பிக் பாஸ் நிகழ்ச்சியில் பிரியங்கா, நிரூப் மற்றும் அபிஷேக்குடன் சேர்ந்து கேங் ஆரம்பித்துள்ளதாக வெளியாகி உள்ள ப்ரோமோ வைரலாகி வருகிறது.
விஜய் டிவியின் பிக் பாஸ் நிகழ்ச்சி ஒரு வாரம் கடந்துள்ள நிலையில், நிகழ்ச்சியில் போட்டியாளர்களுக்கு இடையிலான மோதல் வெளிப்பட ஆரம்பித்துள்ளது. இந்தநிலையில், பிரியங்கா, நிரூப் மற்றும் அபிஷேக்குடன் சேர்ந்து கேங் உருவாக்கியிருப்பதாக ப்ரோமோ ஒன்று வெளியாகியுள்ளது.
அந்த ப்ரோமோவில், இந்த கேங் மேல நிறைய பேரு இப்ப வெறி ஆவாங்க, கரெக்ட்டா நாம மூணு பேரும் ஒரே மாதிரி லைக், டிஸ்லைக் போட்டிருக்கோம், இது நாம ஆரம்பிக்கணும்னு நினைச்சு ஆரம்பிக்கல, என பிரியங்கா கேங் ஆரம்பித்தது குறித்து சொல்கிறார். அப்போது அபிஷேக், அபினய் நீ அவன் மேல நிறைய அன்பு காட்டணும்னு நினைக்குறான் என சொல்ல, அவன பார்த்தா பாவமா இருக்கு, எனக்கு ஒண்ணும் பிரச்சனையில்லை என்கிறார் பிரியங்கா. பின்னர் அபிஷேக், இது ட்ரையல் தான், இனிமே தான் எல்லாம் இருக்கு என சொல்ல, அதுக்குள்ள அவன் கிளம்பிடுவான் என நிரூப் அபிஷேக்கை கலாய்க்கிறார். இதைக்கேட்டு பயங்கரமாக சிரிக்கிறாள் பிரியங்கா
இன்னொரு ப்ரோமோவில் அபிஷேக் வீட்டில் உள்ள சக போட்டியாளர்களைப் பற்றி கமெண்ட் செய்கிறார். அதில், நாடியா சங் வனிதா மாதிரி ரொம்ப வெளிப்படையா இருக்க போறாங்க, ஐக்கி பெர்ரியோட யாரும் பெருசா கனெக்ட் ஆக முடியாது, அவ ஒரு வினோதப் பிறவி என்கிறார். பின்னர் பாவனி நாமினேஷனில் இல்லாததற்கு காரணம் அவளோட கதை ரொம்ப பெரிய பாதிப்பை உருவாக்கியிருக்கு என அபிஷேக் சொல்கிறார்.
கடைசியாக, மக்களின் பார்வையில் இசைவாணி எப்படினா, இந்த பொண்ணுக்குள்ள நிறைய சோகம் இருக்கு, ஆனா அத அடிக்கடி வெளியே சொல்லுது, சாதாரணமாவே பேச மாட்டேங்குறாங்க என கலாய்க்கும் விதமாக சொல்கிறார். இதையெல்லாம் கேட்டு அபிஷேக்கிற்கு கை கொடுத்து ஆமோதிக்கிறார் இமான் அண்ணாச்சி.
இந்த ப்ரோமோக்களைப் பார்த்த ரசிகர்கள், போட்டியாளர்களுக்குள் மோதல் ஆரம்பித்துள்ளதால் இனி வரும் நாட்கள் சுவாரஸ்யமாக இருக்கும் என கூறிவருகின்றனர்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.