Advertisment

Vijay TV Serial: வெண்பாவின் கையைக் கடித்த பார்வதி… குத்து டான்ஸ் போட்ட அர்ச்சனா செந்தில்

இன்றைய எபிசோடில் வில்லி வெண்பாவின் கையை பார்வதி கடித்ததும் அர்ச்சனாவும் செந்திலும் போட்ட குத்து டான்ஸும் ரொம்ப சுவாரஸ்யமாக இருந்தது.

author-image
WebDesk
New Update
barathi kannamma, raja rani 2, barathi kannamma raja rani 2 serials mega sangamam, விஜய் டிவி பாரதி கண்ணம்மா, ராஜா ராணி 2 சீரியல், மெகா சங்கமம், வெண்பா கையைக் கடித்த பார்வதி, அர்ச்சனா செந்தில் குத்து டான்ஸ், barathi kannamma raja rani 2 serials update, Paravathy bites Venba hand, Archana Sendhil mass dance, vijay tv serials

விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பாரதி கண்ணம்மா - ராஜா ராணி 2 சீரியல்களின் மெகா சங்கமத்தில் இன்றைய எபிசோடில் நடக்கும் நிகழ்வுகளை சுவாரஸ்யம் குறையாமல் இங்கே காணலாம்.

Advertisment

பாரதி கண்ணம்மா குடும்பத்தில், சௌந்தர்யா மருத்துவமனையில் இருப்பதால் வேணு, அகில், அஞ்சலி ஒரு ரிசார்ட்டில் இருக்கின்றனர். அங்கே ராஜா ராணி குடும்பத்தில் இருந்து சரவணன், அவனுடைய அப்பா, செந்தில், அவனுடைய மனைவி அர்ச்சனா, தங்கை பார்வதி ஆகியோரும் அதே ரிசார்ட்டில் வந்து தங்கியுள்ளனர். லாக்டவுனில் இரண்டு குடும்பங்களும் அந்த ஹோட்டலில் மாட்டிக்கொண்டிருக்கிறார்கள். அஞ்சலிக்கு திடீரென நெஞ்சுவலி வந்ததால் அவள் டாக்டர் ஒருத்தர் பக்கத்தில் இருந்தால் நல்லா இருக்கும் என்று சொல்ல இந்த வீணா போன பாரதி, வில்லி வெண்பாவை அனுப்பி வைத்திருக்கிறான். தற்போது வெண்பாவும் அதெ ரிசார்ட்டில்தான் இருக்கிறாள் என்பதைப் பார்த்தோம்.

இன்றைய எபிசோடில், கணவனைப் பிரிந்து வீட்டில் தனியாக இருக்கும் சந்தியா, போனில் உள்ள போட்டோ எடிட் ஆப்பை பயன்படுத்தி, சரவணன் போட்டோவில் தொப்பி அணிந்திருப்பது போலவும், கற்றை மீசை தாடி வைத்திருப்பது போலவும், தாடி மீசை எல்லாம் நரைத்து வயதான தோற்றத்திலும், பாக்வதர் போல தலை முடி நீளமாக வைத்தும் சித்தரித்து அந்த புகைப்படங்களை ரிசார்ட்டில் தங்கியிருக்கும் சரவணனுக்கு அனுப்புகிறாள். அந்த புகைப்படங்களைப் பார்த்த சரவணன் ரொம்ப சந்தோஷப்படுகிறான். பின்னர், அவளுக்கு ஒரு வாய்ஸ் மெசேஜ் அனுப்புகிறான். அதில் என்னங்க இது சின்னப்புள்ள விளையாட்டு மாதிரி இருக்கு… பொழுது போகலையா என்று கேட்கிறான். இந்த மெசேஜைக் கேட்ட சந்தியா இந்த போட்டோவில உங்களுக்கு பிடிச்சது எது என்று கேட்கிறாள்.

