வனிதா வெளியேறிய பிறகு, கவின் - சாக்ஷி - லோஸ்லியா முக்கோண காதலை வைத்து ஓட்டிய ஃபிலிம் நேயர்களுக்கு சலித்துப் போக, சுவாரஸ்ய டாஸ்க் ஒன்றை கையில் எடுத்திருக்கிறார் பிக்பாஸ்.
அதாவது, போட்டியாளர்களை இரண்டு அணிகளாக பிரித்து, அவர்கள் இரண்டு கிராமங்களைச் சேர்ந்தவர்களாக மாற்றப்பட்டுள்ளனர். இதற்கு நாட்டாமையாக சேரனும் மைனராக சரவணனும் என ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பாத்திரம் வழங்கப்பட்டுள்ளது.
வழக்கம் போல, என்ன விஷயமாக இருந்தாலும், ஓப்பனாக பேசுகிறேன் பேர்வழி என்று, தேவையே இல்லாமல் அனாத்தும் மீரா, இந்த டாஸ்க்கிலும் சேரனுடன் மல்லுக்கு நிற்கிறார். டாஸ்க்கை தாண்டி டென்ஷனான சேரன் ஹை வால்யூமில் மீராவிடம் எகிற, அதை அப்படியே படம் பிடித்து தபு சிக்கு தபு சிக்கு பிக்பாஸ் புரமோவாக வெளியிட்டிருக்கிறார்.
யம்மா நீ வாய வச்சிக்கிட்டு சும்மாவே இருக்க மாட்டியா!! எப்போ பார்த்தாலும் நயி நயினுட்டு!!