Advertisment

Vijay TV Serial: அஞ்சலியின் வயிற்றில் இருக்கும் குழந்தையை அழிக்க நினைக்கும் வெண்பா! திகில் திட்டம்!

இந்த மாத்திரை அர்ச்சனாவுக்கு குழந்தையே உருவாகாம இருக்கிறதுக்கு… இந்த மாத்திரை அஞ்சலிக்கு உருவான குழந்தைய இல்லாம பண்றதுக்கு கடைசியில என்ன இப்படி ஒரு ஸ்பெஷலிஸ்ட்டா ஆக்கிட்டீங்களேடா… என்று வெண்பா சிரிக்கிறாள்.

author-image
WebDesk
New Update
Vijay TV Serial: அஞ்சலியின் வயிற்றில் இருக்கும் குழந்தையை அழிக்க நினைக்கும் வெண்பா! திகில் திட்டம்!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாரதி கண்ணம்மா - ராஜா ராணி 2 சீரியல்களின் மெகா சங்கமம் இன்றைய எபிசோடில் நடக்கும் நிகழ்வுகளை சுவாரஸ்யம் குறையாமல் இங்கே காணலாம்.

Advertisment

பாரதி கண்ணம்மா குடும்பத்தில் வேணு, அகில், அஞ்சலியும் ராஜா ராணி 2 குடும்பத்தில் சரவணன், அவனுடைய அப்பா, செந்தில், அவனுடைய மனைவி அர்ச்சனா மற்றும் பார்வதி ஆகியோர் ரிசார்ட்டில் தங்கி இருக்கிறார்கள். ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளதால் அங்கேயே இருக்கிறார்கள். அஞ்சலிக்கு ஒரு டாக்டர் இருந்தால் நல்லா இருக்கும் என்று கூறியதால் வெண்பாவும் சாந்தியும் ரிசார்ட்டுக்கு வந்திருக்கிறார்கள்.

அகிலும் அஞ்சலியும் ரிசார்ட்டில் கடற்கரையோரம் ரொமாண்டிக்காக பேசிக்கொண்டிருக்கிறார்கள். அகில் அஞ்சலியிடம் நீ ஏன் அப்படி சொன்ன ஐலவ்யூனு சொன்னதே இல்லைனு. நிறைய முறை ஐலவ்யூ சொல்லியிருக்க இல்ல என்று கேட்கிறேன். அதற்கு அஞ்சலி, ஐலவ்யூ சொல்றதுனா மனதின் ஆழத்தில் இருந்து சொல்ல வேண்டும். அப்படி சொல்வதில் காதலின் வாசம் அடிக்கும் என்று சொல்கிறாள். இருவரும் சந்தோஷமாக பேசிக்கொண்டிருக்கிறார்கள். அப்போது, அஞ்சலி, “பாரதி மாமா மட்டும் வெண்பாவை ஏற்றுக்கொண்டு வாழ ஆரம்பித்துவிட்டால், நம்ம குடும்பத்தில் சந்தோஷம் முழுமையாக இருக்கும்” என்று கூறுகிறாள். அதற்கு, அவன் நினைத்தாலும் இந்த வெண்பா விட மாட்டாள். எப்போ அந்த வெண்பாவுடைய ஃபிரெண்ட்ஷிப்ப கட் பண்றானோ அப்பதான் அவ உருப்படுவான் என்று கூறுகிறான்.

அதற்கு அஞ்சலி, அவர் எங்க கட் பண்ணி விடறது… அந்த வெண்பா கட்டின பொண்டாட்டி மாதிரி உருகி உருகி பேசுறத கேட்டிங்க இல்ல என்ரு கூறுகிறாள். இதைக்கேட்ட அகில், “அதான் அவன் கட்ற அளவுக்கு தாலியோட போயிட்டானே… அன்னைக்கு நீதான் விஷயம் தெரிஞ்சு போய் தடுத்து நிறுத்துன… இல்லனா இந்நேரத்துக்கு வெண்பா அவன் பொண்டாட்டியா இருப்பா.. எனக்கு வெண்பாவ பார்த்தாலே டென்ஷனா இருக்கு. இத்தனை பேர் மத்தியில் எவ்வளவு கேவலமா பேசுறா பாரு” என்று கூறுகிறான்.

வெண்பா பேசும்போது அவளுடைய கண்ணில் நயவஞ்சகம் தெரிந்தது என்று அஞ்சலி கூறுகிறாள். அவ வெண்டும் என்றே வெறுப்பேத்தனும்னுதான் பேசுகிறாள். நல்ல வேளை பாரதி வரவில்லை. வந்திருந்தான், இன்னும் கொடுமையா இருந்திருக்கும்.” என்று அகில் கூறுகிறான்.

அஞ்சலி, “இவ்வளவு நேரம் பாரதி இருந்தா நல்லா இருக்கும்னு பேசுனோம். இப்போ பாரதி இல்லனா நல்லா இருக்கும்னு பேசுற மாதிரி ஆயிடுச்சு” என்று கூறுகிறாள்.

இதையடுத்து, அகில் பாரதிக்கு போன் பண்ணுகிறான். இந்த ஊர் உலகத்துல வேற டாக்டரே உனக்கு கிடைக்கலயா? இந்த வெண்பாவால ஒரே பிரச்னை என்று கூறுகிறான். அதற்கு பாரதி, என்ன பிரச்னை சொல்லுடா நான் வெண்பா கிட்ட பேசுறேன். அந்த டைம்ல வேற டாக்டர் கிடைக்கல அதான் வெண்பாவ அனுப்பி வச்சேன் என்று கூறுகிறான்.

வெண்பா பல பேருக்கு மத்தியில் பாரதியை பிடிக்கும் என்று கூறியது தனக்கும் அப்பாவுக்கும் தர்ம சங்கடமா ஆகிப்போச்சு ஒரு லவ்வர சொல்ற மாதிரி சொல்றாடா என்று கூறுகிறான். அவ என் பெஸ்ட் ஃபிரெண்ட் இதுக்கு போய் சண்டை போடற என்று பாரதி கூறுகிறான். வெண்பாவ பாரத்தாலே புடிக்கல என்று அகில் கூற, இதைக்கேட்டு கோபமாகும் பாரதி, காரணமே இல்லாம வெறுப்போட சண்டை போடாதடா… அவ சொல்றடு என்ன.. நான் சொல்றேன். இந்த உலகத்துலயே எனக்கு ரொம்ப புடிச்சது வெண்பாதான்… இப்ப என்னடா பண்ணப் போற, எங்கூட பேசாம இருக்கப் போறயா… அவ எதார்த்தமா சொல்லியிருக்கா… அதை போய் பெரிசு பண்ணிக்கினு… நான் சொன்னேங்கிறதுக்காக அவ அங்கே இருக்கா… இப்ப நான் ஒரு வார்த்தை சொன்னா அவ திரும்பி வந்துடுவா. ஆனால் ஏன் சொல்லாம இருக்கேன். அஞ்சலில் இப்ப கர்ப்பமா இருக்கா…. நம்முடைய ரத்த வாரிசு இப்போ அஞ்சலில் வயித்துல இருக்கு… பத்திரமா பாத்துக்கனும்” என்று கூறுகிறான்.

இதைக் கேட்டு ஷாக் ஆகும் அகில், அப்போ ஹேமா என்று கேட்கிறான். அதற்கு பாரதி, நான் அவளை எப்போதும் விட்டுத்தர மாட்டேன். ஆனால், நான் சொல்றது பயாலாஜிக்கலா சொல்றேன். அஞ்சலிக்கு பிறக்கப்போறது நம்ம ரத்த வாரிசு பத்திரமா பாத்துக்கனும். இப்போ லாக்டவுன் வேற… ஏதாவது ஒன்னுனா டாக்டர் இல்லைனா எப்படி அதான் வெண்பாவை அனுப்பி இருக்கிறேன்” என்று கூறிவிட்டு போனை வைத்துவிடுகிறான். பாரதி சொன்னதைக் கேட்டு கடுப்பாகும் அகில் கோபத்தில் நொந்துபோகிறான்.

அடுத்த காட்சியில், செந்திலும் அர்ச்சனாவும் ரிசார்ட்டில் பேசிக்கொண்டிருக்கிறார்கள். அப்போது, அர்ச்சனாவிடம் செந்தில் நேத்து டான்ஸ் ஆடியதைப் பற்றியும் நேற்றைய விளையாட்டில் உங்க மனசுல இருக்கிற ரகசிய உண்மையை சொல்லச் சொன்னால் எதை சொல்லி இருப்ப? இப்போ நான் கேட்கிறேன் என்ன சொல்லுவ என்று கேட்கிறான். அதற்கு, உண்மையை சொல்றதா என்று ஷாக் ஆகும் அர்ச்சனா, உண்மையை சொல்லனும்னா, உங்க அம்மா மேல போலீஸ்ல கம்ப்ளெய்ண்ட் கொடுத்தது நான்தான் என் தங்கச்சிய வச்சு அந்த கம்ப்ளெயிண்ட்ட இங்லிஷ்ல எழுத வச்சேன். ஆனால், எல்லோரும் இப்போது வரைக்கும் அந்த கம்ப்ளெயிண்ட்ட சந்தியா எழுதினதா நினைச்சுகிட்டு இருக்கீங்க…” என்று மனதுக்குள் நினைக்கிறாள். பிறகு, என மனசுல ரகசியம் எதுவும் இல்லைங்க.. உங்க கிட்ட வெளிப்படையாதான இருக்கேன் என்று கூறுகிறாள். இதையடுத்து, செந்தில் உனக்கு உடம்பு அசதியா இருக்குனு சொன்னியே சரியாகிடுச்சா என்று கேட்கிறாள். அதற்கு அர்ச்சனா இதுக்கு மேல பொய் சொல்ல முடியாது என்று சரியாகி விட்டது என்று கூறுகிறான். இதைக்கேட்டு சந்தோஷமடையும் செந்தில், அப்போ நேத்து ராத்திரி விட்ட கச்சேரிய இன்னைக்கு வச்சுக்கலாமா என்று கேட்கிறான். இப்போதைக்கு குழந்தை வேண்டாம் என்று இருக்கும் அர்ச்சனா, அய்யயோ என்ன பண்றது எத்தனை நாளுக்குதான் சமாளிக்கிறது? இதுக்கு ஒருவழிதான் இருக்கு… வெண்பா டாக்டர்னு சொன்னாங்க. அவங்க கிட்ட உதவி கேட்கனும்” என்று முடிவு செய்கிறாள்.

அடுத்த காட்சியில், சந்தியா, ரிசார்ட்டில் விளையாட்டின்போது சரவணன் பேசிய வீடியோவை பார்த்துக்கொண்டிருக்கிறாள். அப்போது சரவணன் போன் பண்ணுகிறான். அப்போது ரிசார்ட்டில் ஆடிய விளையாட்டைப் பற்றி சொல்கிறான். அங்கே தான் பேசியதைப் பற்றி கூறுகிறான். அதற்கு சந்தியா, விளையாட்டில் சரவணன் பேசியது தெரியும் என்று கூறுகிறான். மாமா வீடியோ அனுப்பியதை கூறுகிறாள். நான் பேசியது எப்படி இருந்தது என்று கேட்கிறான். அதற்கு, சந்தியா, “நான் தான் பார்த்தேன் அதில் என் மேல உங்களுக்கு காதலே இல்லையே என்று மனதுக்குள் நினைத்துக்கொள்கிறாள். மேலும், உங்களிடம் பேசும்போது தடுமாறுவதாகக் கூறும் சரவணனிடம் அப்படினா, நீங்க பேச நினைப்பதை எழுதி வைத்து பேசிவிடுங்கள் என்று கூறுகிறாள். இது சரியாக இருக்கும் என்று கூறுகிறாள். இதுசரிதான் என்று சரவணன் கூறியதும் சந்தியா போனை வைக்கிறாள். சரவணன் தனியாக காதல் பாடல் பாடுகிறான் என்ன எழுதலாம் என்று யோசிக்கிறான்.

அடுத்த காட்சியில், வெண்பாவும் சாந்தியும் பேசிக்கொண்டிருக்கிறாள். ஏதாவது அதிரடியாக நடக்கும்னு பார்த்தால் ஒன்னும் நடக்கல என்று சாந்தி கேட்கிறாள். அதற்கு வெண்பா எடுத்தவுடனே டாப் கியர்ல போகமுடியாது. படிப்படியாகத்தான் போகனும் என்கிறாள். சாந்தி, “மேடம், அந்த அகில சும்மா விடாதீங்க… நீங்க பாரதி சார புடிக்கும்னு சொன்னபா” அவன் கோவமா பார்த்தான் என்று கூறுகிறாள் . அதற்கு வெண்பா, என்ன புடிக்கும்னு கேட்டா சாமி புடிக்கும் அம்மா அப்பா புடிக்கும்னு சொல்வேன்னு நினைச்சிருப்பாங்க… நான் பாரதிய புடிக்கும்னு சொல்லிட்டேன். நான் மட்டும் அந்த குடும்பத்துக்கு மருமகளா போனால் அவங்களை அடிச்சு துறத்திடுவேன். நா கட்ண பொண்டாட்டி இல்லடா கட்டிக்க போற பொண்டாட்டி…. அவனுக்கு கொஞ்சம் கோபம் இருக்கத்தான் செய்யும்… அவங்க குடும்பத்தை கெடுத்திருக்கேன்… அவங்க அண்ணன் வாழ்க்கைய நாசமாக்கியிருக்கேன்” விடு என்று கூறுகிறாள். அதோடு, அந்த அஞ்சலிக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று சாந்தியிடம் ஒரு மருந்து சீட்டு எழுதி தருகிறாள். அப்போது, அங்கே வரும் அர்ச்சனா, வெண்பா அழகா இருப்பதாக் கூறி அசடு வழிகிறாள். இதைப் புரிந்துகொண்ட வெண்பா, உங்களுக்கு என்ன வேண்டும் என கேட்க, நான் இப்போது குழந்தை வேண்டாம்னு இருக்கேன். என் ஹஸ்பண்ட் கூட வந்திருக்கார். நெருங்கி வறார்.. நீங்க டாக்டர் மாத்திரை எழுதி கொடுத்தால் நல்லா இருக்கும் என்று கேட்கிறாள். சரி என்று வெண்பா ஒரு சீட் எழுதி அதையும் சாந்தியிடம் கொடுத்து வாங்கி வரச் சொல்கிறாள். அந்த நேரம் பார்த்து அங்கே பார்வதி வருகிறாள். எங்கே வெண்பா மாத்திரை கேட்டதை பார்வதியிடம் சொல்லிவிடுவாளோ என்று அவளை அர்ச்சனா அழைத்துச் செல்கிறாள்.

அடுத்த காட்சியில், சௌந்தர்யா வேணுவுக்கு போன் பண்ணுகிறார். மாத்திரை போட்டதால் அசதியாக இருந்தது அதான் பேச முடியவில்லை என்று சௌந்தர்யா கூறுகிறார். வேணு, அங்கே ரிசார்ட்டில் வெண்பா வந்திருப்பதைப் பற்றி சௌந்தர்யாவிடம் கூறுகிறார். இதைக்கேட்டு சௌந்தர்யா ஷாக் ஆகிறார். பிறகு, அஞ்சலி டாக்டர் வேண்டும் என கேட்டதையும் பாரதி வெண்பாவை அனுப்பி வைத்ததைக் கூறுகிறார். இதைக் கேட்டு சௌந்தர்யா, இந்த பாரதி இருக்கிறான், வெண்பா பிரச்னை பண்ணாம இருக்கிறாளா என்று கேட்கிறான்.

அதற்கு, வேணு, “இப்ப வரைக்கும் பிரச்னை இல்லை. ஆனால், அகில்தான் வெண்பாவிடம் முறைத்துக்கொண்டிருக்கிறான். என்ன நடக்குமோ என்று தெரியவில்லை… தென்காசி குடும்பத்தோட விளையாடும்போது, வெண்பா பாரதியை பிடிக்கும் என்று சொல்லிவிட்டால், நானும் டென்ஷன் ஆகிவிட்டேன். விட்டிருந்தால், அகில் கோபத்தில் சண்டைபோட்டிருப்பான்” என்று கூறுகிறார்.

இதைக் கேட்டு, ஷாக் ஆகும் சௌந்தர்யா, அகிலை கோபப்பட வேண்டாம் என்று சொல்லுங்கள். டாக்டர் வேண்டும் என்று அஞ்சலி கேட்டிருக்கிறாள் என்றால் அவள் மீது ஒரு கண் வையுங்கள்… பத்திரமாக பார்த்துக்கொள்ளுங்கள் என்று கூறுகிறார்.

அடுத்த காட்சியில், பேனாவும் பேப்பருடன் சரவணன், என்ன எழுதுவது என்று யோசித்துக்கொண்டிருக்கிறான். அப்போது, அகில் அங்கே வருகிறான். என்ன என்று கேட்கிறான். அகிலிடம், சரவணன் தனது மனைவிக்காக லெட்டர் எழுதுவதை பற்றி கூறுகிறான். அகில், ரொமாண்டிக்காக எழுதுங்கள் என்று கூறுகிறான். முதல் முதல் உங்க மனைவியை பார்த்ததை மனசுல கொண்டுவாங்க அப்ப மனசுல என்ன தோணுச்சு என்று எழுதுங்க…” என்று கூறுகிறான்.

இதையடுத்து, சரவணன், “அன்புள்ள சந்தியா, நீ என் மனசுக்குள்ள வந்தியா… உன் அன்பை எனக்கு தந்தியா… உங்களை ஏன் பிடிக்கும்னு தெரியாது… குழந்தைக்கு ஏன் அம்மாவை பிடிக்கும்னு தெரியாது… இல்லையா” ஒரு நீண்ட கடிதம் எழுதி கடைசியாக என்னுயிர் காதலி இப்படிக்கு சரவணன் சிவகாமி இனிப்பகம் என்று எழுதுகிறான். இது சரியா? தனக்கு சரியாக எழுத தெரியாது பாருங்கள் என்று அகிலிடம் கேட்கிறான். அதற்கு உங்கள் மனைவிக்கு நீங்கள் எழுதி இருக்கிறீர்கள். தவறு இருந்தால் பரவாயில்லை… மானே தேனே பொன் மானே என்று கூறிவிட்டு செல்கிறான்.

இதையடுத்து வெண்பா, பாரதியிடம் இங்கே ஒரு பிரச்னை இல்லை என்று போனில் கூறுகிறான். இதையடுத்து, வெண்பா தனியாக பேசுகிறாள். “அஞ்சலியை பத்திரமா பாத்துக்க சொல்றான்… குடும்பம் மொத்தமா எங்கிட்ட வந்து மாட்டிகிட்டிங்களேடா பிக்காளி பயலுகளா? இந்த அகிலுக்கு இருக்கு… அஞ்சலி எப்படி இருந்தால் எனக்கு தெரியாதா? அவளை மாதிரி நான் பச்சோந்தியா மாறமாட்டேன். நான் நல்லவன்னு பேர் எடுத்த கெட்டவா நாண்டா அதுதான் இந்த வெண்பாவின் கேரக்டர்…” என்று கூறுகிறாள். அப்போது, சாந்தி மாத்திரை வாங்கிக்கொண்டு வருகிறாள். அர்ச்சனாவுக்கு மாத்திரை கொடுக்க ஒத்துக்கிட்டிங்க என்று சாந்தி கேட்கிறாள். அதற்கு வெண்பா, இந்த அர்ச்சனா ஒரு அப்பிராணியா இருக்கிறாள். அவளை நம்ம கைக்குள்ள போட்டுக்கனும் என்று கூறுகிறாள். பிறகு மாத்திரையை எடுத்து, குழந்தையே உருவாகாம இருக்கிற மாத்திரை அர்ச்சனாவுக்கு குழந்தையை இல்லாம பன்றதுக்கு மாத்திரை அஞ்சலிக்கு என்று கூறுகிறாள். அதுதான் இந்த வெண்பா என்று சிரிக்கிறாள். ஏம்மா அவங்க சொன்ன மாத்திரைதான் எழுதி கொடுத்தீங்களா? எந்த மாத்திரையை யாருக்கு கொடுக்கனும் என்று சாந்தி கேட்கிறாள். பொறு போய் சுடு தண்ணி எடுத்துக்கொண்டு வா வெண்பா என்று சொள்கிறாள். சாந்தி உள்ளே செல்கிறாள். அப்போது, இந்த மாத்திரை அர்ச்சனாவுக்கு குழந்தையே உருவாகாம இருக்கிறதுக்கு… இந்த மாத்திரை அஞ்சலிக்கு உருவான குழந்தைய இல்லாம பண்றதுக்கு கடைசியில என்ன இப்படி ஒரு ஸ்பெஷலிஸ்ட்டா ஆக்கிட்டீங்களேடா… என்று வில்லி சிரிப்பு சிரிக்கிறாள். இத்துடன் இன்றைய எபிசோடு நிறைவடைகிறது.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"

Vijay Tv Barathi Kannamma Serial Raja Rani
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment