திரைப்பட எழுத்தாளர் சங்க தேர்தலில் தலைவர் பதவிக்குப் போட்டியிட்ட இயக்குனர் பாக்யராஜ் வெற்றி பெற்றுள்ளார்.
தமிழ்நாடு திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்துக்கு 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை தேர்தல் நடத்தப்படுகிறது. 2 ஆண்டுகள் கடந்த நிலையில் இந்த ஆண்டுக்கான தேர்தல் செப்டம்பர் 11ம் தேதி நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.
இதையும் படியுங்கள்: கர்ப்பமா? என கேட்ட ரசிகர்; கோபத்துடன் கலாய்த்து பதில் அளித்த சீரியல் நடிகை ரேஷ்மா
அதன்படி, தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்கத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை தொடங்கியது. வடபழனி மியூசிக் யூனியனில் காலை 8 மணிக்கு தொடங்கிய தேர்தல் மாலை 4 மணி வரை நடைபெற்றது.
இந்த திரைப்பட எழுத்தாளர் சங்க தேர்தலில் தற்போதைய தலைவர் பாக்யராஜ் மீண்டும் போட்டியிட்டார். அவரை எதிர்த்து எஸ்.ஏ.சந்திரசேகர் போட்டியிட்டார்.
மேலும், பாக்யராஜ் அணியில் துணைத் தலைவர் பதவிக்கு ஜி கண்ணன், காரைக்குடி நாராயணன், செயலாளர் பதவிக்கு லியாகத் அலிகான், பொருளாளர் பதவிக்கு பாலசேகரன் ஆகியோர் போட்டியிட்டனர்.
இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகரன் தலைமையிலான அணியில், துணைத் தலைவர் பதவிக்கு மனோபாலா, ரவிமரியா, செயலாளர் பதவிக்கு மனோஜ்குமார், பொருளாளர் பதவிக்கு ரமேஷ் கண்ணா ஆகியோர் போட்டியிட்டனர்.
இந்த நிலையில் வாக்கு எண்ணிக்கை முடிந்து முடிவுகள் அறிவிக்கப்பட்டன. அதன்படி, திரைப்பட எழுத்தாளர் சங்க தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட இயக்குனர் பாக்யராஜ் வெற்றி பெற்றுள்ளார். தேர்தலில் 192 வாக்குகள் பெற்று பாக்கியராஜ் வெற்றி பெற்றுள்ளார். அவரை எதிர்த்து போட்டியிட்ட இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகர் 152 வாக்குகள் பெற்றார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil