கார்த்தி மக்கள் நல மன்றத்தின் திருவண்ணாமலை மாவட்ட செயலாளர் ஜீவன் குமார். 27 வயதான இவர், தன் நண்பர்கள் தினேஷ், நாகராஜ் ஆகியோருடன் சென்னையில் இருந்து திருவண்ணாமலை நோக்கி காரில் சென்று கொண்டிருந்தார். கார்த்தி என்பவர் காரை ஓட்டினார்.
தாம்பரம் இரும்புலியூர் மேம்பாலத்தில் கார் சென்று கொண்டிருந்தபோது, கட்டுப்பாட்டை இழந்த கார் தடுப்புச்சுவரை உடைத்துக்கொண்டு பாலத்தில் இருந்து கீழே விழுந்தது. இதில் பலத்த காயமடைந்த நான்கு பேரும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். ஆனால், சிகிச்சை பலனின்றி ஜீவன் குமார், தினேஷ் இருவரும் மரணமடைந்தனர்.
தகவல் கேள்விப்பட்டு, நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார் கார்த்தி. மாவட்ட நிர்வாகிகள் மற்றும் கார்த்தி ரசிகர்களும் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தினர். ஜீவன்குமாருக்கு 3 மாதங்களுக்கு முன்புதான் திருமணம் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.