Advertisment

பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய சேரனின் உருக்கமான முதல் செய்தி!

Bigg Boss Tamil 3: கடினமான சூழல்களில் கூட தீர்க்கமான முடிவெடுத்து பார்வையாளர்களைக் கவர்ந்து வந்தார்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Bigg Boss Tamil 3, Bigg Boss Cheran

இயக்குநர் சேரன்

 Bigg Boss Cheran: 'பிக் பாஸ் 3' நிகழ்ச்சியில் மிகவும் ஆச்சரியமான போட்டியாளர்களில் ஒருவர் இயக்குநர் சேரன். அவர் விரைவில் வெளியேறுவார் என்று முன்கூட்டியே பலர் கணித்திருந்தாலும், கடினமான தருணங்களைக் கடந்து, நிகழ்ச்சியின் இறுதிக்கட்டம் வரை தாக்குப் பிடித்து, 91-ம் நாளில் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறினார்.

Advertisment

வீட்டை விட்டு வெளியேறிய சேரன், அவருடைய ட்விட்டரில் தனது முதல் பதிவை பதிவிட்டிருக்கிறார். அதில், “தலை வணங்கி நிற்கிறேன்.. எனது 91 நாட்கள் பிக்பாஸ் பயணத்தை சரியாக புரிந்துகொண்டு என்னை தாலாட்டி தட்டிக் கொடுத்து என் அன்பின் பக்கம் நின்ற நல் இதயங்களுக்கும் நன்றி.. நேர்மை, நற்பண்பு, உண்மையின் பக்கம் நிற்கும் நீங்களே தலைசிறந்த மனிதர்கள். மீண்டும் என்னை உங்களில் ஒருவனாக ஏற்றதில் மகிழ்ச்சி” என்று குறிப்பிட்டுள்ளார்.

பிக் பாஸ் வீட்டில் முதிர்ந்த சிந்தனைகளுக்கும், முடிவுகளுக்கும் பெயர் போன சேரன், கடினமான சூழல்களில் கூட தீர்க்கமான முடிவெடுத்து பார்வையாளர்களைக் கவர்ந்து வந்தார். எந்த நிலையிலும் நேர்மையைக் கை விடாத அவரின் குணம், மற்ற போட்டியாளர்களிடமிருந்து சேரனை தனித்துக் காட்டியது குறிப்பிடத் தக்கது!

Bigg Boss Tamil Cheran
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment