இயக்குநர் பாலாஜி சக்தி வேலின் ‘காதல்’ திரைப்படத்தில் பரத்துக்கு ஜோடியாக நடித்து தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானவர் சந்தியா. முதல் படமாக இருந்தாலும், பிசிறு தட்டாமல் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார். இதைத் தொடர்ந்து ’டிஷ்யூம், வல்லவன், கூடல் நகர், கண்ணாமூச்சி ஏனடா உள்ளிட்ட தமிழ்ப் படங்களில் நடித்தார். அதோடு ஒரு சில தெலுங்கு, கன்னட மொழிப் படங்களிலும், 20-க்கும் மேற்பட்ட மலையாள திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.
சென்னை பெரு வெள்ளத்தின் போது, கடந்த 2015-ம் ஆண்டு, வெங்கட் சந்திரசேகரன் என்பவரை திருமணம் செய்து கொண்டார் சந்தியா. இவர்களது திருமணம் குருவாயூரில் நடைபெற்றது. வரவேற்பு நிகழ்ச்சிக்கு வைத்திருந்த பணத்தை வெள்ள நிவாரணத்திற்கு வழங்கினார்.
ஷேமா வெங்கட் என்ற பெண் குழந்தையும் சந்தியாவுக்கு இருக்கிறது. குடும்பம், குழந்தை என பிஸியான இவர் கடந்த 4 ஆண்டுகளாக திரையில் தலைக்காட்டவில்லை. இந்நிலையில் சன் டிவி-யில் ஒளிபரப்பாகி வரும் ‘கண்மணி’ தொடரில் சிறப்புத் தோற்றத்தில் தற்போது நடித்து வருகிறார். கண்ணனின் ஊருக்கு படபிடிப்புக்காக வரும்படி அவரது காட்சிகள் அமைந்துள்ளன. இதில் சந்தியாவுடன் அமித் பார்கவும் இடம் பெற்றுள்ளார்.
“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”