகிறாள்.

எப்படி சொன்னாலும் பிடிவாதமாக இருக்கிறாளே என்று, “புடிச்சா இந்த ஏரியாவை விட்டு அங்க போயிடுவியா?” என்று கோபி கேட்கிறான்.

“போறதுதான் எனக்கு சரின்னு தோணுது… இது கூட தான் நான் முன்னே இருந்த வீட்டுக்கு சம்பந்தம் இல்லாத ஏரியா ஏரியால என்ன இருக்கு கோபி? முதல்ல, நான் கொஞ்சம் லேட்டா வந்தாலும் மயூவ அவங்க பார்த்துக்குவாங்க. மயூவும் அவங்க வீட்டுக்குப் போவா… அதுதான் எனக்கு கஃபர்டபுள்னு தோணுது” என்று ராதிகா அங்கே செல்வதால் உள்ள சௌகரியங்களைக் கூறுகிறாள்.

ஆனால், கோபி “எனக்கு என்னவோ இதெல்லாம் சரியா வருமானு தெரியல.” என்று கூறுகிறான்.

தொடர்ந்து பேசும் ராதிகா, “நான் இன்னொரு விஷயமும் யோசித்தேன். அந்த ஏரியலாதான உங்க வீடும் இருக்கு…’ என்று கூற கோபி பேயறைந்தது போல ஷாக் ஆகி நிற்கிறான். பிறகு திக்கித்திக்கி ஆமாம் என்று கூறுகிறான்.

ராதிகா, “எனக்கு ஏதாவது பிரச்னைனா நீங்க உடனே ஓடி வரமாட்டீங்களா?” என்று கேட்கிறாள். ஆனால், கோபி, சமாளிக்கும் விதமாக “தூரமாக இருந்தால் என்ன, நான் ஓடி வந்துடுவேன்” என்று கூறுகிறான். ஆனால், ராதிகா விடுவதாக இல்லை. வீடு பார்க்க சொல்லியிருக்கிறேன். வீடு பிடிக்காமல் கூட போகலாம் என்று கூறி இந்த விவாதம் பிரச்னையாகக்கூடாது என்று முடிவு கட்டுகிறாள்.

publive-image

இதையடுத்து, தனது வீட்டுக்கு கிளம்பி போகிறான். கோபி வீட்டுக்கு போனதும், வாங்கிச் சென்ற ஸ்நாக்ஸ்களை இனியாவிடம் கொடுக்கிறான். இனியா என்னப்பா இது புதுசா ஸ்நாக்ஸ் எல்லாம் வாங்கி வந்திருக்கீங்க. நீங்க எப்பவுமே இப்படி வாங்கிக்னு வந்ததே இல்லையேன்னு சொல்கிறாள். வீட்டில் உள்ள மற்றவர்களும் இதை ஆமோதிக்க, இதைக்கேட்டு அதிர்ந்து போன கோபி, இங்க வீட்ல ஒரு குழந்தை இருந்தா இல்லை அவளுக்குதான். அவ பேர் என்ன என்று எதுவுமே தெரியாத மாதிரி கேட்கிறான். அதற்கு மயூவை அவளுடைய அம்மா வீட்டுக்கு அழைத்துக்கொண்டு போய்விட்டாள் என்று பாக்யா சொல்கிறாள். இது எனக்கு தெரியாது இல்ல என்று கூறி பொய்யாக சொல்கிறான் கோபி. கோபிக்கு உடல்நிலை சரியில்லாதது பற்றி அவனுடை அம்மா விசாரிக்கிறாள். பாக்யாவும் கவலைப்பட்டதைக் கூறுகிறார்.

இதையடுத்து, மருமகள் ஜெனிஃபர், அங்கிள் நாம் எப்போ பெயிண்ட் அடிக்கப் போறோம்” என்று கேட்கிறாள். இதைக் கேட்டு மீண்டும் மாட்டிகிட்டோமா என்று முழிக்கும் கோபி, என்ன சொல்வது என்று தெரியாமல் திகைத்து நிற்கும்போது, அம்மா இவ வேற இவ ஒருத்தி எப்ப எதைக் கேட்கிறாள் பாரு… இப்ப இது ரொம்ப முக்கியமா? என்று கேட்கிறார். ஆனால், மருமகள் ஜெனிஃபர் இல்லை பாட்டி, அங்கிளைப் பார்த்த உடனே பெயிண்ட் அடிக்கிறது டக்னு ஞாபகம் வந்துடுச்சு. அதனால்தான் கேட்டேன்.” என்று சொல்கிறாள்.

சுதாரித்துக்கொண்ட கோபி, “நான் போகறதுக்கு முன்னாடி ஆஃபீஸ் ஸ்டாஃப்புக்கு இன்ஃபார்ம் பண்ணியிருந்தேனே. வந்து பெயிண்டிங் வேலையேல்லாம் பார்த்துக்க சொல்லி… யாரும் வரலையா?” என்று கேட்டு மீண்டும் ஒரு பொய்யை சொல்லி சமாளிக்கிறான்.

publive-image

பாக்யாவும் ஜெனிஃபரும் இல்லை என்று சொல்கிறார்கள். இதையடுத்து பாக்யா, அவ்ளோ அவசரமா பெயிண்டிங் பண்ணப் போறோம்னு சொன்னிங்க ஏதோ கலர்லாம் பார்க்கனும்னு சொன்னிங்க. ஆனால், வரவே இல்லைங்க என்று கேட்கிறாள். இதற்கு கோபி, “பாக்யா உனக்குதான் நடந்தது எல்லாம் தெரியும் இல்லை. அவங்க ஒரு ஆஃபர் கொடுத்தாங்க. சரினு நானும் வந்து பெயிண்ட் பண்ண சொன்னேன். திடீர்னு கலர் ஏதாவது ச்சூஸ் பண்ண சொன்னாங்க. நானும் எனக்கு பெயிண்ட் கேட்லாக் அனுப்புங்கனு சொன்னேன். ஆனால், அவங்கதான் அனுப்பல. அதுக்கு நான் என்ன பண்ண முடியும்?” என்று அப்பாவி போல கேட்கிறான்.

இதையடுத்து, ஜெனிஃபர், “அங்கிள் நாம் போட்டோ எல்லாம் கழட்டி வெச்சுட்டோம் இல்ல. அதனாலதான் கேட்டேன்.” என்று கூறுகிறாள். என்ன சொல்வது என்று தெரியாமல் கோபி, “அதேல்லாம் ஒரு விஷயமா நாம பெயிண்ட் அடித்ததுக்கு அப்புறம் பார்க்கலாம்.” என்று கூறுகிறான்.

தொடர்ந்து பேசும் ஜெனிஃபர், “அயோ அங்கிள் நான் அதை சொல்லல. நாம கழட்டி வச்ச போட்டோவ எல்லாம் அந்த பொன்னு மயூ எடுத்துட்டா.” என்றதுமே கோபி மயூ அவனை பார்த்துவிட்டிருப்பாளோ என்று முழிக்கிறான். “உடஞ்சு போயிடுமோன்னு எனக்கு பயமாயிடுச்சு…” என்று ஜெனிஃபர் கூறுகிறாள். எங்கே மயூ தன்னை போட்டோவில் பார்த்துவிட்டிருப்பாளோ என்ற பதற்றத்தில், “மயூ அந்த போட்டோவை எல்லாம் பார்த்துவிட்டாளா?” என்று கேட்டு டென்ஷன் ஆகிறான்.

பாட்டியும் அவ எதுக்கு நம்ம போட்டோ எடுத்தாள் என்று கேட்க, ஜெனிஃபர் “இல்லை பாட்டி விளையாடுவதற்கு பால் ஒன்னு காணம்னு தேடிட்டு இருந்தோம். அப்போ போட்டோ எல்லா எடுத்து வச்சு நான் தான் தேடிட்டு இருந்தேன். அப்போ அந்த பாப்பா போட்டோவில இருக்கிறவங்க எல்லாம் யார் யார்னு கேட்டுகிட்டு இருந்தா. பெயிண்ட் அடிச்சாச்சுனா சீக்கிரம் அதையெல்லாம் மாட்டிடலாம் இல்லை. அதுக்குதான் பாட்டி சொன்னேன்” என்று கூறுகிறாள்.

இதைகேட்டு பதற்றமாகும் கோபி, “நோ நோ அந்த போட்டோ எல்லாம் இருக்கிற இடத்துலயே இருக்கட்டும். நாளைக்கு பெயிண்ட் அடிக்கிறதுக்கு கலர் கேட்டலாக் அனுப்பிடுவாங்கனு நினைக்கிறேன். அதுக்கு அப்புறம் நாம் ஏதாவது ஒரு முடிவுக்கு வரலாம்” என்று கூறுகிறான்.

ஒருவழியாக கோபி, மயூ தனது போட்டோவை பார்க்கவில்லை என்று ஜெனிஃபரிடம் இருந்து தெரிந்துகொண்டு நிம்மதி பெருமூச்சு விடுகிறான் கோபி.

publive-image

இதையடுத்து, பாக்யா, ராதிகாவுக்கு இங்கே விடு பார்த்திருப்பதை சொல்கிறாள். இதற்கு கோபி கடுமையாக எதிர்ப்பு தெரிவிக்கிறான். ஆனால், பாக்யா, தான் கஷ்டப்பட்டபோது அவர்கள்தான் உதவினார்கள். அதனால், அவர்களுக்கு ஒரு சின்ன உதவி என்று சொல்கிறாள். ஆனால், கோபி, இந்த வீடு பார்க்கிறது ரியல் எஸ்டேட் எல்லாம் ரிக்ஸ்கானது. டாக்குமெண்ட்களில் பிரச்னை இருக்கலாம் என்று கூறுகிறான். பிறகு, பாக்யா, அவங்களை சும்மா வீடு பார்க்கத்தான் வரச் சொல்லியிருக்கிறேன். டாக்குமெண்ட் உங்களிடம்தான் கொடுத்து செக் பண்ண சொல்வேன் என்று கூறுகிறாள். இதைக் கேட்ட கோபி, எங்கிட்டதான அப்ப ஓகே” என்று சொல்கிறான்.

பிறகு கவலையுடன் இருக்கும் எழிலனிடம் என்ன வருத்தம் என்று கேட்கிறாள் பாக்யா. ஒன்றுமில்லை என்று கூறி மறைக்கிறான். அமிர்தா ஏற்கெனவே திருமணமானவள் என்று அமிர்தாவின் மாமனார் வந்து சொன்னதை நினைத்து கவலையுடன் இருக்கிறான்.

இதையடுத்து, அமிர்தா வீட்டுக்கு வந்து அவளுடைய மாமியாரிடம் அம்மா என்று கேட்கிறாள். ஆனால், அவளுடைய மாமியார் நீ மாறிவிட்டாய் என்று கூறுகிறார். ஆனால், அமிர்தா தான் மாறவில்லை என்று கூறுகிறாள். நீ மத்த பொண்ணுங்க மாறி இருக்கலாம்னு ஆசைப்படலாம். ஆனால், நீ அப்படி இருக்க முடியாது. உன் தலையெழுத்து அப்படி நீ வாங்கிட்டு வந்த வரம் அப்படி என்று கூறுகிறார். அப்போது உள்ளே வரும் அமிர்தாவின் மாமனார். தான் அமிர்தா அடிக்கடி பேசுகிற பையனை சந்தித்துவிட்டு வந்ததைக் கூறுகிறார். மேலும், அமிர்தா ஏற்கனவே கல்யாணம் ஆனவள் என்பதை சொல்லிவிட்டதாகக் கூறுகிறார். இதைக்கேட்டு அமிர்தா வருத்தமடைகிறாள். இத்துடன் இன்றைய எபிசோடு நிறைவடைகிறது.

இன்றைய எபிசோடில், கோபி தான் மாட்டிக்கொள்ளக் கூடாது என்பதற்காக ராதிகாவிடம் தனது குடும்பத்தினரிடமும் பொய் பொய்யாக சொல்லி சமாளிக்கும் காட்சியைப் பார்க்கிற யாரும் எப்பா என்னா நடிப்புடா சாமி என்று சொல்லவைக்கிறது.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"

Vijay Tv Baakiyalakshmi Serial
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment