Bigg Boss Tamil: பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன், நாளை மறுதினம் இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகிறது.
மூன்றாவது முறையாக கமல் ஹாசன் தொகுத்து வழங்கும் இந்நிகழ்ச்சியின் போட்டியாளர்கள் யார் யார் என்பதைத் தெரிந்துக் கொள்ள ஆர்வமுடன் இருக்கிறார்கள் ரசிகர்கள். இந்நிலையில் அஜித் நடித்திருக்கும் ‘நேர் கொண்ட பார்வை’ படத்தின் நாயகி ஒருவர் பிக்பாஸ் வீட்டுக்கு செல்லவிருப்பதாக நம்பத் தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஆகஸ்ட் 10-ம் தேதி வெளியாகும் இந்தப் படத்தில் வித்யா பாலன், ஷ்ரதா ஸ்ரீநாத், அபிராமி வெங்கடாச்சலம், ஆண்ட்ரியா தரியங் முக்கியத்துவம் வாய்ந்த கதாபாத்திரங்களி நடித்துள்ளார்கள். பாலிவுட் தயாரிப்பாளர் போனி கபூர் தயாரித்திருக்கும் இந்தப் படத்தை இயக்குநர் ஹெச்.வினோத் இயக்கியுள்ளார்.
இந்நிலையில் வித்யா பாலனும், ஷ்ரதா ஸ்ரீநாத்தும் வெவ்வேறு மொழிகளில் நிறைய படங்களில் ஒப்பந்தமாகியுள்ளதால், அவர்கள் உள்ளே செல்ல வாய்ப்பில்லை எனத் தெரிகிறது.
அப்படியெனில் ‘மிஸ் சென்னை’ பட்டத்தை வென்று பல விளம்பரப் படங்களில் நடித்திருக்கும் அபிராமி வெங்கடாச்சலம் தான் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டிருக்க வேண்டும் ‘கெஸ்’ பண்ணியிருக்கிறார்கள் நெட்டிசன்ஸ்!