Advertisment

Vijay TV Serial: மாத்திரையை மாற்றிக் கொடுத்த சாந்தி… வலியில் துடித்த வெண்பா… ‘மிஸ்’ஸான அஞ்சலி!

இன்றைய எபிசோடில், வெண்பா, அர்ச்சனாவின் வயிற்றில் இருக்கும் குழந்தையை அழிக்க மாத்திரையைக் கொடுக்கிறாள். அதே நேரத்தில், அர்ச்சனாவுக்கும் மாத்திரை கொடுக்கிறாள். ஆனால், சாந்தி மாத்திரை மாற்றிக் கொடுத்ததால் வில்லி வெண்பாவுக்கு என்ன ஆச்சுனு பாருங்க...

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
barathi kannamma, raja rani 2, vijay tv serial, barathi kannamma raja rani 2 mega sangamam, shanthi tablet changed, விஜய் டிவி சீரியல், பாரதி கண்ணம்மா, ராஜா ராணி 2, வெண்பா, மாத்திரையை மாற்றிக் கொடுத்த சாந்தி, வலியில் துடித்த வெண்பா, மிஸ்ஸான அஞ்சலி, venba in pain, just miss anjali, saravanan letter to his wife sandhya, archana, senthil, venu, soundarya, barathi, kannamma

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாரதி கண்ணம்மா - ராஜா ராணி 2 சீரியல்களின் மெகா சங்கமம் இன்றைய எபிசோடில் நடக்கும் நிகழ்வுகளை சுவாரஸ்யம் குறையாமல் இங்கே காணலாம்.

Advertisment

பாரதி கண்ணம்மா குடும்பத்தில் வேணு, அகில், அஞ்சலியும் ராஜா ராணி 2 குடும்பத்தில் சரவணன், அவனுடைய அப்பா, செந்தில், அவனுடைய மனைவி அர்ச்சனா மற்றும் பார்வதி ஆகியோர் ரிசார்ட்டில் தங்கி இருக்கிறார்கள். ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளதால் அங்கேயே இருக்கிறார்கள். அஞ்சலிக்கு ஒரு டாக்டர் இருந்தால் நல்லா இருக்கும் என்று கூறியதால் வெண்பாவும் சாந்தியும் ரிசார்ட்டுக்கு வந்திருக்கிறார்கள்.

இன்றைய எபிசோடில், வெண்பா மற்றும் சாந்தியைத் தவிர இரண்டு குடும்பத்தினரும் ரிசார்ட்டில் உட்க்கார்ந்து பேசிக்கொண்டிருக்கின்றனர். அப்போது, பார்வதி, விளையாட்டின்போது செந்திலும் அர்ச்சனாவும் டான்ஸ் ஆடிய வீடியோவை சோசியல் மீடியாவில் ஷேர் செய்ததைக் கூறுகிறாள். அந்த வீடியோவைப் பார்த்த நிறைய டான்ஸ் நல்லா இருக்கிறது என்று பாராட்டி கம்மெண்ட் செய்த் லைக், ஷேர் செய்துள்ளதைக் கூறுகிறாள். இதைக் கேட்டு அர்ச்சனாவும் செந்திலும் சிரிக்கிறார்கள். அதே போல, சரவணன் பேசிய வீடியோவை பலரும் பாராட்டியுள்ளதாகக் கூறுகிறாள்.

அப்போது, அஞ்சலி எல்லோரையும் ஏதாவது செய்யச் சொன்னீங்க ஏன் 2 அங்கிள்களையும் விட்டுவிட்டீர்கள் என்று கேட்கிறாள். இதற்கு சரவணனின் அப்பா, நாங்க பெரியவங்கமா, இது சின்ன பசங்க விளையாட்டு அதான் கலந்துக்கல என்று கூறுகிறார். அதெல்லாம் விட முடியாது, விளையாட்டுனா எல்லோருக்கும் ஒன்னுதான் என்று கூறி இருவரையும் பாடச் சொல்கிறார்கள். அவர்கள் சொல்வதும் சரிதான் என்று முதலில், சரவணனின் அப்பா பாடுகிறார். ‘மூக்குத்தி பூ மேலே காத்து உக்காந்து பேசுதம்மா…” என்ற பாடலைப் பாடுகிறார். இதைக் கேட்டு அனைவரும் கைத்தட்டி பாராட்டுகிறார்கள். அடுத்து வேணு பாடுகிறார். ‘எந்தன் நெஞ்சில் நீங்காத தென்றல் நீதானா… எண்ணம் எங்கும் நீ பாடும் திருதிரு தில்லானா…” என்ற பாடலைப் பாடுகிறார். எல்லோரும் கைத்தட்டி பாராட்டுகிறார்கள்.

இதையடுத்து தனியாக இருக்கும் வேணு, மருத்துவமனையில் இருக்கும் தனது மனைவி சௌந்தர்யாவுக்கு போன் பண்ணுகிறார். இருவரும் ரொம்ப மிஸ் பண்ணுவதாகக் கூறுகிறார்கள். எனக்கு நீதான் மருந்து என்று வேணு கூற சௌந்தர்யா ரொம்ப நெகிழ்ந்து போகிறார். நீங்க இப்படி எல்லாம் பேசினால், டாக்டர் கிட்ட சொல்லாம கிளம்பி வந்துவிடுவேன் என்று கூறுகிறாள். சிக்கிரமா பார்க்கலாம் என்று கூறுகிறார்கள்.

அடுத்து, வெண்பாவுக்கு சாந்தி டீ எடுத்துக்கொண்டுபோய் தருகிறாள். அப்போது சாந்தி, வெண்பாவிடம் ஏன் அமைதியாக உட்கார்ந்து இருக்கிறீர்கள். இங்கே போர் அடிக்கிறது… அங்கேயே இருந்திருக்கலாம் என்று கூறுகிறாள். அதற்கு வெண்பா, இங்கே சும்மாவா உட்க்கார்ந்திருக்கேன், வருங்காலத்தில் பாரதியோட வாழ்வதற்கு திட்டம் போட்டுக்கிட்டு இருக்கேன். அதற்கு தடையா உள்ள எதிரிகளை எப்படி இல்லாம பண்றதுனு யோசிச்சுகிட்டு இருக்கேன். அதற்கு சாந்தி, ஆமாமா, சின்ன ஆட்கள்னு விட்டுடாதீங்க… சின்ன பாம்பா இருந்தாலும் பெரிய கம்பாலதான் அடிக்கனும்னு கிராமத்தில பழமொழி சொல்வாங்க… என்று கூறுகிறாள். இதற்கு வெண்பா, அஞ்சலிக்கு குழந்தை பிறந்தால் பாரதிக்கு 2வது திருமணம் செய்து வைக்க வேண்டும் என்பதை மறந்து போய்விடுவார்கள், ஏன் பாரதியே மறந்துவிடுவான் என்றதை நீதான் எனக்கு புரிய வச்ச என்று சாந்தியை பாராட்டுகிறாள். இதைக்கேட்டு சந்தோஷமடையும் சாந்தி, என்ன பண்ணப் போறீங்க என்று கூறுகிறாள். அதற்கு வெண்பா, அஞ்சலியின் வயிற்றில் இருக்கும் குழந்தையை அழிக்க மாத்திரை ரூம்ல டேபிள் மேல வச்சிருக்கேன். வெள்ளை மாத்திரை அஞ்சலிக்கு, இன்னொரு மாத்திரை அர்ச்சனாவுக்கு எடுத்துகொண்டு போய் கொடு என்கிறாள். அதோடு, என்னொட விட்டமின் மாத்திரை இருக்கு போட்டு குழப்பிக்காத என்று கூறுகிறாள். சரி என்று கூறிவிட்டு சாந்தி அறையை நோக்கி போகிறாள்.

மாத்திரைகளை எடுக்க அறையை நோக்கி சென்ற சாந்தி வாசற்படியில் நின்று மேசை மேல் இருக்கும் மாத்திரைகளைப் பார்க்கிறாள். மாத்திரைகளை எடுக்க உள்ளே நுழையும்போது தடுமாறி மேசை மீது விழுகிறாள். அதில், மாத்திரைகள் கலந்துவிடுகின்றன. ஒருவழியாக, எழுந்து வெள்ளை மாத்திரை அஞ்சலிக்கு, மற்ற 2 மாத்திரைகளில் எந்த மாத்திரை என்று குழம்பிப் போகிறாள். வெண்பா திட்டுவாள் என்று பயந்துகொண்டு 2 மாத்திரைகளில் ஏதாவது ஒன்றை கொடுப்போம் என்று முடிவு செய்து கிளம்புகிறாள்.

அஞ்சலியும் அகிலும் ரிசார்ட்டில் ஒரு இடத்தில் உட்க்கார்ந்து பேசிக்கொண்டிருக்கிறார்கள். அப்போது அம்மா சௌந்தர்யா உடல்நிலையைப் பற்றி பேசிக்கொண்டிருக்கிறார்கள். விரைவில் குணமடைந்து விடுவார்கள் என்று சொன்னதை அகில் கூறுகிறான். அப்போது, அவனுக்கு ஏதோன் ஒரு போன் அழைப்பு வருகிறது. இரு பேசிவிட்டு வருகிறேன் என்று கிளம்புகிறான். அந்த நேரம் பார்த்து சாந்தி வந்து, வெண்பா கொடுத்துவிட்ட மாத்திரையைக் கொடுக்கிறாள். பின்னர், அங்கிருந்து அவள் புறப்பட்டுச் செல்கிறாள். அதை வாங்கிக்கொண்ட அஞ்சலி மாத்திரையை சாப்பிட்ட வாய்கிட்ட எடுத்துகொண்டு போகிறாள். அப்போது திடீரென வந்து அகில் அவள் கையைத் தடுக்கிறான். இது என்ன மாத்திரை யார் கொடுத்தது என்று கேட்கிறான். அதற்கு நான்தான் வெண்பாவிடம் மாத்திரை கேட்டேன் என்று அஞ்சலி கூறுகிறாள். இதைக் கேட்டு கோபமாகும் அகில், அந்த வெண்பா ஒரு விஷப்பாம்பு அவள் எதைக் கொடுத்தாலும் நீ சாப்பிடாத, அவளிடம் உஷாரா இரு… உனக்கு மாத்திரை வேண்டும்னா நான் போய் வாங்கிக்கொண்டு வருகிறேன் என்று கூறி அந்த மாத்திரையை தூக்கி எறிகிறான். நல்லவேளையாக நொடியில் தப்பித்தால் அஞ்சலி.

அடுத்த காட்சியில், சரவணன் தனது மனைவி சந்தியாவுக்குக்கு எழுதிய கடிதத்தை போனில் படித்துக் காட்டுகிறான். இதைக் கேட்டு முதலில் சிரித்தாலும் பிறகு அதில் உள்ள உண்மையை உணர்ந்து ரசிக்கிறாள். ஆனால், சரவணன் இறுதியில் என்னுயிர் காதலி என்பதை சொல்ல தைரியமில்லாமல் என்னுயிர் தோழி என்று கூறுகிறான். இதைக் கேட்டு சந்தியா ஏமாற்றம் அடைகிறாள். சரவணன் இதே போல, சந்தியாவை லெட்டர் எழுதச் சொல்கிறான். அவளும் தயக்கத்துடன் ஓகே சொல்கிறாள்.

அடுத்த காட்சியில், அர்ச்சனாவிடம் சாந்தி மாற்றி எடுத்து வந்த மாத்திரையைக் கொடுத்துவிட்டு செல்கிறாள். அதை சாப்பிடும்போது திடீரென காட்டுப் பூவுடன் செம ரொமாண்டிக் மனநிலையில் செந்தில் உள்ளே வருகிறான். காட்டுப் பூவை மனைவியிடம் கொடுத்து இந்த பூவைத்தான் அந்த காலத்தில் கொடுத்து லவ் பண்ணுவாங்களாம் என்று கூறி ரெடியா என்று கேட்கிறான். மாத்திரையை தவறவிட்ட அர்ச்சனா ஒரு வழியாக சமாளித்து அவனை குளிக்க அனுப்பிவிட்டு மாத்திரையை எடுத்து சாப்பிடுகிறாள். குளித்துவிட்டு பாத்ரூமில் இருந்து வெளியே வரும் செந்தில் எதிர்பாராமல் வழுக்கி விழுகிறான். இதில் அவனுக்கு இடுப்பு பகுதியில் அடிப்படுகிறது. வலியால் துடிக்கிறான். அவனைத் கைத்தாங்களாக தூக்கி அர்ச்சனா கட்டிலில் சாய்க்கிறாள். இனிமேல் எதுவும் முடியாது, கட்டிலில் படுத்தா என்ன? கட்டாந்தரையில படுத்தா என்ன? அதான் பவர் கட் ஆயிடுச்சே என்று செந்தில் கூறுகிறான்.

