இந்தியா சுதந்திரம் பெற்று 75- ஆண்டுகள் கடந்துள்ள நிலையில், இதை கொண்டாடும் விதமாக இந்திய சுதந்திரத்திற்காக பாடுபட்ட வீரர்களின் வாழக்கை வரலாற்றை பற்றி விவரிக்கும் தொடர் பொதிகை சேனலில் ஒளிபரப்ப உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் கடந்த ஆகஸ்ட் 15-ந் தேதி 75-வது சுதந்திர தினம் கொண்டாட்ப்பட்டது. சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் கடந்ததை சிறப்பாக கொண்டாடும் வகையில் இந்த நாளை அமுதபெருவிழாவாக கொண்டாட வேண்டும் என்றும்,இதற்காக ஆகஸ்ட் 13-ந் தேதியில் இருந்து மக்கள் அனைவரும் தங்களது வீடுகளில் தேசியகொடி ஏற்றி வேண்டும் என்று பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்திருந்தார்.
அதனைத் தொடர்ந்து மக்கள் அனைவரும் தேசப்பற்றுடன் தங்களது வீடுகளில் தேசிய கொடி ஏற்றி வைத்து சுதந்திரதினத்தை கோலாகலமாக கொண்டாடினர். இதனைத் தொடர்ந்து சுதந்திரம் பெற்று 75 ஆண்டுகள் நிறைவடைந்ததை கொண்டாடும் வகையிலும், இந்த சுதந்திரத்திற்காக பாடுபட்ட சுதந்திர போராட்ட வீரர்களின் வாழ்க்கை வரலாற்றை மக்கள் அறிந்துகொள்ளும் வகையிலும் 75 வாரங்களுக்கு தூர்தர்ஷன் பொதிகை சேனலில் ஸ்வராஜ் என்ற தொடர் ஒளிபரப்பாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
வரும் ஆகஸ்ட் 20 (நாளை) முதல் அனைத்து சனிக்கிழமைகளில் ஒளிபரப்பாகும் இந்த தொடர் 75 வாரங்களுக்க இரவு 8 மணிக்கு தமிழில் எச்டியில் ஒளிபரப்பப்படும். தொடர்ந்து இதே சேனலில் இந்நிகழ்ச்சியின் மறுஒளிபரப்பு ஒவ்வொரு வாரமும் திங்கள், புதன் மற்றும் வெள்ளி கிழமைகளில் பிற்பகல் 3 மணி, மாலை 4 மணிக்கு மற்றும் இரவு 9 மணிககு ஒளிபரப்பப்படும்.
இது தொடர்பாக செய்தியாளர் கூட்டத்தில் பேசிய சென்னை பத்திரிகை தகவல் பணியகத்தின் கூடுதல் இயக்குநர் ஜெனரல் எம். அண்ணாதுரை, சுதந்திர போராட்டத்தில் பங்கேற்ற தமிழக வீரர்கள் உட்பட இந்திய சுதந்திரப் போராட்டத்தின் 75 ஹீரோக்களின் வாழ்க்கை வரலாறு 75 வாரங்கள் தொடரில் விவரிக்கப்படும் என்று கூறியுள்ளார்.
இந்த பட்டியலில் தமிழகத்தை சேர்ந்த விடுதலைப் போராட்ட வீரர்களான வேலு நாச்சியார், புலித்தேவன், வீரபாண்டிய கட்டபொம்மன் ஆகியோரின் வாழ்க்கை வரலாறும் இந்த சீரியலின் ஒரு பகுதியாக இருக்கும். இது குறித்து சென்னை தூர்தர்ஷன் கேந்திரா உதவி இயக்குநரும் (நிரல்கள்) மற்றும் நிகழ்ச்சித் தலைவருமான ரபீக் பாஷா கூறுகையில்,
சுதந்திரப் போராட்டத்தில் தமிழகத்தின் பங்களிப்பை எடுத்துரைக்கும் பிரத்யேக தொலைக்காட்சித் தொடரை வெளியிட சேனல் திட்டமிட்டுள்ளது என்று கூறியுள்ளார். சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் நிறைவடைந்ததை முன்னிட்டு மேலும் பல நிகழ்ச்சிகளை நடத்த டிடி நியூஸ் சென்னை திட்டமிட்டுள்ளது என சென்னை டிடி செய்தி இயக்குநர் பி.குருபாபு கூறியுள்ளார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.