Bharathi Kannamma Serial : விஜய் டிவி-யில் ஒலிபரப்பாகி வரும் ‘பாரதி கண்ணம்மா’ சீரியலில், கண்ணம்மாவுடன் பாரதிக்கு திருமணமானாலும், அவன் மீது அஞ்சலி, வெண்பா என இரண்டு பெண்கள் ஆசைப்படுகின்றனர். கண்ணம்மாவிடமிருந்து பாரதியைப் பிரித்து, அந்த இடத்திற்கு தாங்கள் வர வேண்டும் என்பதே அவர்கள் ஒவ்வொருவரின் எண்ணமும்.
பாரதியின் அம்மா செளந்தர்யாவுக்கு கறுப்பு என்றாலே பிடிக்காது. கண்ணம்மா கறுப்பாக இருப்பதால் அவளை வெறுக்கிறார். ஆனால் அவளின் நல்ல குணத்தைப் பார்த்து பாரதிக்கு மிகவும் பிடித்துப் போகிறது. கண்ணம்மா அப்பாவின் இளையதாரத்தின் மகள் அஞ்சலி. அவளை பாரதியின் தம்பி அகிலனுக்கு பெண் பார்க்கப் போகிறார்கள். ஆனால் அவளுக்கோ, பாரதியைப் பிடித்து விடுகிறது. இருப்பினும் அவனை அடைவதற்காக, அகிலனை திருமணம் செய்துக் கொள்கிறாள்.
அக்கா என்றபோதிலும், கண்ணம்மாவுக்கு நிறைய தொல்லைகளைக் கொடுத்து வருகிறாள். போதாக்குறைக்கு, பாரதியுடன் மருத்துவ கல்லூரியில் படித்த வெண்பாவுக்கும், அவன் மீது காதல். இன்னொரு பெண்ணும் அவன் மீது ஆசைப்பட, அவளை கொல்வதற்காக விபத்து ஏற்படுத்துகிறாள் வெண்பா. அதில் பாரதிக்கும் அடிபட்டு விடுகிறது. தனக்காக அவன் காத்திருக்க வேண்டும் என்பதற்காக, இனி உனக்கு குழந்தை பிறக்காது, என பொய் சொல்லி விடுகிறாள் வெண்பா.
இதை நம்பிய பாரதி, திருமணத்திற்கு முன்பே கண்ணம்மாவின் பெற்றோர்களிடம் தனக்கு குழந்தைப் பிறக்காது என்ற விஷயத்தைக் கூறுகிறான். ஆனால் இது கண்ணம்மாவுக்கு தெரியப்படுத்தப் படவில்லை. அதனால் குழந்தை எப்போது பிறக்கும் என எதிர் நோக்கி காத்திருக்கிறாள் கண்ணம்மா.
பாரதிக்கு குழந்தை பிறக்கும் என்று வெண்பாவுக்கு தெரியும். பிறக்காது என்று பாரதி நினைத்துக் கொண்டு இருக்கிறான். இவர்கள் இரண்டு பேரும் சேரக் கூடாது என்று அஞ்சலி நினைக்கிறாள். பாரதி தனக்குத் தான் என வெண்பா நினைக்கிறாள். இதற்கிடையே மருத்துவராக இருக்கும் பாரதி, என்ன தான் ஃப்ரெண்டாக இருந்தாலும், வெண்பா சொல்வதை அப்படியே நம்பி விடுவானா? வேறு மருத்துவரிடம் தன்னை பரிசோதித்து பிரச்னையை தெளிவுப்படுத்திக் கொள்ளும் அடிப்படை பண்பில்லாமலா ஒரு மருத்துவர் இருப்பார் என்ற எண்ணம் பார்வையாளர்களுக்கு வருவதை தவிர்க்க முடியவில்லை.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.