Advertisment

பாலிவுட் நடிகையின் வீட்டில் கொள்ளை.. தமிழை உயர்த்திப் பிடித்த இசையமைப்பாளர்.. மேலும் செய்திகள்

இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த பர்ஸ்ட்லுக் போஸ்டரை நடிகர் ஆர்யா தன்னுடைய சமூக வலைதளத்தில் வெளியிட்டார்.

author-image
WebDesk
New Update
பாலிவுட் நடிகையின் வீட்டில் கொள்ளை.. தமிழை உயர்த்திப் பிடித்த இசையமைப்பாளர்.. மேலும் செய்திகள்

பிரபல பாலிவுட் நடிகையான சோனம் கபூரின் வீட்டில் ரூ.2.4 கோடி மதிப்பிலான நகை, பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.

Advertisment

இந்தத் தகவல் திரையுலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரபல நடிகர் அனில் கபூரின் மகளான சோனம் கபூரின் கணவர் ஆனந்த் அகுஜா. திருமணம் முடிந்தபின், இருவரும் டெல்லியில் வசித்து வருகின்றனர்.

கர்ப்பிணியாக உள்ள இவர், சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராமில் கர்ப்பகால போராட்டம் பற்றி கூறியிருந்தார்.

இந்நிலையில், கடந்த பிப்ரவரி 11ஆம் தேதி இவர்களது வீட்டில் இருந்து நகை மற்றும் பணம் கொள்ளை போயிருக்கிறது.

கொள்ளை நடந்த 2 வாரங்களுக்கு பின்னர், கடந்த பிப்ரவரி 23ந்தேதி அவர்கள் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. வீட்டில் இருந்து ரூ.2.4 கோடி மதிப்பிலான நகை மற்றும் பணம் கொள்ளை போயுள்ளது என காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக வழக்குப் பதிவு செய்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஹன்சிகா நடிக்கும் புதிய படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர்

நடிகை ஹன்சிகா தற்போது அறிமுக இயக்குனர் ஜே.எம் ராஜா சரவணன் இயக்கும் புதிய படமொன்றில் நடித்து வருகிறார். இந்த படத்திற்கு 'ரவுடி பேபி' என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த படத்திற்கு இசையமைப்பாளர் சாம் சி.எஸ் இசையமைக்கிறார்.

ரவுடி பேபி படத்தில் ஹன்சிகாவுடன் இணைந்து சத்யராஜ், மீனா, ராம்கி, சோனியா அகர்வால், ராய் லட்சுமி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த நிலையில் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த பர்ஸ்ட்லுக் போஸ்டரை நடிகர் ஆர்யா தன்னுடைய சமூக வலைதளத்தில் வெளியிட்டார்.

ஹன்சிகா தற்போது 'பாட்னர்' திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். மேலும் அவர் நடித்துள்ள 'மஹா' திரைப்படம் வருகிற 28-ந்தேதி வெளியாக உள்ளது.

தமிழை உயர்த்திப் பிடித்த இசையமைப்பாளர்

‘ழ’கரம் ஏந்திய தமிழணங்கு என்ற புகைப்படத்தை தனது டுவிட்டர் பக்கத்தில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் பதிவிட்டுள்ளார்.

கவிஞர் பாரதிதாசனின் வரிகளை குறிப்பிட்டு பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் கருத்து தெரிவித்துள்ளார்.

இதன்படி புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் எழுதிய தமிழுக்கும் அமுதென்று பேர் என்ற கவிதையில் வரும், ‘இன்பத் தமிழ் எங்கள் உரிமைச்செம் பயிருக்கு நேர்’ என்ற வரிகளை ஏ.ஆர்.ரகுமான் சுட்டிக்காட்டி பதிவு ஒன்றினை இட்டுள்ளார்.

இதுதொடர்பாக தனது டுவிட்டர் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில், ழகரம் ஏந்திய தமிழணங்கு என்ற வார்த்தைகளை தாங்கிய போட்டோ ஒன்றை ஏ.ஆர்.ரகுமான் பதிவிட்டிருக்கிறார்.

அதில் 'ழ' கரத்தை தங்கிய பெண் தாண்டவமாட, கீழே 'தமிழணங்கு' என்றும், புரட்சிக்கவிஞரின் பாடல் வரிகளும் அதில் இடம்பெற்றுள்ளன.

பீஸ்ட் மோடு பாடல் வெளியானது

நடிகர் விஜய் நடித்துள்ள பீஸ்ட் படம் வரும் 14 ஆம் தேதி வெளிவர இருக்கிறது. இந்த படத்தில் இருந்து ஏற்கெனவே வெளியான அரபிக்குத்து மற்றும் ஜாலியோ ஜிம்கானா ஆகிய பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

இதையும் படியுங்கள்: விஜய் இல்லாத அரபிக்குத்து பாடல்… ரசிகர்கள் ஏமாற்றம்

இந்த நிலையில், தற்போது பீஸ்ட் மோட் என்ற மூன்றாவது பாடலை வெளியிடுவதாக படக்குழு நேற்று அறிவித்து இருந்தது.

அதன்படி பாடல் வெளியானது. பாடலாசிரியர் விவேக் எழுதியுள்ள அந்தப் பாடலை இசை அமைப்பாளர் அனிருத் பாடியுள்ளார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil Cinema
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment