Advertisment

Vijay TV Serial: குழந்தையை தொலைச்சிட்டு அந்த தப்பை கண்ணம்மா மேல போடறியா பாரதி?

Barathi Kannamma Serial: “நீ குழந்தையை தொலைசிட்டு அந்த தப்பை கண்ணம்மா மேல போடறியா?” என்று பாரதியிடம் கடுமையாக கேட்கிறார்.

author-image
WebDesk
New Update
Barathi Kannamma Serial today episode, Soundarya and Venu shouting Barathi for missing Hema, Soundarya, Venu, விஜய் டிவி, பாரதி கண்ணம்மா சீரியல், சௌந்தர்யா, பாரதி, வேணு, அகில், ஹேமா, கண்ணம்மா, பாரதி கண்ணம்மா, soundarya shouting Barathi for missing Hema, kannamma, akil and barathi gighting, vijay tv, barathi kannamma serial, tamil tv serial news

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாரதி கண்ணம்மா சீரியலில் இன்றைய எபிசோடில் நடக்கும் நிகழ்வுகளை சுவாரஸ்யம் குறையாமல் இங்கே காணலாம்.

Advertisment

பாரதி தனது மகள் ஹேமாவை கண்ணம்மாதான் கடத்தியதாக போலீசில் புகார் அளிக்கிறார். புகாரின் பேரில் போலீசார் கண்ணம்மாவை கைது செய்து விசாரணைக்காக ஸ்டேஷனுக்காக அழைத்து செல்கிறார்கள்.

இன்றய எபிசோடில், பாரதி ஹேமாவை அழைத்து சென்று ரொம்ப நேரம் ஆகிவிட்டது, அவர்கள் இன்னும் வீட்டுக்கு திரும்ப வராததால் சௌந்தர்யா மிகவும் வருத்தமாக இருக்கிறார். பாரதிக்கு பல முறை போன் செய்கிறார் ஆனாலும் அவன் எடுக்காததால் மேலும் வருத்தம் அடைகிறார். சௌந்தர்யா, தன்னை பாரதி வேண்டுமென்றே தவிர்க்கிறான் என்று கணவர் வேணுவிட கூறி வருத்தப்படுகிறார்.

வேணுவும் தனது மகன் பாரதிக்கு போன் செய்கிறார். ஆனால், பாரதி அவரது போன் அழைப்பை துண்டிக்கிறான். பாரதியின் மருத்துவமனைக்கு போன் செய்து விசாரிக்கிறார்கள் அங்கேயும் பாரதி வரவில்லை என்று கூறுகிறார்கள். பாரதியும் ஹேமாவும் வரும் வரை காத்திருப்பதுதான் ஒரே வழி என்று இருவரும் கவலையுடன் வீட்டில் காத்திருக்கிறார்கள்.

அடுத்த காட்சியில், அஞ்சலியும் அகிலும் மருத்துவமனைக்கு பரிசோதனைக்காக சென்றிருக்கிறார்கள். கர்ப்பமாக இருக்கும் அஞ்சலி பரிசோதனை செய்ய ரிஷப்ஷனில் அகிலுடன் காத்திருக்கும்போது, வயிற்றில் குழந்தை அசைவதை கம்ப்யூட்டரில் காட்டுவார்களா என்று ஆர்வமாக கேட்கிறான். உனக்கு குழந்தையைப் பார்க்க ஆர்வமாக இருக்கிறதா? என்று கேட்கிறாள். அதற்கு ஆமாம் நம்முடைய வாரிசு இல்லையா அதனால்தான் ஆர்வமாக இருக்கிறேன் என்று அகில் கூறுகிறான்.

அஞ்சலி பரிசோதனை செய்ய டாக்டரைப் பார்க்க தனியாக உள்ளே செல்கிறாள். அங்கே, தனக்கு அடிக்கடி நெஞ்சு வலி வருவது பற்றி டாக்டரிடம் கூறுகிறாள். அதற்கு டெஸ்ட் எடுத்து பார்க்கலாம் என்றும் கூறும் டாக்டர், ரிசல்ட் இன்னும் சில நாட்கள் கழித்துதான் வரும் என்று கூறுகிறார். ஏதாவது பிராப்ளம் என்றால் தன்னிடம் மட்டும் சொல்லுங்கள். தனது கணவரிடம் சொல்ல வேண்டாம். அவர் ரொம்ப பயப்படுவார் என்று டாக்டரிடம் கேட்டுக்கொள்கிறாள். டாக்டரும் சரி என்று கூறுகிறார்.

டாக்டர் ஒரு நர்ஸை அழைத்து ஒரு டெஸ்ட் லிஸ்ட் எழுதி அஞ்சலிக்கு டெஸ்ட் எடுக்க சொல்கிறார். பின்னர், எல்லாம் டெஸ்ட்களையும் எடுத்து முடித்துவிட்டு அஞ்சலி வெளியே வருகிறாள். என்ன ஆச்சு டெஸ்ட் எடுத்தாச்சா என்று கேட்கும் அகிலிடம் அஞ்சலி பொய் சொல்கிறாள். லேப் டெச்னிஷியன் வரவில்லை, அதனால் இன்னொரு நாள் டெஸ்டுக்கு வர சொல்லிவிட்டார்கள் என்று கூறுகிறாள்.

சௌந்தர்யா தனது மகன் பாரதியும் பேத்தி ஹேமாவும் ஏன் இன்னும் வீட்டுக்கு வரவில்லை என வருத்தத்தில் இருக்கிறார். வீட்டுக்குள் இருந்து வெளியே வந்து வாசலைப் பார்த்துக்கொண்டிருக்கிறார். அப்போது, அகிலும் அஞ்சலியும் மருத்துவமனையில் இருந்து வீட்டுக்கு வருகிறார்கள். கொஞ்ச நேரத்தில், பாரதி மட்டும் தனியாக வீட்டுக்கு வருகிறான். வீட்டில் உள்ளவர்கள் அனைவரும் ஹேமா எங்கே என கேட்க, பாரதி அவள் காணாமல் போய்விட்டதாக கூறுவதைக் கேட்டு அனைவரும் அதிர்ச்சி அடைகிறார்கள்.

ஆனால், பாரதி, “ஹேமாவை கடத்தி சென்றது யார் என எனக்கு தெரியும், அவர்கள் மீது போலீசில் புகார் கொடுத்துவிட்டுதான் வந்திருக்கிறேன்” என்று கூறுகிறான். ஹேமாவை வேறு யாரும் கடத்தவில்லை அந்த கண்ணம்மாதான் கடத்திச் சென்றால் என்று பாரதி கூறுவதைக் கேட்டு சௌந்தர்யா கடும் கோபம் அடைகிறார்.

publive-image

கண்ணம்மா மீது பாரதி தேவையில்லாமல் சந்தேகப்படுவதாக வீட்டில் உள்ள சௌந்தர்யா வேணு என அனைவரும் கூறுகிறார்கள். அப்போது அகில் கண்ணம்மாவை அண்ணி என குறிப்பிட்டு பேசுகிறான். அதனால், கோமடையும் பாரதி கோபமாகி “யாருடா அண்ணி” என தனது தம்பி அகிலின் சட்டையைப் பிடித்து சண்டை போடுகிறான்.

இதைக் கேட்ட வேணு, “நீ குழந்தையை தொலைசிட்டு அந்த தப்பை கண்ணம்மா மேல போடறியா?” என்று பாரதியிடம் கடுமையாக கேட்கிறார். சௌந்தர்யா, “ஒரு குழந்தையை வெளியே கூட்டிட்டுபோய் திரும்ப கூட்டிட்டு வர துப்ப இல்லை… பெருசா எகிறிட்டு வர” கோபத்துடன் பாரதியை திட்டுகிறார். சௌந்தர்யா திட்டிய பிறகுதான், பாரதி அகிலின் சட்டையில் இருந்து கையை எடுக்கிறான்.

அப்போது, சௌந்தர்யா தனது செல்போனை எடுத்து யாருக்கோ கால் செய்கிறார். அம்மா சௌந்தர்யா போன் செய்வதைப் பார்த்த பாரதி “நீங்க வக்கீலுக்கு தான் போன் பண்றீங்க என எனக்கு தெரியும். இரண்டு நாள்தான் அதற்குள் பாஸ்போர்ட் வந்துடும், நானும் ஹேமாவும் போய்க்கிட்டே இருப்போம். அதற்கு பிறகு அந்த கண்ணம்மாவை கூட்டிட்டு வந்து என்னவேனும்னாலும் பண்ணுங்க…” என்று கோபமாக கூறுகிறான்.

தொடர்ந்து பேசும் பாரதி, “இனி நான் அமெரிக்காவில் தான் இருப்பேன்… நீங்கள் யாரும் எனக்கு வேண்டாம்” என்று கூறிவிட்டு பாரதி கோபமாக வீட்டில் இருந்து கிளம்பி வெளியே போகிறான்.

இதையடுத்து, சௌந்தர்யா, “என்ன நடந்தது என கண்ணம்மாவிடம் கேட்க போகிறேன்” என்று கூறிவிட்டு போலீஸ் ஸ்டேஷனுக்கு கிளம்புகிறார். அகிலும் அவனுடைய அப்பா வேணுவும் ஹேமாவை தேடலாம் என செல்கிறார்கள். இத்துடன் இன்றைய எபிசோடு நிறைவடைகிறது.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"

Vijay Tv Bharathi Kannamma Serial Barathi Kannamma Serial
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment