Advertisment

ஜெயிலர் படப்பிடிப்பு நிறுத்தம்... தளபதி 67-ல் கமல்ஹாசன்? டாப் 5 சினிமா செய்திகள்

சூர்யா நடிப்பில் இயக்குனர் பாலா இயக்கி வந்த படம் வணங்கான். சூர்யாவின் 2டி எண்டர்டெயிண்மென்ட் நிறுவனம் தயாரித்து வந்த இந்த படத்தின் படப்பிடிப்பு திடீரென நிறுத்தப்பட்டதாக தகவல் வெளியானது.

author-image
WebDesk
New Update
ஜெயிலர் படப்பிடிப்பு நிறுத்தம்... தளபதி 67-ல் கமல்ஹாசன்? டாப் 5 சினிமா செய்திகள்

திடீரென நிறுத்தப்பட்ட ஜெயிலர் படப்பிடிப்பு

Advertisment

அண்ணாத்த படத்திற்கு பிறகு நடிகர் ரஜினிகாந்த் நடித்து வரும் படம் ஜெயிலர். கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ்குமார் முக்கிய கேரக்டரில் நடித்து வரும் இந்த படத்தை நெல்சன் இயக்கி வருகிறார். அனிருத் இசையமைத்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், தற்போது 15 நாட்கள் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சென்னையின் கனமழை காரணமாக நிறுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

பாதியில் நிறுத்தப்பட்ட வணங்கான்?

சூர்யா நடிப்பில் இயக்குனர் பாலா இயக்கி வந்த படம் வணங்கான். சூர்யாவின் 2டி எண்டர்டெயிண்மென்ட் நிறுவனம் தயாரித்து வந்த இந்த படத்தின் படப்பிடிப்பு திடீரென நிறுத்தப்பட்டதாக தகவல் வெளியானது. ஆனால் அதற்கு மறுப்பு தெரிவித்த சூர்யா படப்பிடிப்பு மீண்டும் தொடங்கும் என்று கூறியிருந்தார். இதனிடையே இயக்குனர் பாலாவிடம் வணங்கான் படம் குறித்து கேட்டபோது வணங்கான் வந்துகொண்டே இருக்கிறது என்ற கூறியுள்ளார். இதனால் வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

தளபதி 67 படத்தில் கமல்ஹாசன்?

வாரிசு படத்தை தொடர்ந்து தளபதி விஜய் அடுத்து விக்ரம் படத்தின் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்க உள்ளார். தற்காலிகமாக தளபதி 67 என்று பெயரிடப்பட்டுள்ள இந்த படம் குறித்து நாள்தோறும் பல தகவல்கள் வெளியாகி வருகிறது. அந்த வகையில் தற்போது தளபதி 67 படத்தில் கமல்ஹாசன் ஒரு கெஸ்ட் ரோலில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே கமல் நடிப்பில் வெளியாக விக்ரம் படத்தில் சூர்யா கெஸ்ட் ரோலில் நடித்தது குறிப்பிடத்தக்கது.

வேள்பாரி படத்தை நிராகரித்தாரா விஜய்?

வேள்பாரி என்ற நாவலை இயக்குனர் ஷங்கர் திரைப்படமாக உருவாக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில், இந்த படத்தில் பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங், நடிகர் சூர்யா இணையந்து நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனிடையே இந்த படத்தில் நடிக்க ஷங்கர் நடிகர் விஜய்யிடம் கேட்டதாகவும், ஆனால் விஜய் இந்த கதையை நிராகரித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

நயன்தாராவின் புதிய படம்

தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையாக நயன்தாரா கடந்த ஜூன் மாதம் தனது நீண்டநாள் காதலர் இயக்குனர் விக்னேஷ் சிவனை திருமணம் செய்துகொண்டார். தொடர்ந்து இந்த தம்பதி வாடகை தாய் மூலம் இரட்டை குழந்தைக்கு பெற்றோர் ஆகியுள்ளனர். தற்போது ஷாருக்கானுடன் ஜவான் படத்தில் நடித்து வரும் நயன்தாரா அடுத்து மாதவன் ஜோடியாக புதிய படம் ஒன்றில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil Cinema
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment