சுமார் இரண்டு வாரங்களே மிஞ்சியுள்ள நிலையில் பிக் பாஸ் 2 போட்டியில் நடைபெறும் இந்த வாரம் எவிக்ஷனில் மும்தாஜ் வெளியே செல்கிறார்.
Advertisment
மும்தாஜ் வெளியேற்றம் :
பிக் பாஸ் தமிழ் 2 நிகழ்ச்சியில், 100 நாட்களில் இன்னும் 2 வாரங்களே மிஞ்சியுள்ள நிலையில் இந்த வாரத்தின் எவிக்ஷன் சுற்று இன்று நடைபெறுகிறது. இந்த வாரத்தின் எவிக்ஷன் சுற்றில், ஜனனி, மும்தாஜ், விஜயலட்சுமி, ரித்விகா, பாலாஜி மற்றும் ஐஸ்வர்யா இடம்பெற்றனர்.
இதே வாரத்தில் டிக்கெட் டு ஃபினாலே டாஸ்கில் அதிர்ஷ்டவசமாக ஜனனி போட்டியில் வெற்றிபெற்றார். இதனால் இறுதி சுற்றுக்கு நேரடியாக தகுதி பெற்றார் ஜனனி. இதன் மூலம் அவர் எவிக்ஷனில் இருந்து காப்பாற்றப்பட்டார். இவரை தவிர்த்து, மீதம் இருந்தவர்களில் ரித்விகா அதிக வாக்குகள் பெற்று நேற்று காப்பாற்றப்பட்டார்.
இதையடுத்து இன்று நடைபெறும் எவிக்ஷன் சுற்றில், விஜயலட்சுமி, பாலாஜி காப்பாற்றப்பட, பதற்றமான சூழலில் மும்தாஜும் ஐஸ்வர்யாவும் நிறுத்தப்படுகின்றனர். கடந்த வாரமே ஐஸ்வர்யா எவிக்ட் செய்யப்படுவார் என்று எதிர்பார்த்த நிலையில், சேனலின் டி.ஆர்.பிக்காக காப்பாற்றப்பட்டார்.
ஐஸ்வர்யா காப்பாற்றப்பட்டதற்கு, மக்கள் முறையாக வாக்களிக்கவில்லை என்று குற்றம்சாட்டினார் கமல் மற்றும் அந்த சேனல் குழு. இந்த வாரமும் அதே வித்தையை காட்டுகிறது அந்த தனியார் சேனல். வழக்கம்போல டி.ஆர்.பிக்காக ஐஸ்வர்யாவை காப்பாற்றும் பிக் பாஸ் மும்தாஜை எவிக்ட் செய்கிறார்.
போட்டியிலிருந்து மும்தாஜை எவிக்ட் செய்த காரணத்திற்காக, மும்தாஜின் ஆர்மி மற்றும் ரசிகர்கள் அனைவரும் கடும் கோபத்தில் உள்ளனர். ஐஸ்வர்யாவை காப்பாற்றவே இப்படி ஒரு முடிவு எடுக்க