Advertisment

சுரண்டி சேர்ப்பதில்தான் கவனம் : தமிழக அரசியல்வாதிகளை விமர்சித்த பார்த்திபன்

அது ஆண்டவன் நினைத்தால் தான் நடக்கும்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Actor Parthiban

தமிழ்நாட்டில் இப்போதைய ஹாட் டாபிக் ரஜினியின் அரசியல் பிரவேசம் தான். ஒரு மாதமாக பற்றி எரிந்துகொண்டிருந்தாலும் நாள் ஆக நாள் ஆக நீர்த்துப்போகாமல் பரவிக்கொண்டே இருக்கிறது.

காரைக்குடியில் ஒரு பள்ளி ஆண்டு விழாவில் கலந்து கொண்ட நடிகர் பார்த்திபன், 'தமிழக அரசியல்வாதிகளை கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். அதே நேரத்தில் ரஜினியின் அரசியல் பிரவேசம் பற்றியும் பேசியுள்ளார். ’தமிழகத்தில் இருக்கும் அரசியல்வாதிகள் நாட்டுக்கு எது முக்கியம் என்பது பற்றி கவலைப்படுவதில்லை. முடிந்த அளவுக்கு சுரண்டி சேர்ப்பதில் தான் கவனம் செலுத்துகிறார்கள்’ என்றார்.

பார்த்திபனிடம் ‘ரஜினி அரசியலுக்கு வருவாரா?’ என்று கேட்டதற்கு ‘அது ஆண்டவன் நினைத்தால் தான் நடக்கும்’ என்று சொன்னார்.

Tamil Nadu Politics
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment