Bigg Boss vanitha vijaykumar introduce his friends on social media: தன்னுடைய நண்பர்கள் மற்றும் தனக்கு பிடித்தமானவர்களை சமூக வலைதளங்களில் அறிமுகம் செய்துள்ளார் நடிகை வனிதா விஜயக்குமார்.
தமிழ் சினிமாவில் 90 களில் விஜய் நடிப்பில் வெளியான சந்திரலேகா திரைப்படம் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் நடிகை வனிதா. பின்னர் ஒரு சில படங்களில் நடித்துள்ள நிலையில், சில சீரியல்களிலும் நடித்துள்ளார்.
பின்னர் திரைத்துறையை விட்டு விலகி இருந்தவர், விஜய் டிவியின் சூப்பர் ஹிட் ஷோவான பிக் பாஸ் மூலம் மீண்டும் லைம்லைட்டுக்கு வந்தார். அதன் பின் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டு டைட்டில் வின்னர் ஆனார். தற்போது ஒரு சில படங்களிலும் வனிதா நடித்து வருகிறார்.
இதற்கிடையில் நடிகை வனிதா விஜயகுமார் பிக் பாஸ் அல்டிமேட் ஷோவில் கலந்துக் கொண்டார். இருப்பினும் 24 மணி நேரமும் ஓடிடியில் ஒளிப்பரப்பாகி வரும் இந்த நிகழ்ச்சியில் இருந்து பாதியிலேயே வெளியேறிவிட்டார். Mental health பாதிக்கப்படுகிறது என கூறி வனிதா வெளியேறினார்.
இதையும் படியுங்கள்: நடிகர் சிம்புவிடம் மனிதநேயத்தை எதிர்பார்ப்பது மிகப்பெரிய தவறு.. பால் முகவர்கள் சங்கம் கண்டனம்!
இந்நிலையில், ஒரு நிகழ்ச்சியில் கலந்துக் கொண்ட நடிகை வனிதா, அங்கு அவரது நண்பர்களுடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில் பாடகர் விஜய் யேசுதாஸ் உடன் எடுத்து கொண்ட புகைப்படங்களை பகிர்ந்து, எனக்கு பிடித்த பாடகர், சிறந்த நண்பர் என பதிவிட்டுள்ளார்.
அடுத்ததாக நடிகர் ஆதியுடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை பகிர்ந்து, என்னுடைய தம்பி, குழந்தைப் பருவ தோழன் என பதிவிட்டுள்ளார்.
அடுத்ததாக, விஜய் டிவியின் ப்ரோக்ராமிங் ஹெட் பிரதீப் மில்ராய் உடன் எடுத்த புகைப்படங்களை பகிர்த்து, ரியல் பாஸ் என பிரதீப் மில்ராயை குறிப்பிட்டுள்ளார். மேலும், அற்புதமான இரவு, பழைய நண்பர்களுடனான சந்திப்பு, புதிய நண்பர்களுடன் அறிமுகம் என்றும் பதிவிட்டுள்ளார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.