மெசேஜைப் பார்த்ததும் உடனே சரவணன் போன் செய்கிறான். எப்படி இருக்கீங்க என்று நலம் விசாரிக்கிறான். லாக்டவுன்ல இங்க வந்து மாட்டிகிட்டோம். ஊர்ல இருந்தால் கடைக்கு போய் இருக்கலாம். நல்ல வேளை கடையில ஸ்டாக் எதுவும் இல்லை என்று கூறுகிறான். இதைக்கேட்ட சந்தியா, எப்போதும் கடை நினைப்புதானா என்று கேட்கிறாள். ஆமாங்க, வியாபாரம்னா அப்படிதான் இருக்கனும்… நான் ஜனங்களோட இருக்கிறவன்.. எனக்கெல்லாம் எப்போதும் ஜனங்க கூட்டம் சத்தம் இரைச்சல்னு இருக்கனும் அதுதான் செட் ஆகும் என்று கூறுகிறான். தான் தங்கியிருக்கிற இடம் ரொம்ப அருமையா இருக்கு, உங்களையும் கூட்டிட்டு வந்திருக்கலாம் என்று கூறுகிறான். அதற்கு சந்தியா நீங்கதான் விட்டுட்டு போயிட்டிங்களே இடத்தைக் காட்டுங்க வீடியோ கால் பண்ணுங்க என்று கூறுகிறாள். இதற்கு சரவணன் நிஜமா இடத்தைப் பார்க்கத்தான் வீடியோ கால் பண்ண சொல்றிங்களா என்று கேட்க சந்தியா அவனைப் பார்க்கத்தான் கால் பண்ண சொல்கிறாள் என்பதை மறைத்து இடத்தைப் பார்க்கத்தான் என்று சொல்கிறாள். ஆனால், சரவணன் அவள் தன்னைப் பார்க்கத்தான் வீடியோ கால் பண்ண சொல்கிறாள் என்பதைப் புரிந்துகொண்டு வீடியோ கால் பண்ணுகிறான்.

வீடியோ காலில் ரெண்டு பேரும் பேசிக்கொள்கிறார்கள். இடத்தை கேமிராவில் சுற்றிக்காட்டுகிறான். இடத்தைப் பார்த்த சந்தியா ரொம்ப நல்லா இருக்கு… நீங்களாவது ஜாலியா இருந்துட்டு வாங்க என்று சொல்கிறாள். அதற்கு சரவணன் உங்களை கூட்டிக்கொண்டு வரலாம்னு நினைச்சேன். ஆனால், அவசரமா கிளம்பினதால முடியல என்று கூறுகிறான். சந்தியா வீடியோ காலில் சரவணனைப் பார்த்து ஏங்க கருத்து போயிட்டிங்க என்று கேட்க அதற்கு சரவணன் நான் எப்பங்க எம்.ஜி.ஆர் கலர்ல இருந்தேன்… கருத்துப் போக என்று கேட்கிறான். பிறகு, தான் எடிட் செய்து அனுப்பிய போட்டோவுல எது நல்லா இருக்கு என்று கேட்கிறாள். அதோடு, கடா மீசை வச்ச போட்டோ எனக்கு ரொம்ப புடிச்சிருக்கு. அது மாதிரி எப்போ வைப்பிங்க என்று கேட்கிறாள். அதெல்லாம் எனக்கு காமெடியா இருக்கும்ங்க என்று பதில் சொல்கிறான். அதோடு, பார்ப்போம் என்று சொல்ல எப்போது பார்க்கலாம் என்று பேசிக்கொள்கிறார்கள்.

அடுத்த காட்சியில், கார்டனில் தனியாக இருக்கும் பார்வதியை அவளுக்கு தெரியாமல் பின்னால் சென்று அவள் கண்களை மூடுகிறாள் வெண்பா. யார் கண்ணை மூடியது என்று கேட்க வெண்பா நீ உங்க அண்ணி சந்தியாவை பழி வாங்க நினைக்கிறீயாமே ஏன் அவங்களை உனக்கு புடிக்காது சொல்லு என்று கேட்கிறாள். நான் சொல்ல மாட்டேன் என்று கேட்கிறாள் இல்லாவிட்டால் கத்துவேன் என்று கூறி கத்துகிறாள். இங்கே யாரும் வரமாட்டாங்க என்று கூறி வெண்பா திரும்பவும் உனக்கு உங்க அண்ணியை ஏன் புடிக்காது என்று கேட்கிறாள். வெண்பா இறுக்கமாக கண்ணைமூடியதால் வலி தாங்க முடியாத பார்வதி வெண்பாவின் கையைப் பிடித்து கடித்து விடுகிறாள். வலியால் துடிக்கும் வெண்பா அடிப்பாவி சும்மா விளையாட்டுக்கு பண்ண கையை கடிச்சுட்டா என்று கூறுகிறாள். பிறகு, பார்வதி மன்னிப்பு கேட்கிறாள். வெண்பா வேலைக்காரி சாந்தியை அறிமுகப்படுத்தி வைக்கிறாள். நீங்க அந்த சூப்பர் குடும்பம்தானே உங்க அண்ணி சந்தியா வரலையா என்று கேட்கிறாள். அதற்கு பார்வதி அவங்க வரலை. நான் எங்க அண்ணன்கள், சின்ன அண்ணி, அப்பா மட்டும்தான் வந்திருக்கிறோம் என்று கூறுகிறாள். அப்ப உங்களுக்கு சின்ன அண்ணி புடிக்குமா என்று வெண்பா கேட்கிறாள். எனக்கு எந்த அண்ணியும் புடிக்காது ஏன்னா, பாசமா இருக்கிர அண்ணன்களை இந்த அண்ணிகள்தான் மாற்றிவிடுறாளுங்க அதான் என்று கூறுகிறாள்.

பார்வதி வெண்பாவிடம் சாரி கேட்டு விட்டு உங்க எதிரி கண்ணம்மா வரவில்லையா என்று கேட்கிறாள். அதற்கு வெண்பா இல்லை என்று பதில் சொல்கிறள். கண்ணம்மா, சந்தியா 2 பேருமே வரல அப்ப நாம யாரை கெடுக்கிறது என்று கேட்கிறாள் பார்வதி. இதைக்கேட்ட வெண்பா அதற்கும் வழி இருக்கு. சம்பாவாமி யுகே யுகே என்று கூறுகிறாள். பார்வதி இதற்கு என்ன அர்த்தம் என்று கேட்கிறாள். அர்த்தம் எல்லாம் எனக்கு தெரியாது வா போகலாம் என்று கூறுகிறாள்.

அடுத்த காட்சியில் கார்டனில் வேணுவும் சரவணன் அப்பாவும் தனியாக அமர்ந்து பேசிக்கொண்டிருக்கிறார்கள். தனியாக இருப்பது போர் அடிக்கிறது என்று சரவணனின் அப்பா கூறுகிறார். அதற்கு வேணு, ஆமாம், எப்போதும் வேலை வேலைனு ஓடிகிட்டே இருப்போம். ஒரு 10 நாள் சேர்ந்தாப்ல ரெஸ்ட் கிடைக்காதான்னு தோணும். இப்போது கடவுள் அதனாலதான் இப்படி பண்ணிட்டாரு போல. எப்பவுமே வேலைக்கு நடுவுல ரெஸ்ட் கிடைச்சாதாங்க நல்லா இருக்கும். எப்போதும் சும்மாவே இருந்தா ஒரு கட்டத்துல பைத்தியம் புடிச்சுடும். வடிவேல் காமெடி மாதிரி சும்மா இருப்பது எவ்வளவு கஷ்டம்னு தெரியுது…” என்று கூறுகிறார்.

இதைக்கேட்ட சரவணனின் அப்பா நீங்க சொல்வது சரிதான் நமக்கும் அப்படி பைத்தியம் புடிச்சுடும்போல இருக்கு… ரொம்ப போர் அடிக்குது என்று கூறுகிறார். இதைக்கேட்ட வேணு இப்போ உங்களுக்கு போர் அடிக்கக்கூடாது அவ்வளவுதானே என்று கூறிவிட்டு எல்லோரையும் போன் பண்ணி கார்டனுக்கு வரச் சொல்கிறார்.

எல்லோரும் கார்டனுக்கு வந்து கூடுகிறார்கள். எல்லோரும் வட்டமாக புல்வெளியில் அமர்ந்துகொள்கிறார்கள். அகில் நடந்த சண்டைக்காக செந்திலிடம் மன்னிப்பு கேட்கிறான். வேணு என்ன விளையாட்டு விளையாடலாம் என்று கேட்க, பார்வதி ஐஸ்பாய் விளையாட்டு விளையாடலாம் ஆம்பளைங்க எல்லா திருடங்க… லேடீஸ் எல்லாம் போலீஸ் சரியா என்று கூறுகிறாள். இதைக் கேட்ட அவளுடைய அப்பா இங்க இருக்கிற எல்லா ஆம்பளைகளையும் திருடனாக்கி பார்க்கனும்ங்கற உன்னோட ஆசை எனக்கு புரியுது… இந்த வயசுல எங்களால் ஓடி ஒலிய முடியாது என்று கூறுகிறார்.

என்ன விளையாட்டு விளையாடலாம் என்று பேசிக்கொள்கிறார்கள். நீங்கள் ஏதாவது சொல்லுங்கள் என்று சாந்தி வெண்பாவிடம் கூறுகிறாள். அதற்கு அமைதியாக இருப்போம் என்று கூறுகிறாள்.

ஒரு வழியாக அகில் ட்ரூத் ஆர் டேர் விளையாட்டு சொல்கிறான். அதன்படி, ஒரு டீப்பா எடுத்துக்கொண்டு வந்து அதன் மீது ஒரு காலி தண்ணீர் பாட்டிலை வைக்கிறான். இந்த பாட்டிலை சுத்திவிட்டால் யார் பக்கம் திரும்பி நிற்கிறதோ அவர்கள் கேட்கிற கேள்விக்கு பதில் சொல்ல வேண்டும் என்று கூறுகிறான். பாட்டு பாடு டான்ஸ் ஆடு என்று எதை வேண்டுமானாலும் சொல்லுவோம்… அதை கண்டிப்பா நீங்க செய்யனும் என்று சொல்கிறான். உண்மையை சொல்லு இல்லைனா நான் சொல்றதை செய் என்பதுதான் அதற்கான அர்த்தம் என்று விளையாட்டை விளக்குகிறான்.

அதற்கு சரவணனின் அப்பா நீங்க பாட்டுக்கு எடக்குமடக்கா கேள்வி கேட்டா எப்படிப்பா உண்மையை சொல்ல முடியும் என்று கேட்க எல்லோரும் சிரிக்கிறார்கள். அதற்கு வேணு, என்ன சார் உங்க ஃபிளாஷ் பேக் நினைவுக்கு வந்துடுச்சா… நீங்க எத்தனை பேர லவ் பண்ணிங்கனு கேப்பாங்கனு பயப்படுறீங்களா என்று சொல்கிறார். இதைக்கேட்டு எல்லோரும் சிரிக்கிறார்கள். அப்போது சாந்தி ரகசியமாக வெண்பாவிடம் ஏம்மா உங்களைக் கேட்ட நீங்க உண்மையை சொல்லிடுவீங்களா என்று கேட்கிறாள். அதற்கு வெண்பா, ஆமாம், பாரதி முதலில் ஹேமானு ஒரு பொண்ணை லவ் பண்ணப்போ அவலை கொலை பண்ணதில் இருந்து அவனுக்கு குழந்தை பிறக்காதுனு கண்ணம்மாவையும் அவனையும் பிரிச்சு வச்சது வரைக்கும் எல்லாத்தையும் சொல்லப்போறேன். இந்த உண்மையை எல்லாம் சொன்னேன்னா இங்க இருக்கற அத்தனை பேரும் ஹார்ட் அட்டாகல் செத்துடுவாங்கடி என்று சொல்கிறாள்.

