Advertisment

உள்ளே வந்த லாஸ்லியா குடும்பம்: தவித்த கவின், அழுத லாஸ்லியா...

Bigg Boss Tamil 3, Episode 80 Written Update: வீட்டிலுள்ள ஒவ்வொரு போட்டியாளர்களும் பேசியவற்றை அனைவர் முன்பும் போட்டுடைத்தார் சேரன். 

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Bigg Boss Tamil 3 day 80, 11.09.19,

Bigg Boss Tamil 3 day 80, 11.09.19,

Bigg Boss Tamil 3 Episode 80: நடிகர் கமல் ஹாசன் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் 3 நிகழ்ச்சி தற்போது இறுதிக் கட்டத்தை நெருங்கிக் கொண்டிருக்கிறது.  கவின், லாஸ்லியா, ஷெரின், வனிதா, தர்ஷன், முகென், சாண்டி ஆகியோர் மட்டுமே வீட்டில் இருந்த நிலையில் ரகசிய அறையில் இருந்த சேரனும் நேற்று வீட்டுக்குள் சென்றுவிட்டார். தவிர தர்ஷன், சாண்டி, கவின், ஷெரின், வனிதா ஆகிய 5 பேர் இந்த வாரம் நாமினேட் செய்யப்பட்டுள்ளனர்.

Advertisment

வனிதா: மத்தவங்களுக்கு தான் வில்லி, ஆனா பிள்ளைங்களுக்கு எப்போவும் ஹீரோயின் தான்!

பிக் பாஸின் 80-ம் நாளில் வனிதா, லாஸ்லியா இருவரும் கவின், சேரன் பற்றி பேசிக் கொண்டிருந்தனர். அப்போது அனைவருக்கும் ஃப்ரீஸ் டாஸ்க் சொன்னார் பிக்பாஸ், அந்த சமயத்தில் ரகசிய அறையிலிருந்த சேரன் விக்ரம் வேதா தீம் மியூசிக்குடன் பிக் பாஸ் வீட்டிற்குள் ரீ எண்ட்ரி ஆனார். மீண்டும் வீட்டிற்கு வந்த சேரனை ஒவ்வொருவரும் கட்டியணைத்து உற்சாகமாக வரவேற்பு கொடுத்தனர். தர்ஷன் ஒருபடி மேலே போய் சேரனை அப்படியே அலேக்காக தூக்கிவிட்டார். முகெனின் அம்மா, சகோதரி பற்றி பேசிய சேரன், ரகசிய அறை அத்தனை அற்புதமாக இருக்கிறது என்றார். ஆனால், இதில் கவின் மற்றும் மகிழ்ச்சியடையவில்லை.

தொடர்ந்து பேசிய சேரன், விளையாட்டை, விளையாட்டாக எடுத்துக்கொள்ள வேண்டும் என்று கவினுக்கு அறிவுரை வழங்கினார். கவின் பேசுவதைக் கேட்டால் அப்படியே கேட் மீது ஏறி ஓடி வந்துவிடலாம் போல் தோன்றுகிறது என்று குறிப்பிட்ட சேரன், வீட்டிலுள்ள ஒவ்வொரு போட்டியாளர்களும் பேசியவற்றை அனைவர் முன்பும் போட்டுடைத்தார்.

பின்னர் லாஸ்லியாவின் இரு சகோதரிகளும், அம்மாவும் முதலில் பிக் பாஸ் வீட்டிற்கு வந்தனர். அவர்களைப் பார்த்த லாஸ்லியா ஆனந்த கண்ணீர் வடித்தார். சேரன் இருக்கும் நம்பிக்கையில் தான், தாங்கள் இருப்பதாக லாஸ்லியாவின் அம்மா கூறினார். அவர்கள் யாரும் கவினை கண்டுக் கொள்ளவே இல்லை.

அதோடு லாஸ்லியாவுக்கு சில அறிவுரைகளையும் அவரது அம்மா வழங்கினார். ”நீ நீயாவே இரு, இது ஒரு போட்டி, இத போட்டியாவே பாரு. யாரும் யாருக்கும் உதவி பண்ண முடியாது. லாஸ்லியா இப்போ லாஸ்லியாவா இல்லை. நீ எதுக்கு வந்த? அவங்கவங்க போட்டியை விளையாடிட்டு இருக்காங்க. உன்னைப் பத்தி எனக்கு மட்டும் தான் தெரியும். நீ தனியா இருந்து விளையாடி வின் பண்ணனும். எல்லார் கிட்டயும் பேசு. உனக்காக யாரும் விட்டுக் கொடுக்கல. உன் கூட யாரும் கடைசி வர வரமாட்டாங்க. நாங்க தான் வருவோம். சேரன் அப்பா சொல்றத கேட்டிருக்கலாம். சில விஷயங்கள்ல அவருக்கு நீ ஆதரவா இல்ல. விட்டுக் கொடுக்குறோம்ன்னு சொல்லியே அவங்கவங்க நல்ல இடத்திற்கு போய்ட்டுருக்காங்க” என்றார்.

’இப்போ தான் போட்டிய புரிஞ்சிக்கிட்டேன்’ – சேரனுக்கு பதிலளித்த வனிதா!

பின்னர் லாஸ்லியாவின் அப்பா, பிக்பாஸ் வீட்டுக்குள் வந்தார். அப்போது ‘ஆனந்த யாழை மீட்டுகிறாய்’ பாடல் ஒலித்தது. அப்பாவைக் கண்ட லாஸ்லியா அவரது காலில் விழுந்து கதறி அழுதார். லாஸ்லியாவின் குடும்பத்தினரில், அவரது அப்பா மட்டுமே கவினை கட்டியணைத்து கை கொடுத்தார்.

”நீ என்ன சொல்லி இங்க வந்த. உன்ன நான் அப்படியா வளத்தேன். தலை குனிஞ்சு வாழக்கூடாது. பாக்குறவங்க எல்லாம் காறிதுப்புற அளவுக்கு வச்சிட்ட. எல்லாத்தையும் தூக்கி எறிஞ்சிட்டு உள்ள வா. வந்த வேலையை விட்டுட்டு என்ன செய்ற. காசு எனக்கு தேவையில்ல. அதுக்கு பிச்சையெடுத்துட்டு போவேன். வந்த வேலையை மட்டுமே நீ பாரு. விளையாட்ட விளையாட்டா விளையாடணும். மத்த எல்லாத்தையும் தூக்கி எறிஞ்சிடு. உன்னைப் பத்தி நீ தெரிஞ்சுக்கணும். நம்ம ஜனம் இப்படியும் பேசுவாங்க, அப்படியும் பேசுவாங்க. நீ எப்படிப்பட்ட ஆளு. அப்பாவுக்கே புத்திமதி சொல்ற ஆளு. எனக்கு நெருக்கமானவங்க மகளை காசுக்காக விட்டுட்டேன்னு சொல்றாங்க. நீ எப்போ வேணும்னாலும் வா.. நாளைக்கு வந்தாலும் ஓகே தான்.” என்று கோபம் கலந்த அறிவுரையைக் கூறினார்.

தொடர்ந்து கவினிடம் பேசிய லாஸ்லியாவின் அப்பா, ”கவின் இதையெல்லாம் தூக்கி எறிஞ்சிட்டு விளையாட்ட விளையாடுங்க. நீங்க ஜெயிச்சாலும் ஓகே, யார் ஜெயிச்சாலும் ஓகே தான். அழ வேணாம். பிச்சையெடுத்துடலாம், ஆனா தலை குனிஞ்சு வாழக் கூடாது. வின் பண்றது முக்கியமில்ல தைரியமா நல்ல பேரை வாங்கணும். என்னப் பாத்து, என்ன கல்யாணத்துக்கு போறீங்களான்னு என் நண்பர்கள் கேக்குறாங்க. அப்போ எனக்கு எவ்வளவு வேதனையா இருக்கும்?” என்று தனது ஆதங்கத்தைக் கூறினார்.

தொடர்ந்து பேசிய லாஸ்லியா குடும்பத்தினர், “கமல் ஹாசன் முன்னாடி கால் மேல கால் போட்டு உக்காரலாமா? எப்போவும், நீ அப்படித்தான் செய்ற.. அவர் எவ்வளவு பெரிய இடத்துல இருக்காரு..? நம்ம வீட்ல நீ அப்படியிருக்கலாம், ஆனா இந்த நிகழ்ச்சிய எத்தனை பேர் பாத்துட்டு இருக்காங்க?” என்றுக் கேட்க, “மரியாதை மனசுல இருந்தா போதும்” என்றார் லாஸ்லியா.

லாஸ்லியாவின் குடும்பம் சேரனையும் அழைத்து, லாஸ்லியாவுக்கு அறிவுரை சொல்லிக் கொண்டிருந்தார்கள். அப்போது கவின் தனியாக அமர்ந்து கதறி அழுதார். மற்ற போட்டியாளர்கள் கவினை கண்ட்ரோல் பண்ண முயன்றார்கள். வீட்டினரின் அறிவுரையை லாஸ்லியா ஏற்றுக் கொண்டு விளையாட்டில் கவனம் செலுத்துவாரா என்பது, இனி வரும் நாட்களில் தெரியும்...

 

Bigg Boss Tamil Bigg Boss
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment