Bigg Boss Tamil 3: பிக்பாஸ் வீட்டிற்குள் இருக்கும் வனிதா விஜயக்குமார் தனிப்பட்ட வாழ்க்கையிலும் பரபரப்புக்கு பஞ்சமில்லாதவர். சில தினங்களுக்கு முன்னர் மகளை கடத்திவிட்டதாக, அவரது முன்னாள் கணவர் தெலுங்கானா போலீஸில் புகார் கொடுத்தார்.
இந்நிலையில் வனிதா விஜயக்குமாரின் கணவர் ராஜன் ஆனந்தை பற்றி, அவரது வக்கீல் சில விஷயங்களை ஊடகங்களிடம் தெரிவித்தார். 10 வயதான வனிதாவின் மகள் ஜோவிதாவிடம், தெலுங்கானா போலீஸ் தனியாக பேசியிருக்கிறார்கள். தனது அப்பா அவரது நண்பர்களுடன் வீட்டில் மது அருந்துவது, அவ்வப்போது சில பெண்கள் வந்து போவது, அவர்கள் வரும்போதெல்லாம், தான் வீட்டை விட்டு வெளியேற்றப்படுவது, இன்னும் சொல்ல முடியாத சில விஷயங்கள் என நிறைய விஷயங்களை போலீஸிடம் தெரிவித்திருக்கிறது அந்தக் குழந்தை. அதோடு தந்தையிடம் பாதுகாப்பு இல்லை என்றும், அம்மா வனிதாவுடன் தான் வசிக்க ஆசைப்படுகிறேன் என்றும் ஜோவிதா தெரிவித்திருக்கிறாள்.
Vanitha's daughter Jovitha
தெலுங்கானா போலீஸும், அவர்களுடன் வந்த மனித உரிமை அதிகாரிகளும் ஜோவிதா பேசியதை ரெக்கார்டு செய்ததுடன், அவர் பத்திரமாக இருக்கிறார் என்பதற்கு அடையாளமாக சில ஃபோட்டோக்களையும் எடுத்துள்ளனர். இதன் மூலம் ஜோவிதா தனது சொந்த விருப்பத்தின் பேரிலேயே அம்மா, வனிதாவுடம் தங்கியிருப்பது தெளிவாகிறது.