மற்றொரு பக்கம், அர்ச்சனா தனது கணவன் செந்திலிடம் உண்மையை சொல்றேன்னு உளறப்போறீங்க என்று கூறுகிறாள். அவனும் சரி என்று கூறுகிறான்.

விளையாட்டு தொடங்குகிறது. அகில் பாட்டிலை சுற்றி விடுகிறான். அது முதலில் சரவணன் பக்கம் திரும்பி நிற்கிறது. கேட்கிற கேள்விக்கு பதில் சொல்கிறீர்களா என்று கேட்கும்போது, பதில் சொல்ல முடியாமல் மாட்டிகிட்டா என்ன பண்றதுனு இல்லை நீங்க சொல்றத நான் செய்கிறேன் என்று கூறுகிறான். அப்போது, சரவணனை அவனுடைய மனைவியிடம் போனில் ரொமான்ஸாக பேசச் சொல்கிறாள் அஞ்சலி.

சரவணன் கூச்சத்துடன் போனில் பேசுகிறான், என் வாழ்கையில் வந்த முதல் சந்தோஷம் நீங்கதான், உழைக்கனும் கஷ்டப்பட்டு குடும்பத்தை காப்பத்தனும்னுதான் நினைச்சிருக்கேன். எனக்குனு எந்த சந்தோஷத்தையும் எதிர்பார்க்கவில்லை. முதல்முறையா நீங்க வந்த பிறகுதான் சந்தோஷமா இருந்தேன். ஸ்வீட் கடைக்கு மதியத்தில் சர்க்கரை எடுக்க இப்போதெல்லாம் நானே வருவேன். ஏனென்றால், உங்களைப் பார்க்க என்று சொல்கிறான். இதைக் கேட்டு ஆஹா என்று அவனை கலாய்க்க பார்வதியும் அர்ச்சனாவும் மட்டும் உர்ரென இருக்கிறார்கள். இதையெல்லாம், சரவணனின் அப்பா போனில் ரெக்கார்ட் பண்ணுகிறார். அப்போது, அஞ்சலி சரவணனிடம் நீங்க உங்க மனைவி சந்தியாகிட்ட லவ் சொல்லுங்க என்று கூற வெட்கத்திலும் கூச்சத்திலும் தயங்கி நிற்கிறான். பிறகு, அகில் கிராமத்து மனுஷன் அவரை விடுங்க ரொம்ப கூச்சப்படுகிறார் என்று கூறி சரவணனனை அமர வைக்கிறான், இதையெல்லாம், சரவணனின் அப்பா சிரித்துக்கொண்டே போனில் வீடியோ பதிவு செய்கிறார்.

அடுத்து, பாட்டில் அர்ச்சனா பக்கம் திரும்பி நிற்கிறது. அவளும் எழுந்து சென்று நீங்கள் சொல்வதை செய்கிறேன் என்று சொல்கிறாள். பார்வதி குத்து டான்ஸ் ஆடச் சொல்கிறாள். தனியா எப்படி ஆடுவது என்று கேட்கிறாள் செந்திலை சேர்ந்து ஆடச் சொல்கிறார்கள். செந்திலும் அர்ச்சனாவும் ஒரு தெலுங்கு பாட்டுக்கு குத்து டான்ஸ் ஆடுகிறார்கள்.

