கடந்த இரண்டு வாரங்களாகவே பிக்பாஸ் நிகழ்ச்சி சுவாரஸ்யம் இழந்து, பார்வையாளர்களை ரசிக்க வைக்க திணறி வந்தது. பிக்பாஸ் டீமிற்கும் என்ன செய்வது என்று தெரியாமல், மொக்கை டாஸ்க்குகளை கொடுத்து நம்மை கடுப்பேற்றி வந்தனர். இதற்கு முக்கிய காரணம், ஜூலி, காயத்ரி, ஓவியா ஆகியோர் வெளியேறியது தான். என்ன தான் 'பாட்ஷா' படமாக இருந்தாலும், மாணிக் பாட்ஷா, மார்க் ஆண்டனி ஆகிய பாத்திரங்கள் இல்லாமல் அந்த படத்தை பார்க்க முடியுமா? அதுமாதிரி தான் இங்கேயும்.
நேற்று (ஞாயிறு) பிக்பாஸ் நிகழ்ச்சியின் போது, ரைசா வெளியேற்றப்பட்டதற்கு பின் ஆர்த்தி, ஜூலி, காயத்ரி, சக்தி, பரணி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக வந்து கமலுடன் உரையாடினார்கள். அப்போது "இந்த ஐந்து விருந்தினர்களில் இருவர் பிக்பாஸ் வீட்டிற்குள் செல்ல வேண்டும் என்பது எனது விருப்பம்" என கமல்ஹாசன் தெரிவித்தார். ஆனால், அந்த இருவர் யார் என்பதை அவர் நாளை சொல்வதாக அறிவித்துவிட்டார்.
இருப்பினும், அந்த இருவர் ஜூலி மற்றும் ஆர்த்தி தான் என்பது நம்மால் எளிதில் யூகிக்க முடிந்தது. இந்த நிலையில், இன்று பிக்பாஸ் சார்பில் வெளியிடப்பட்ட புரமோவில் ஜூலியும், ஆர்த்தியும் மீண்டும் பிக்பாஸ் வீட்டிற்குள் வருவது போல் வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.
அவர்கள் வீட்டிற்குள் வந்த போது அனைத்து போட்டியாளர்களின் முகத்திலும் பேய் அறைந்த மாதிரியான ஃபீலிங்கை நம்மால் நன்றாக பார்க்க முடிந்தது. குறிப்பாக, "நான் திரும்பி வருவேன்னு எதிர்பார்க்கல-ல" என்று ஆர்த்தி சொன்ன போது அனைவரும் ஜெர்க் ஆகிவிட்டனர்.
இரண்டு வாரங்களாக ஷோ மொக்கையாக இருந்த போது, பிக்பாஸ் சைலன்ட்டாக இருந்தது இந்த அரங்கேற்றத்தை நிகழ்த்தத் தானா என்ற ஆடியன்சின் மைண்ட் வாய்சையும் நம்மால் உணர முடிந்தது.
முதலில் இருவரையும் மகிழ்ச்சியோடு வரவேற்ற சினேகன், "இப்படிப்பட்ட செலிப்ரிட்டீஸ்கள இறக்குவீங்க-னு நான் எதிர்பார்க்கல பிக்பாஸ்" என புலம்பியதை பார்க்கும் போது, 'மறுபடியும் முதல்ல இருந்தா' என்ற அவரது ஃபீலிங் நமக்கு புரிந்தது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.