முன்னணி சேனல்களுக்கு இணையாக சீரியல்கள் ஒளிபரப்பி வந்த கலர்ஸ் தமிழ் சேனலில் இது சொல்ல மறந்த கதை சீரியல் திடீரென முடிக்கப்பட்ட நிலையில், தற்போது நம்ம மதுரை சிஸ்டர்ஸ் என்ற சீரியலும் முடித்தக்கொள்ளப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
குறுகிய காலத்தில் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வரும் கலர்ஸ் தமிழ் சேனலில் தொடக்கத்தில் டப்பிங் சீரியல் ஒளிபரப்பாகி வந்தது. ஆனால் அடுத்ததடுத்து நேரடி தமிழ் சீரியலிகளை ஒளிபரப்பி வந்தது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அந்த வகையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தொடங்கப்பட்ட இது சொல்ல மறந்த கதை சீரியல் கலர்ஸ் தமிழ் சேனலுக்கு நல்ல பெயரை பெற்று தந்தது.
முன்னணி சீரியல் நடிகையா ரஜிதா மகாலட்சுமி சாதனா என்ற லீடு ரோலில் நடித்து வந்த இந்த சீரியலில் நடிகர் விஷ்ணு நாயகனாக நடித்து வந்தார். பரபரப்பான திருப்பங்களுடன் ஒளிபரப்பாகி வந்த இந்த சீரியல் கடந்த வாரம் திடீரென முடித்துக்கொள்ப்பட்டது ரசிகர்கள் மட்டுமல்லாது அதில் நடித்து வரும் நடிகர் நடிகைகளுக்கும் அதிர்ச்சியாக அமைந்தது.
இது தொடர்பாக தனது அதிருப்தியை வெளிப்படுத்திய நடிகை ரஜிதா மகாலட்சுமி, சாதனா கேரக்டர் இவ்வளவு சீக்கிரம் முடிவடையும் என்று எதிர்பார்க்கவில்லை. கலர்ஸ் டிவியின் போலியாக ப்ரமோஷன்களில் இருந்து தப்பித்துக்கொள்ளலாம்.. இந்த சீரியலில் கமிட் ஆக வேண்டாம் என்று என் நண்பர்கள் சொன்னார்கள். அவர்களை திட்டிவிட்டு இந்த சீரியலவில் கமிட் ஆனேன் . ஆனால் என் முடிவு தவறு என்று கலர்ஸ் டிவி உணர்த்தீவிட்டது என வெளிப்படையாக கடுமையாக விமர்சனம் செய்திருந்தார்.
இந்த பதிவு இணையத்தில் வைரலாக பரவிய நிலையில், தற்போது கலர்ஸ் தமிழின் மற்றொரு சீரியலான நம்ம மதுரை சிஸ்டர்ஸ் சீரியலும் முடிவுக்கு வந்துவிட்டதாக வெளியாகியுள்ள தகவல் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 166 எபிசோடுகள் கடந்த இந்த சீரியல் நன்றாக சென்றுகொண்டிருந்த நிலையில்.திடீரென முடிக்கப்பட்டது ஏன் என்று ரசிகர்கள் கேள்வி எழுப்ப வருகின்றனர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.