Advertisment

Vijay TV Serial: அஞ்சலிக்கு திடீர் நெஞ்சுவலி… டாக்டராக வந்த வெண்பாவை தூண்டிவிடும் சாந்தி

Vijay TV Serial: “ஏம்மா, அந்த அகில் உன்னை கண்டபடி திட்டுறான் உனக்கு வெட்கம், மானம் சூடு சொரனை இல்லையா” என்று சாந்தி கேட்க வெண்பா கடுப்பாகிறாள்.

author-image
WebDesk
New Update
barathi kannamma, raja rani 2, barathi kannamma raja rani 2 serials mega sangamam, barathi kannamma serial update, பாரதி கண்ணம்மா - ராஜா ராணி 2 சீரியல்களின் மெகா சங்கமம், raja rani 2 update, பாரதி கண்ணம்மா, ராஜா ராணி 2, அஞ்சலிக்கு திடீர் நெஞ்சுவலி, வெண்பவை ஏத்திவிட்ட சாந்தி, sudden heartpain to anjali, shanthi provokes venba, venu, akil, saravanan, sandhya, senthil, soundarya, விஜய் டிவி சீரியல்கள், viay tv serials

Barathi Kannamma - Raja Rani 2: விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பாரதி கண்ணம்மா - ராஜா ராணி 2 சீரியல்களின் மெகா சங்கமம் நடந்து வருகிறது. இந்த 2 சீரியல்களையும் ஒன்றாக இணைத்து ஒளிபரப்பப்பட்டு வருகிறது.

Advertisment

பாரதி கண்ணம்மா - ராஜா ராணி 2 சீரியல் மெகா சங்கமத்தில் இன்றைய எபிசோடில் இரண்டு குடும்பத்தினரும் சந்தித்துக்கொண்டு ஒரு ரிசார்ட்டில் தங்குகிறார்கள். லாக்டவுன் என்பதால் இன்னும் சில நாட்கள் அவர்கள் இந்த ரிசார்ட்டில்தான் தங்க வேண்டியிருக்கும் என்று பேசிக்கொள்கிறார்கள். பாரதி கண்ணம்மா குடும்பத்தில் வேணு, அகில், அவனுடைய மனைவி அஞ்சலி ஆகியோரும் ராஜா ராணி 2 குடும்பத்தில் சரவணன் அவனுடைய அப்பா, தங்கை பார்வதி, செந்தில், அவனுடைய மனைவி அர்ச்சனா ஆகியோர் ரிசார்ட்டில் தங்குகின்றனர்.

ரிசார்ட்டில் தனி அறையில் செந்திலும் அவனுடைய மனைவி அர்ச்சனாவும் தங்கியிருக்கின்றனர். அப்போது, செந்தில் லாக்டவுனில் இங்கே மாட்டிக்கொண்டதைப் பற்றி பேசுகிறான். “எங்க அம்மாகிட்ட இருந்து தப்பிச்சு எங்கனா போகனும்னு நினைச்ச… ஆனால், இப்படி இங்க வந்து ரிசார்ட்டில் தங்க வேண்டியதாகிப் போச்சு… இதுவும் நல்லாதான் இருக்கு” என்று அர்ச்சனாவிடம் கூறுகிறான். அர்ச்சனாவும் ஆமாம் இது நல்லாதான் இருக்கு. நீங்கதான் இந்த ரிசார்ட்டுக்கு தங்கறதுக்கு பணம் கொடுக்கனும் என்று சொல்கிறாள். செந்திலும் ஆமாம் நான் தான் பணம் கொடுக்க வேண்டும். இவ்வளவு பெரிய அறைக்கு எவ்வளவு வாடகை ஆகுமோ என்று கவலைப்படுகிறான்.

பின்னர், அர்ச்சனா குளிப்பதற்காக பாத் ரூம் செல்கிறாள். அறையில் தனியாக இருக்கும் செந்தில், அங்கே சுவரில் மாட்டி வைக்கப்பட்டிருக்கும் குளியலுக்குப் பிறகு அணிகிற ஆடையான ஆண்களின் ‘பாத்ரோப்’பை பார்க்கிறான். அதைப் பார்த்து வியக்கும் செந்தில், இது பழைய படத்தில சிவாஜி போடிருப்பாரு இல்ல. என்று அதை எடுத்து அணிந்துகொள்கிறான். ‘பாத்ரோப்’ அணிந்துகொண்டு செந்தில் கண்ணாடி முன்பு தனது அழகை ரசிக்கிறான். அப்போது அர்ச்சனாவும் குளித்துவிட்டு டெர்ரி பாத்கவுன் அணிந்துகொண்டு வருகிறாள். அர்ச்சனா பாத்கவுன் அணிந்திருப்பதைப் பார்த்து ரொம்ப நல்லா இருக்கிறது என்று கூறுகிறான்.

செந்தில் எனக்கு ‘பாத்ரோப்’ எப்படி இருக்கிறது என்று அர்ச்சனாவிடம் கேட்கிறான். அதற்கு அர்ச்சனா நல்லாதான் இருக்கு, ஆனால், காமெடியா இருக்கு என்று கூறி சிரிக்கிறாள். பிறகு, இருவரும் சந்தோஷத்தில் ஓடிப்பிடித்து அறைக்குள்ளேயே ஓடி விளையாடுகிறார்கள். மனைவியின் அழகில் மயங்கும் செந்தில் அவளை நெருங்குகிறான். அப்போது அர்ச்சனா, தான் குழந்தை பிறப்பை தடுக்கிற மாத்திரையைக் கொண்டுவராததை நினைத்துக்கொள்கிறாள். அதனால், செந்திலை நெருங்க விடக்கூடாது என்று அவனிடம் கோபமாக பேசுகிறாள். 600-700 கி.மீ பயணம் செய்து வந்திருக்கிறோம். சோர்வாக இருக்கிறது. அதனால், இப்போது வேண்டாம் என்று கூறுகிறாள். செந்திலும் இன்று போய் நாளைவா என்று நாளைக்கு பார்த்துக்கொள்ளலாம் என்று அமைதியாகிவிடுகிறான்.

அப்போது, அர்ச்சனா, மனதுக்குள் “அந்த சந்தியா மட்டும் குழந்தை பெத்துகாம இளமையா இருப்பாளாம். நான் மட்டும் சீக்கிரமா குழந்தை பெத்துக்கனு சீக்கிரம் கிழவியாகனுமா… ” நினைக்கிறாள்.

அடுத்த காட்சியில், வேணு, மருத்துவமனையில் இருக்கும் தனது மனைவி சௌந்தர்யாவுக்கு போன் பண்ணுகிறார். சௌந்தர்யாவை நலம் விசாரிக்கும் வேணு, அகில் மனைவி அஞ்சலியின் மன மாற்றத்தைப் பற்றியும் தனக்கு அவள் அக்கறையுடன் கஷாயம் போட்டுக்கொடுத்ததையும் பற்றி கூறுகிறார். இதைக்கேட்டு சௌந்தர்யாவும் சந்தோஷப்படுகிறார். வயிற்றுக்குள் ஒரு குழந்தை வந்ததும் அவளுடைய மனசு மாறிடுச்சு. கெட்ட எண்ணங்களையெல்லா வெளியே தள்ளிடுச்சு. அவ நடந்துக்கிறதை நீங்க சொல்லும்போது, அஞ்சலிக்குள்ளயும் ஒரு கண்ணம்மா இருக்கிறா என்பது தெரியுது என்று கூறுகிறாள். இதை நானும் உணர்ந்தேன் என்று வேண்டும் சொல்கிறார்.

இதையடுத்து, சௌந்தர்யா பாரதியைப் பற்றி விசாரிக்கிறாள். லாக்டவுனில் பாரதியும் ஏதோ ஒரு ஹோட்டலில் மாட்டிக்கொண்டதாக வேணு சொல்கிறார். பாரதி எப்படி இருக்கிறான் என்று விசாரிப்பதாக வேணு சௌந்தர்யாவிடம் கூறிவிட்டு போனை வைக்கிறார்.

அடுத்த காட்சியில், ரிசார்ட்டில் ஒரு இடத்தில் அகிலும் அவனுடைய மனைவி அஞ்சலியும் அமர்ந்திருக்கின்றனர். அப்போது அகில் தும்முகிறான். அருகே இருக்கும் அஞ்சலியிடம் எனக்கு கஷாயம் போட்டு தரமாட்டியா என்று கேட்கிறான். அதற்கு அஞ்சலி நான் கஷாயம் போட்டுக்கொடுத்தேன்னு மாமா சொன்னாரா என்று கேட்கிறாள். அதற்கு அகில் நானேதான் பார்த்தேன். நீ அப்பாவுக்கு அக்கறையா கஷாயம் போட்டுக்கொடுத்த… அதில் எந்த எதிர்பார்ப்பும் இல்லை. அன்பும் மட்டும்தான் இருந்தது. அன்பு எதிர்பார்ப்போடு கொடுத்து வாங்குற பணம் இல்லை. நீ மாறிட்ட. சந்தோஷமா இருக்கு என்று கூறுகிறான். அவளும் ஆமாம் நான் மாறிட்டேன் என்று கூறுகிறாள். அஞ்சலி மாறியதற்கு அகில் நன்றி சொல்கிறான். ஆனால், அஞ்சலி நான்தான் நன்றி சொல்ல வேண்டும். நான் மாறுகிற வரைக்கும் நீங்கள் பொறுமையா காத்திருந்தீங்க இல்ல என்று கூறுகிறாள்.

தொடந்து பேசும் அகில், “அஞ்சலி உன்னை துறத்தி துறத்தி லவ் பண்ணேன். ஆனால், கல்யாணத்துக்குப் பிறகு, உன் கேரக்டர் தெரிஞ்சு பயந்துபோயிட்டேன். உன்னை மாத்தவே முடியாதுனு பல நாள் அழுதிருக்கிறேன். ஆனால், நீ இப்ப மாறிட்ட… ரொம்ப சந்தோஷமா இருக்கேன். ஐலவ்யூ” என்று சொல்கிறான். அஞ்சலியும் ஐலவ் யூ என்று சொல்கிறாள் காதல் பார்வைகளையும் அன்பையும் பரிமாறிக்கொண்ட பின் அங்கிருந்து அகில் எழுந்து செல்கிறான். அப்போது, அஞ்சலிக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்படுகிறது. அஞ்சலி அகில் அகில் என்று கூப்பிடுகிறாள். ஆனால், அது அவனுக்கு கேட்கவே இல்லை. பிறகு அவளே சமாளித்துக்கொண்டு சரி செய்துகொள்கிறாள்.

அடுத்த காட்சியில், செந்திலும் அர்ச்சனாவும் வெளியே அமர்ந்திருக்கிறார்கள். அப்போது செந்தில் மனதுக்குள், தனியா வந்த இடத்தில ரொமான்ஸ் பண்ணி ஜாலியா இருக்கலாம்னு பார்த்தா இவ ஏன் இப்படி மூஞ்சிய திருப்பிக்கிட்டு இருக்கா என்று யோசிக்கிறான்.

என்ன பிரச்னை என்று கேட்கும்போது, அர்ச்சனா, நாம ரெண்டு பேரும் வெளியே கிளம்பும்போது ஏன் உங்க அப்பா, அண்ணன் ரெண்டு பேரும் வந்தாங்க… நாம துணி வாங்காம அந்த பணத்தை செலவு பண்ணிடுவோம்னு நினைக்கிறாங்களா? என்று சண்டை போடுகிறாள்.

எங்கனா சந்தோஷமா இருக்கலாம்னு பார்த்தா இவ இப்படி இருக்கா… வெளியில கொரோனானா உள்ள இவ என்று செந்தில் முனுமுனுக்கிறான். இதைக் கேட்ட அர்ச்சனா, அப்ப என்ன கொரோனாங்கிறீங்களா என்று கேட்க, செந்தில், அப்படி இல்லை நீ பயங்கர கொடுரமா இருப்ப… கொரோனா கொடூரமா பயங்கரமா கொடூரமா இருக்கும் என்று கூறுகிறான். இதனால், கடுப்பாகும் அர்ச்சனா, உங்க அண்ணன், அப்பா, தங்கச்சி எல்லோரும் ஏன் குடும்பதோட நம்மகூட வந்தாங்க என்று சண்டை போடுகிறாள். அப்போது தூரத்தில் இருந்து பார்க்கும் சரவணனைக் குறிப்பிட்டு சண்டை போடுகிறாள். எங்க அண்ணனை ஏண்டி இழுக்கிற என்று செந்தில் கேட்க, உங்க அண்ணனை சொன்னா உடனே கோபம் வருமே.. உங்க அண்ணன் சந்தியாகூட தனியா போனா நாம யாராவது இப்படி போனா எப்படி இருக்கும் என்று கூறி சண்டையிடுகிறாள். அப்போது சரவணன் அவர்களை நோக்கி வருகிறான்.

இதைப்பார்த்த, அர்ச்சனா, உங்க அண்ணன் வராரு, நான் போறேன். நான் போயிட்டேன்னு ரெண்டு பேரும் ஒட்டி உறவாடனிங்க நீ எப்பவும் என் பக்கத்திலயே நெருங்க முடியாதுனு சொல்லிவிட்டு கிளம்புகிறாள்.

கோபத்தில் இருக்கும் தம்பி செந்திலிடம் சரவணன் என்ன என்று கேட்டு விசாரிக்கிறான். அதற்கு செந்தில் அண்ணன் சரவணன் மீது எரிந்து விழுகிறான். நாங்க ரெண்டு பேரும் போகும்போது நீங்க ஏன் வந்தீங்க, துணி வாங்க கொடுத்த பணத்தை நாங்க ரெண்டு பேரும் களவாண்டு போயிடுவோம்னு நினைக்கிறீங்களா என்று கேட்டு சண்டை போடுகிறான். இங்க வந்தும் நிம்மதியே இல்லை என்று கூறிவிட்டு அங்கிருந்து ஹோட்டல் அறைக்கு செல்கிறான். அப்போது, சரவணனின் அப்பா வந்து விசாரிக்கிறார். சரவணன் ஒன்னுமில்லை சும்மாப்பா என்று கூறி சமாளிக்கிறான்.

அடுத்த காட்சியில், வேணு, அகில், அஞ்சலி கார்டனில் அமர்ந்திருக்கிறார்கள். அப்போது வேண்டும் அஞ்சலியிடம் எதற்குமா ஒரு டாக்டர் கூட இருந்தா நல்ல இருக்கும்னு டாக்டரை வரச்சொன்ன… ஏதாவது பிரச்னையா, தைரியமா சொல்லுமா என்று கூறுகிறாள். அகிலும் என்ன பிரச்னை சொல்லு நாம் ஆஸ்பிட்டல பார்க்கலாம் என்று சொல்கிறான். பாரதியிடம் போன் பண்ணி டாக்டரை அனுப்ப சொன்னதாகவும் அப்போது அவன் டாக்டரை அனுப்பி வைக்கிறேன் என்று கூறியதையும் அகில் சொல்கிறான். அஞ்சலியும் இவர்களிடம் நெஞ்சுவலிப்பதை சொல்லலாமா என்று யோசிக்கிறாள். பயந்துவிடுவார்கள் என்று மறைக்கிறாள். அப்போதுதான், அங்கே வெண்பா ஹாய் கையசைத்தபடி என்று வருகிறாள். வெண்பாவைப் பார்த்து அகில், அஞ்சலி வேணு 3 பேருமே இவள் எதற்கு இங்கே வருகிறாள் என்று அதிர்ச்சியடைகிறார்கள். இந்த பாரதிக்கு அறிவே இல்லை இவளை எதற்கு இங்கே அனுப்பினான். ஊர்ல வேற டாக்டரே இல்லையா என்று வேணுவும், அகிலும் நினைக்கிறார்கள்.

பாரதிதான் தன்னை அனுப்பி வைத்ததாக வெண்பா கூறுகிறாள். பிறகு, அஞ்சலி பயப்படுவதைப் பற்றி கூறுகிறார்கள். வெண்பா அஞ்சலியை பரிசோதனை செய்கிறாள். அஞ்சலி நன்றாக இருக்கிறாள். நான் இங்கே இருப்பதில் ரொம்ப ஹாப்பி என்று சொல்லிவிட்டு வெண்பா ஹோட்டல் அறைக்கு செல்கிறாள்.

சிறிது நேரத்திலேயே, வெண்பாவின் வேலைக்காரி சாந்தி வருகிறாள். அவள் வருவதைப் பார்த்த அகில் இன்னொரு கொரோனா வருகிறது என்று கூறுகிறான். சாந்தி, வெண்பா கூலிங் கிளாஸ், பேக் விட்டுவிட்டு வந்துவிட்டார்கள். அதனால், அதை எடுத்துக்கொண்டு வரச்சொன்னார்கள். அதான் எடுத்துக்கொண்டு வந்தேன் என்று கூறுகிறாள். வெண்பா உள்ளே இருப்பதை சொல்லி அனுப்புகிறார்கள்.

அவள் போவதற்கு முன்பு, அகில் வெண்பாவைப் பற்றி திட்டுகிறான். நம்ம குடும்பத்தில இவ யாரு, இவ எதுக்கு இங்கே வரணும். இந்த பாரதிக்கு அறிவே இல்ல. திரும்ப அனுப்பிடலாம் என்று அகில் கூறுகிறான். அதற்கு வேணு அவனை பொறுமையாக இருக்கும்படி சொல்கிறான்.

அகில் வெண்பாவைத் திட்டுவதைக் கேட்ட சாந்தி, நேராக சென்று வெண்பாவைப் பார்த்து, அகில் உன்னை எப்படி கண்டபடி திட்டுகிறான் என்பதைப் பற்றி வத்தி வைக்கிறாள். வெண்பா இது என்ன புதுசா.. எல்லாம் சாதாரணம் என்று சொல்கிறாள். இதைக் கேட்டு கடுப்பான சாந்தி, “ஏம்மா, அந்த அகில் உன்னை கண்டபடி திட்டுறான் உனக்கு வெட்கம், மானம் சூடு சொரனை இல்லையா” என்று கேட்க வெண்பா கடுப்பாகிறாள். பிறகு, சாந்தி இந்த வீட்ல உங்களுக்கு எதிரி கண்ணம்மா அந்த ஹேமா மட்டும் இல்லை. அகில்தான் முக்கியமான எதிரியே! யாராவது உங்களை நல்லபடியா நினைச்சாலும் இவந்தான் கெடுக்கிறான். ஹேமா பாரதி குழந்தைதான்னு சௌந்தர்யா அம்மாவுக்கும் தெரியும். அதுமட்டுமில்ல, இந்த அஞ்சலிக்கு குழந்தை பிறந்தா அதுவும் ஆண்குழந்தையா பிறந்தா அவ்வளவுதான்… சௌந்தர்யா அம்மா பாரதிக்கு கல்யாணம் பண்ணனும் என்பதையே மறந்துடுவாங்கா ஏன்னா, ஏற்கெனவே ஹேமா இருக்கா, இன்னொரு ஆண் வாரிசு வந்தாச்சுனா நீங்க பாரதியை கல்யாணம் பண்ணிக்க முடியாது? என்று மூட்டிவிடுகிறாள். ஏற்கெனவே பயங்கர வில்லியாக இருக்கிற வெண்பா, சாந்தி சொன்னது பயத்தை ஏற்படுத்தவே இனிமேல், இந்த அகிலும் எதிரி என்று கூறி வஞ்சம் கொள்கிறாள். இந்த எபிசோடு இத்துடன் நிறைவடைகிறது.

ரிசார்ட்டுக்கு போனா நிம்மதியா இருக்கலாம்னு வந்த குடும்பத்தை இங்க வந்தும் இந்த வெண்பா என்ன செய்யப்போறாளோ என்ற அச்சமும் எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"

Vijay Tv Barathi Kannamma Serial Raja Rani
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment