Advertisment

Baakiyalakshmi Serial: பொய் சொல்றவன் மாட்டிக்குவான்; கோபி மீது சந்தேகப்படும் ராதிகா

வக்கில் டாக்குமெண்ட் எல்லாம் சரியா இருக்கு என்று சொன்னதைக் கேட்டு ராதிகா குழப்பமடைகிறாள். பிறகு ஏன் கோபியோட அட்வகேட் டாக்குமெண்ட்ல பிரச்சனை இருக்குன்னு சொல்லனும் என்று குழப்பத்துடன் யோசிக்கிறாள்.

author-image
WebDesk
New Update
baakiyalakshmi serial, baakiyalakshmi, baakilakshmi serila today episode, பாக்கியலட்சுமி சீரியல், பாக்கியலட்சுமி சீரியல் இன்றைய எபிசோடு, கோபி மீது ராதிகாவுக்கு சந்தேகம், சமைக்கப் போன இடத்தில் இடையூறு செய்யும் சாந்தி, baakiyalakshmi serial update, radhika, shanthi, gopi, bakya, jeniffer, selvi

விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பாக்கியலட்சுமி சீரியலில் இன்றைய எபிசோடில் நடைபெறும் நிகழ்வுகளை சுவாரஸ்யம் குறையாமல் இங்கே காணலாம்.

Advertisment

பாக்கியலட்சுமி சீரியலில் பாக்யா, ஜெனிஃபர், செல்வி 3 பேரும் இனியாவின் பள்ளியில் ஒரு சமையல் ஆர்டர் கிடைத்து சமைக்கப் போயிருக்கிறார்கள். சமைக்கப் போன இடத்தில் அங்கே ஏற்கெனவே சமைத்துக்கொண்டிருந்த சாந்திக்கு ஆர்டர் கிடைக்காததால், பாக்யாவுக்கு ஒத்துழைப்பு தர மறுக்கிறாள். ஆனாலும், எப்படியாவது நல்லா சமைத்துவிட வேண்டும் என்று பாக்யா பொறுமையாக இருக்கிறாள்.

பாக்யா, ஜெனிஃபர், செல்வி 3 பேரும் சமையலுக்கு தேவையான பொருட்களின் லிஸ்ட் எழுதி அதை சாந்தியிடம் கொடுக்கிறார்கள். அந்த லிஸ்ட்டைப் பார்த்த சாந்தி, 200 பேருக்கு இவ்வளவு பொருளா? என கேட்கிறாள். இவ்வளவு எல்லாம் கொடுக்க முடியாது என்று லிஸ்ட்டில் எழுதிய பொருட்களின் அளவைவிட குறைத்து தான் கொடுக்க முடியும் என சொல்கிறாள்.

இதற்கு பாக்யா, “பொருட்களை குறைத்து கொடுத்தால், அதெப்படி பத்தும் 200 பேருக்கு மேல சமைக்கணும்” என்று சொல்கிறாள். அதற்கு சாந்தி, “நானும் இங்க சமைச்சவ தான். சாயந்தர நேரம் யாரும் இவ்வளவு சாப்பிட மாட்டாங்க. கொடுக்குற பொருளை வைச்சு சமைங்க” என்று சொல்லிவிட்டு செல்வியை கூப்பிட்டு பொருட்களை கொடுக்கிறாள்.

செல்வி 2 பாக்ஸ்களை தூக்க முடியாமல் தூக்கி வருகிறாள். பாக்யா அந்த பொருட்களை வாங்கி கீழே வைக்கிறாள். சொல்லியிருந்தால் நானும் உதவிக்கு வந்திருப்பேன் இல்ல என்று பாக்யா கூறுகிறாள். அதற்கு செல்வி பரவாயில்லை என்று கூறிவிட்டு,

நாம் கேட்ட பொருள்களில் பாதி பொருள் தான் இருக்குது” என சொல்கிறாள்.

அப்போது சாந்தியும் அங்கே வருகிறாள். பாக்யா சாந்தியிடம், “இப்படி பாதி பாதி பொருளாய் கொடுத்தா எப்படி சமைக்க முடியும்” என்று கேட்கிறாள்.

அதற்கு சாந்தி மனசாட்சியே இல்லாமல், “முடிஞ்சா சமைங்க… இல்லன்னா கிளம்பி போங்க… எங்கிருந்தோ வந்து என் உயிரை எடுக்காதீங்க” என சிலுப்பிவிட்டு செல்கிறாள்.

பாக்யா, பிரின்ஸிபாலிடம் என்ன சமைக்க வேண்டும் என கேட்டதற்கு அவரும் அசைவம் சமைக்க கூறிவிட்டார். ஆனால், சாந்தி சிக்கன் வாங்குவதற்கும் பணத்தையும் தரவில்லை. கேட்ட பொருட்களிலும் பாதிதான் கொடுத்திருக்கிறாள். இதனால், என்ன செய்வது என்று புரியாமல் நிற்கும் பாக்யா, தன்னிடம் உள்ள பணத்தை வைத்து சிக்கன் வாங்கி சமைக்கலாம் என சொல்கிறாள்.

அப்போது அந்த வழியாக வந்த பிரின்சிபால் கிட்ட எல்லாத்தையும் சொல்லிடலாம் என ஜெனிஃபர் சொல்கிறாள். என்ன நடக்கிது என்று பாக்யா சொல்வதற்கு முன்பே, அங்கே வரும் சாந்தி, “பொருள் எல்லாம் கொடுத்தாச்சு மேடம், ஆனால் இவங்க இன்னும் சமையலை ஆரம்பிக்காம இருக்காங்க. நம்மகிட்ட இல்லாத பொருளையும் வெளியே வாங்கி கொடுத்தாச்சு” என சொல்கிறாள்.

இதைக்கேட்டு லேசாக கலக்கம் அடையும் பிரின்சிபால், “உங்களை நம்பி பெரிய ஆர்டர் கொடுத்து இருக்கேன். நல்லா பண்ணிடுங்க… முதல்முறையா யாருக்கும் இவ்வளவு பெரிய ஆர்டர் கொடுத்ததில்லை… நல்லா பண்ணிடுங்க” என சொல்லிவிட்டு செல்கிறாள்.

அடுத்த காட்சியில், கோபி ராதிகாவை பார்க்க அவளுடைய வீட்டுக்கு வருகிறான். அப்போது, ராதிகா கோபியிடம், “நீங்க டாக்குமெண்ட் பற்றி சொன்னது அவ்வளவு ஷாக்கிங்கா இருந்துச்சு” என்று சொல்கிறாள். வீட்டுக்கு கொடுத்த அட்வான்ஸ் பணம் பற்றி பேசும் போது எப்படியாவது பேசி வாங்கிவிடு என கோபி சொல்கிறான்.

அதற்கு ராதிகா, “டீச்சர் வீட்டு பக்கத்துல இருந்தா நல்லாருக்கும்ன்னு நினைச்சேன்” என்று சொல்கிறாள். இதைக் கேட்ட கோபிர், “நீ தனியா இருக்கன்னு மட்டும் நினைக்காத… உனக்காக நான் எப்பவும் இருப்பேன்” என சொல்கிறான். கோபியின் வார்த்தைகளைக் கேட்ட ராதிகா, “நீங்களே வீடு பாருங்க” என சொல்கிறாள்.

இதனிடையே, பாக்யா சமைத்து கொண்டிருக்கும்போது எழில் அவளுக்கு போன் பண்ணுகிறான். பாக்யா எழிலிடம் பள்ளியில் சமைக்க வந்த இடத்தில் சாந்தி தேவையான பொருட்களைத் தராமல் ஒத்துழைக்காததைப் பற்றியும் அங்கே நடக்கிற நிகழ்வுகள் பற்றியும் சொல்கிறாள். இதைக் கேட்ட எழில் பிரின்சிபாலிடம் இதுப்பற்றி சொல்லுங்கள் என்று கூறுகிறான். இதற்கு பாக்யா, “நான் சொல்லலாம்னு நினைச்சேன் ஆனால், இனியா வேணாம்ன்னு சொல்றாடா. சின்னபிள்ளை மாதிரி, இதுக்கெல்லாம் கம்பெளயிண்ட் கொடுக்க வேணாம்ன்னு சொல்றாடா” என கூறுகிறாள்.

பாக்யா சொன்னதைக் கேட்ட எழில் அம்மாவுக்கு தைரியம் அளிக்கும் விதமாக, “அம்மா வீட்ல இருக்குற மாதிரி வெளியவும் இருக்காதாம்மா. நீ கேட்ட பொருளை மட்டும் அவர் கொடுக்கல. பிடிச்சு கன்னாபின்னான்னு கத்தி விடு. அதுக்கப்புறம் பாரு உன் வேலை சூப்பரா நடக்கும் சில இடங்களில் சண்டை போட்டாதாம்மா வேலை நடக்கும். உனக்கு கோபம் வரனும்னா அப்பா முகத்தை நினைச்சுக்க… அப்போ கோபம் வரும்” என்று கூறுகிறான். எழில் வார்த்தைகளில் தைரியம் பெற்ற பாக்யா சரி என சொல்கிறாள். இதையடுத்து, எழில், “வேற ஏதாவது பிராப்ளம்னா என்னை கூப்பிடும்மா” என சொல்லிவிட்டு போனை வைக்கிறான்.

எழில் போன் வைத்ததும், ராதிகாவிடம் இருந்து பாக்யாவுக்கு போன் வருகிறது. அப்போது, “அட்வான்ஸ் வாங்கிய ஓனர் தங்களோட வீட்டு டாக்குமெண்ட் தப்பா இருக்க சான்ஸே இல்லன்னு சொல்லிட்டு கோபப்பட்டு போயிட்டாங்க…” என்று பாக்யா ராதிகாவிடம் சொல்கிறாள்.

அதற்கு ராதிகா, “நான் என் பிரெண்ட் கிட்ட காமிச்சேன். அவர் நெறைய பிராப்ளம் இருக்குன்னு சொன்னாரு” என்கிறாள். இதற்கு பாக்யா, “நீங்க கவலைப்படாதீங்க நான் அட்வான்ஸ் பணத்தை வாங்கி கொடுத்திடுறேன்” என சொல்லிவிட்டு போனை வைக்கிறாள். பாக்யா சொன்னதைக் கேட்டு குழப்பம் அடையும் ராதிகா, கோபி டாக்குமெண்ட்டில் பிரச்னை இருக்கிறது என்று சொன்னதில் சந்தேகம் வருகிற்து. உடனடியாக, ராதிகா தனது வக்கீலுக்கு போன் பண்ணி டாக்குமெண்ட் எல்லாம் கரெக்ட்டா இருக்கா என்று கேட்கிறாள். அதற்கு வக்கிலும் “டாக்குமெண்ட் எல்லாமே கரெக்ட்டா இருக்கு என சொல்கிறார். வக்கில் சொன்னதைக் கேட்டு ராதிகா குழப்பமடைகிறாள். பிறகு ஏன் கோபியோட அட்வகேட் டாக்குமெண்ட்ல பிரச்சனை இருக்குன்னு சொல்லனும் என்று குழப்பத்துடன் யோசிக்கிறாள். இத்துடன் பாக்கியலட்சுமி சீரியலின் இன்றைய எபிசோட் நிறைவடைகிறது.

பாக்கியலட்சுமி சீரியலின் நாளைய எபிசோடில் சமைக்கப் போன இடத்தில் கட்டையக் கொடுத்த சாந்தியை பாக்யா எப்படி தெறிக்க விடுகிறாள் என்று பாருங்கள்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment