5 லட்ச ரூவாய்க்கு எவ்ளோ கதை சொல்ல வேண்டியிருக்கு...! கவினை மேடையில் களமிறக்கும் பிக்பாஸ்
'யப்பா டேய்.. அந்த 5 லட்சத்துக்கு தாண்டா போறேன்... விடுங்கடா என்னய்யா...' என்று வெளிப்படையாக சொல்லாமல், கடைசி வரை ட்ரிம் செய்யப்பட்ட மீசையில் மண் ஒட்டவிடாமலேயே வெளியேறினார் கவின்
ஷெரீன், லோஸ்லியா தர்ஷன், முகேன், சாண்டி ஆகிய ஐந்து சக்கரங்களுடன் இறுதிக் கட்டத்தை நோக்கி சுற்றிக் கொண்டிருக்கிறது பிக்பாஸ் சீசன் 3. இரண்டு நாட்களுக்கு முன்பு, 5 லட்சம் ஆஃபர் ஒன்றை பிக்பாஸ் கொடுக்க, 'இதற்கு தான் காத்திருந்தேன் கோபால்' என்று வாங்கிக் கொண்டு கவின் வீட்டை விட்டு வெளியேறிவிட்டார்.
Advertisment
ஆனால், அவர் வெளியேறிய நாள் நடந்த நிகழ்வுகள் தான் காமெடிக்கும் அப்பாற்பட்ட ஜென் நிகழ்வாக கருதப்படுகிறது. பிக்பாஸ் 5 லட்சம் ஆஃபர் பண்றார், தன்னை விட தர்ஷன், முகேன், சாண்டிக்கு தான் அதிக ஆதரவு மக்கள் மத்தியில் இருக்கிறது என்பது கவினுக்கு தெரியும். மற்ற போட்டியாளர்களுக்கு நன்றாகவே தெரியும்.
அது தெரிந்தும், 'நீ ஏன் இப்போ வெளியே போற?.... நீ ஏன் போகணும்?... உன்னை நம்பி வாக்களித்த மக்களுக்கு என்ன பதில் சொல்லப் போற? என்று சாண்டி உட்பட சக போட்டியாளர்கள் கவினை அன்பால் வறுத்தெடுத்தது தான் ஜென் தத்துவத்தை நமக்கு உணர்த்தியது.
'யப்பா டேய்.. அந்த 5 லட்சத்துக்கு தாண்டா போறேன்... விடுங்கடா என்னய்யா...' என்று வெளிப்படையாக சொல்லவும் முடியாமல், கடைசி வரை ட்ரிம் செய்யப்பட்ட மீசையில் மண் ஒட்டவிடாமலேயே வெளியேறினார் கவின்.
இந்நிலையில், இன்று சனிக்கிழமை வீக்கெண்ட் ஷோவில், கவினை மேடைக்கு அழைத்து வந்திருக்கிறாராம் பிக்பாஸ். ஏன் வெளியே சென்றேன் என்ற உண்மையை கவினே நேரில் வந்து சொல்லப் போகிறாராம்.