அடுத்து, பாட்டீல் வெண்பா பக்கம் திரும்பி நிற்கிறது. வென்பாவைக் கேள்வி கேட்கிறார்கள். உங்களுக்கு யாரை ரொம்ப புடிக்கும் என்று கேட்க, இந்த உலகத்திலேயே பாரதியைத்தான் எனக்கு ரொம்ப புடிக்கும் என்று கூறுகிறாள். இதைக் கேட்டு எல்லோரும் அதிர்ச்சியடைகிறார்கள். பாரதியும் நானும் சின்ன வயசுல இருந்து ஒன்னா படிச்சோம். அவன் கல்யாணத்துக்குப் பிறகு, எங்க பிரண்ட்ஷிப் உடைஞ்சிடும்னு எதிர்பார்த்தாங்க… ஆனால், எங்க பிரெண்ட்ஷிப் அப்படியே இருந்தது. அவனுக்கு என்ன கலர் புடிக்கும், என்ன சாப்பாடு புடிக்கும், எல்லாமே தெரியும். நாங்க நல்ல ஃபிரெண்டாக இருக்கனும்… இதை இங்க சொல்றதுக்காக சொல்லல. எனக்கு பாரதியை ரொம்ப புடிக்கும் என்று சொல்கிறாள்.

இதற்கு, அஞ்சலி அகிலிடம் எல்லோரும் இருக்கிறார்கள் எதுவும் பேசாத தனியா பேசிக்கலாம் என்று கூறுகிறார்கள்.

அடுத்து, பாட்டீல் அஞ்சலி பக்கம் திரும்புகிறது. அப்போது, சரவணன் ஏங்க என்னை எப்படி பண்ண சொன்னிங்க அதனால நான் சொல்றதை செய்ங்க என்று அகிலிடம் நீங்க இதுவரை சொல்லாததை சொல்லுங்க என்று கூறுகிறான்.

அதற்கு அஞ்சலி, அகில் உன்ன மாதிரி அன்பான நல்ல ஹஸ்பண்ட் உலகத்தில வேறு யாருக்குமே கிடைத்திருக்க மாட்டார்கள். நீன் என்னை துறத்திதுறத்தி லவ் பண்ண… நிறைய முறை ஐலவ் யூ சொல்லி இருக்க… ஆனால், நான் சொன்னதில்லை இப்போ நான் சொல்கிறேன். ஐலவ்யூ என்று சொல்கிறாள். அகிலனும் ஐலவ்யூ சொல்கிறான். இப்படியாக விளையாட்டு முடிவடைகிறது.

விளையாட்டு முடிந்த பிறகு, சரவணனின் அப்பா மருமகள் சந்தியாவுக்கு போன் செய்கிறார். நலம் விசாரித்துவிட்டு, வேறு ஒரு நம்பரில் இருந்து தான் அனுப்பிய வீடியோவைப் பார்க்கச் சொல்கிறார். சரி பார்க்கிறேன் மாமா என்று சொல்லிவிட்டு சந்தியா போனில் வீடியோவைப் பார்க்கிறாள். அதில் சரவணன் விளையாட்டின்போது தன்னைப் பற்றி பேசியதை நினைத்து சந்தோஷப்படுகிறாள். அதே நேரத்தில், அவனை ஐலவ்யூ சொல்லச்சொல்லும்போது வெட்கத்தில் வேண்டாம் என்று சொல்வதைப் பார்த்து சரவணனுக்கு தன் மீது மரியாதை கலந்த அன்புதான் இருக்கிறது. காதல் இல்லை என்று நினைத்து வருத்தப்படுகிறாள். இன்றைய எபிசோடு இத்துடன் நிறைவடைகிறது. அங்கே என்ன நடந்தது என்று தெரியாமல் இப்படி தவறாக நினைக்கலாமா சந்தியா? நாளைய எபிசோடில் என்ன நடக்கிறது என்று பார்க்கலாம். இன்றைய எபிசோடில் வில்லி வெண்பாவின் கையை பார்வதி கடித்ததும் அர்ச்சனாவும் செந்திலும் போட்ட குத்து டான்ஸும் ரொம்ப சுவாரஸ்யமாக இருந்தது.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"

Vijay Tv Barathi Kannamma Serial Raja Rani
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment