Arya - Sayyeshaa: உலகெங்கும் கொரோனா வைரஸ் தாக்கம் தலை விரித்து ஆடுகிறது. இதற்கு இந்தியாவும் தப்பவில்லை. ஆகையால் இந்த வைரஸ் பரவுவதை தடுக்க, நாடு முழுவதையும் 21 நாள் முடக்குவதாக மத்திய அரசு அறிவித்தது.
கோடீஸ்வரர் ஆக. பிபிஎப் திட்டத்தில் எவ்வளவு முதலீடு செய்ய வேண்டும்?
இதில் ஏற்கனவே ஒரு வாரம் கடந்துவிட்டது. இந்தத் தனிமைப்படுத்தல் நாட்களில் பலரும் வீட்டிற்குள் இருந்தவாரே தங்களுக்கு பிடித்த விஷயங்களை செய்தும், திறமைகளை வெளிப்படுத்தியும் வருகிறார்கள். இந்தக் கடுமையான நாட்களை கடப்பது சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் சற்று சிரமம் இருந்தாலும், கொரோனா வைரஸ் தாக்கத்தை கட்டுப்படுத்த வேண்டும், என்ற நோக்கில் அனைவரும் ஒத்துழைப்பு தருகிறார்கள்.
இந்நிலையில் பிரபலங்கள் பலர் தங்களது பழைய படங்களை மீண்டும் இணையத்தில் வெளியிட்டும், சமையல், பெயிண்டிங் போன்ற விஷயங்களில் ஈடுபட்டும் வருகிறார்கள். அந்த வகையில் நடிகை சாயிஷா எவ்வாறு பொழுதை போக்குகிறார் தெரியுமா? மொட்டை மாடியில் தனது கணவர் ஆர்யாவுடன் இணைந்து, மாலை நேரத்தில் டீ குடித்தவாறு, சூரிய அஸ்தமனத்தை பார்ப்பதை வாடிக்கையாக வைத்திருக்கிறாராம். இயற்கையுடன் நேரத்தை கழிப்பது சாயிஷாவுக்கு பிடித்தமான ஒன்றாம். இந்த விஷயத்தை போட்டோவுடன் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார் சாயிஷா.
பிரதமர் மோடி காணொலி மூலம் அனைத்து மாநில முதல்வர்களுடன் ஆலோசனை
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.