அடுத்த காட்சியில் வெண்பாவின் அறைக்கு பார்வதி வருகிறாள். தனது அண்ணி ஏன் உங்களைத் தேடி வந்தார்கள், உங்களிடம் என்ன கேட்டாங்க, நீங்க ஏதோ என்கிட்ட மறைக்கிறீங்க என்று கூறுகிறாள். அதற்கு, சாந்தி, வெண்பா மேடம் ஏன் உங்க கிட்ட மறைக்கனும் பொய் சொல்ல வேண்டிய அவசியம் என்ன இருக்கு என்று கேட்கிறாள். அதற்கு பார்வதி நீங்க எங்க அண்ணி ரூம்க்கு ஏன் போனீங்க என்று கேட்டு ஷாக் கொடுக்கிறாள். இதைக் கேட்ட வெண்பா, அடியே சாந்தி உனக்கு பொய் சொல்லவும் தெரியல எதையும் மாட்டிக்காம மறைக்கவும் தெரியல என்று திட்டுகிறாள். பிறகு, அர்ச்சனா தனக்கு குழந்தை பிறக்காமல் இருப்பதற்கு மாத்திரைக் கேட்டதைப் பற்றி கூறுகிறாள். இதைக் கேட்டு ஷாக் ஆகும் பார்வதி, அப்படியா, எங்க அண்ணிக்கு கல்யாணம் ஆகி 4-5 வருஷம் ஆகுது. ஆனால், எங்க அம்மா அது பற்றி கேட்டதில்லை. ஏன் இவங்க யாருக்கும் தெரியாமால் மாத்திரை சாப்பிடறாங்க என்று கேட்கிறாள். இதை உங்க அம்மா கிட்ட சொல்வியா என்று வெண்பா கேட்க அதற்கு பார்வதி, இப்ப சொல்ல மாட்டேன். ஆனால், சரியான நேரத்தில் சொல்வேன். இனிமேல் எங்க அர்ச்சனா அண்ணி குடுமி எங்கையிலா என்ன பண்றேன் பாரு… நான் இங்க வந்ததை அர்ச்சனா கிட்ட சொல்லாதீங்க என்று கூறிவிட்டு செல்கிறாள்.

அடுத்த காட்சியில், வெண்பா பெட்ரூமில் படுத்துக்கொண்டிருக்கிறாள். தூங்கப் போகுமுன் சாந்தியிடம் தனது விட்டமின் மாத்திரையை எடுத்துக்கொண்டு வரச் சொல்கிறாள். மாத்திரை மாறியது தெரிந்துவிடுமோ என்று அட்டையில் இருந்து தனியா ஒரு மாத்திரையை மட்டும் எடுத்து வந்து தருகிறாள். வெண்பாவும் அந்த மாத்திரையை சாப்பிட்டுவிட்டு தூங்குகிறாள். சாந்தியும் அறைக்கு செல்கிறாள். கொஞ்ச நேரத்திலேயே வெண்பாவுக்கு வயிற்று வலி ஏற்படுகிறது. வலியால் துடிக்கிறாள். சாந்தியைக் கூப்பிடுகிறாள். சாந்தி எங்கே மாத்திரை மாறியது தெரிந்துவிடுமோ என்று முழிக்கிறாள். வெண்பா எதுவும் தப்பா சாப்பிடலையே பிறகு ஏன் வயிறு வலிக்குது என்று யோசிக்கிறாள். பிறகு, சாந்தி மாத்திரை கொடுத்ததை நினைத்துப் பார்க்கிறாள். சாந்தி என்னோட மாத்திரையை போய் எடுத்து வா என்று கூறுகிறாள். சாந்தியும் பயந்துகொண்டே மாத்திரையை எடுத்துகொண்டு வந்து தருகிறாள். மாத்திரையைப் பார்த்து சாந்தி, அர்ச்சனாவுக்கு கொடுக்க சொன்ன மாத்திரையை தனக்கு மாற்றி கொடுதுவிட்டாள் என்பதை அறிந்து வெண்பா சாந்தியை திட்டுகிறாள்.

நான் மாத்திரையை எடுத்துக்னு போனு அனுப்பின அப்போ ஒரு சந்த்தம் கேட்டுச்சு அப்பவே நான் நினைச்சேன். மாத்திரை மாறிப்போச்சே அதை ஏண்டி எங்கிட்ட மறைச்ச என்று வெண்பா சாந்தியை திட்டுகிறாள். சாந்தி என்னை மன்னிச்சுடுங்கமா… என்று கூறுகிறாள். பிறகு, தனது ஹேண்ட் பேக்கை எடுத்து வந்து பார்த்து வேறு ஒரு மருந்தை கொடுக்கிறாள். இதையடுத்து, சாந்தி அம்மா உங்களுக்கும் அர்ச்சனாவுக்குமான மாத்திரைதான் மாறிப்போச்சு ஏன்னா ரெண்டு பேருக்கும் ஒரே கலர் சிவப்பு மாத்திரை அதான். மத்தபடி அஞ்சலிக்கு வெள்ளை மாத்திரையை சரியாக கொடுத்துவிட்டேன் என்று என்கிறாள். ஆனால், இந்நேரத்துக்கு வலி வந்திருக்க வேண்டுமே என்று கேட்கிறாள். அஞ்சலி ரூம் பக்கம் போகும்போது ஏதாவது சத்தம் கேட்டதா? என்று கேட்கிறாள். அப்படி எதுவும் இல்லை என்று சாந்தி கூறுகிறாள். எல்லாம் காலையில் தெரியும் என்று கூறுகிறார்கள். ஒருவழியாக சமாளிக்கிறாள்.

இதனிடையே, சந்தியா சரவணனுக்கு லெட்டர் எழுத முயற்சி செய்கிறாள். ஆனால், ஒன்றுகூட சரியாக வரவில்லை. பிறகு, இதெல்லாம் எதுவும் சரியாக வராதுங்க என்று கூறிவிட வேண்டியதுதான் என்று சந்தியா முடிவு செய்கிறாள்.

அடுத்த நாள் காலையில் ரிசார்ட்டில் வெண்பாவும் சாந்தியும் அமர்ந்திருக்கிறார்கள். அப்போது அர்ச்சனா அங்கே வருகிறாள். மாத்திரை கொடுத்ததுக்கு நன்றி சொல்கிறாள். இதற்கு வெண்பா, சாந்தி மாத்திரை மாற்றி கொடுத்துவிட்டதை சொல்கிறாள். இதைக் கேட்டு அதிர்ச்சியாகும் அர்ச்சனா, ஆனால், தனது கணவர் செந்தில் குளித்துவிட்டு வெளியே வரும்போது வழுக்கி விழுந்துவிட்டதைக் கூறி சந்தோஷப்படுகிறாள். ஆனால், இன்னும் ஒருவாரம் எப்படி சமாளிக்கப் போகிறேன்னு தெரியலையே… அப்போ அந்த மாத்திரை யாருக்கு போச்சு… எனக்கு அந்த மாத்திரை எப்போ கிடைக்கும் என்று கேட்கிறாள். அதற்கு சாந்தி உண்மையை சொல்ல வரும்போது, வெண்பா அவலை அதட்டிவிட்டு அதெல்லாம் விடு உனக்கு வேற மாத்திரையைத் தருகிறேன் என்று கூறுகிறாள். அர்ச்சனா போன பிறகு, சாந்தி வெண்பாவிடம் ஏம்மா அவங்க நாத்தனார் பார்வதி வந்து விசாரிச்சுட்டு போனதை ஏன் சொல்லலை என்று கேட்கிறாள். அதற்கு பார்வதி, தேவையில்லாத விஷமெல்லாம் நமக்கு எதுக்கு… அப்படியே சொல்வதாக இருந்தாலும் அதனால நமக்கு என்ன லாபம்னு பார்க்கனும் என்று கூறுகிறாள். இத்துடன் இன்றைய எபிசோடு நிறைவடைகிறது.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"

Vijay Tv Barathi Kannamma Serial Raja Rani
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment