Deepika Padukone Deletes Twitter and Instagram Post Tamil News : புத்தாண்டு தொடக்கத்தில், தீபிகா படுகோன் தனது ட்வீட் மற்றும் இன்ஸ்டாகிராம் பதிவுகள் அனைத்தையும் நீக்கியதால் அவருடைய ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
தீபிகா படுகோனின் வலைத்தள கணக்குகள் ஹேக் செய்யப்பட்டதாகப் பலர் ஊகித்தாலும், அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் அவ்வாறு எதுவுமில்லை என்று உறுதிப்படுத்தியிருக்கிறது. மேலும், தீபிகா தன்னுடைய போஸ்டுகளை வேண்டுமென்றே நீக்கியதாகத் தெரிகிறது.
Deepika Padukone deletes Instagram post
தீபிகாவுக்கு ட்விட்டரில் 27.7 மில்லியன் ஃபாலோயர்களும் இன்ஸ்டாகிராமில் 52.5 மில்லியன் ஃபாலோயர்களும் உள்ளனர்.
தற்போது, தீபிகா தன் கணவர் ரன்வீர் சிங்குடன் ரணதம்பூரில் தங்களின் பிரைவேட் நேரத்தை செலவிட்டுக்கொண்டிருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil"