Advertisment

நடிகையை மட்டும் திருமணம் செய்து கொள்ளாதே - அஜித்துக்கு அட்வைஸ் கூறிய பிரபலம்

நடிகைகளை மட்டும் திருமணம் செய்துக் கொள்ளாதே. பெரும்பாலும் அது விவாகரத்தில் தான் முடியும்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Ajith Shalini wedding anniversary

தமிழ் சினிமாவில் அதிக ரசிகர்கள் பட்டாளத்துடன் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் அஜித்.

Advertisment

தற்போது ‘நேர்க்கொண்ட பார்வை’ படத்தில் நடித்து வருகிறார். இதில் வித்யா பாலன், ஷ்ரத்தா ஸ்ரீநாத் உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள்.

சதுரங்க வேட்டை, தீரன் ஆகியப் படங்களை இயக்கிய ஹெச்.வினோத் இதனை இயக்க, மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தயாரிக்கிறார்.

இந்நிலையில், காதல் மன்னன், அமர்க்களம், உன்னைக் கொடு என்னைத் தருவேன், வில்லன், ஆஞ்சநேயா, அட்டகாசம், வரலாறு, வீரம் உள்ளிட்டப் படங்களில் அஜித்துடன் நடித்த ரமேஷ் கண்ணா தற்போது ஒரு இண்ட்ரெஸ்டிங்கான விஷயத்தைக் கூறியுள்ளார்.

Ajith and Ramesh Kanna Ajith and Ramesh Kanna

”அமர்க்களம் ஷூட்டிங்கின் போது, நடிகைகளை மட்டும் திருமணம் செய்துக் கொள்ளாதே. பெரும்பாலும் அது விவாகரத்தில் தான் முடியும். குடும்பப் பெண்ணாகப் பார்த்து திருமணம் செய்துக் கொள், அது தான் வாழ்க்கைக்கு நல்லது, என அஜித்துக்கு அட்வைஸ் செய்துக் கொண்டிருந்தேன்.

அப்போது நான் அஜித்திடம் பேசிக் கொண்டிருப்பதை இயக்குநர் சரண் பார்த்துவிட்டு, என்னை அழைத்து விசாரித்தார். நான் அஜித்துக்கு செய்த அட்வைஸைப் பற்றிக் கூறினேன். அப்போது தான் அஜித் - ஷாலினி காதலிப்பதைப் பற்றி என்னிடம் சரண் கூறினார். எனக்கு ஒரு மாதிரியாகி விட்டது. பின்னர் அவர்கள் திருமணத்துக்கு சென்று மனதார வாழ்த்தி மகிழ்ந்தேன்” என சமீபத்திய நேர்க்காணல் ஒன்றில் தெரிவித்திருக்கிறார் ரமேஷ் கண்ணா.

மேலும் இவர், அஜித்தை வைத்து ‘தொடரும்’ என்ற படத்தை இயக்கியது குறிப்பிடத்தக்கது.

Ajith Shalini
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment