Advertisment

Maanaadu Movie review: சிம்புவின் டைம் லூப் படம் முழுக்க ரசிக்க வைக்கிறது!

இயக்குனர் வெங்கட் பிரபுவிடம் பல கவர்ச்சியான யோசனைகள் உள்ளன, அவற்றை ஈடுபாட்டுடன் ஒன்றாக இணைத்துள்ளார்.

author-image
WebDesk
New Update
Maanaadu Movie review: சிம்புவின் டைம் லூப் படம் முழுக்க ரசிக்க வைக்கிறது!

சிம்புவின் வாழ்க்கையைப் பற்றி யாராவது ஒரு புத்தகம் எழுதினால், அதில் சுவாரஸ்யங்களுக்கு பஞ்சமே இருக்காது. ஏனெனில், கடந்த 10 வருடங்களில் சிம்புவின் வாழ்க்கையிலும், தொழிலிலும் நிறைய நடந்துள்ளது.

Advertisment

ஒரு காலத்தில் சிம்பு காதலில் இருந்தார். பின்னர் இழந்தார். சிக்ஸ்-பேக் வைத்து அழகான ஹீரோவாக வலம்வந்தவர், பின்னர் 100 கிலோவுக்கு மேல் அதிக எடையில் இருந்தார். படத்துக்கு படம் பிளாக்பாஸ்டர்களை கொடுத்த சிம்புவுக்கு ஒருகட்டத்தில் எதுவும் இல்லாமல் ஆனது. சில சமயங்களில், அவரது வாழ்க்கை உயரத்தில் இருப்பது போல் தோன்றினாலும், பின்னர் அது சரிவின் விளிம்புக்கு சென்றது. தொழில்துறையில் உள்ள சில பெரிய தலைகள், அவரது கடினமான காலங்களில் அவருக்குப் பின்னால் கற்களை வீசினர். எந்த சினிமாவில், தனது சிறுவயதிலிருந்து ஒரு பகுதியாக இருந்தாரோ அதிலிருந்து விலக்கப்பட்டார்.

இப்படி இருந்த சிம்பு கடந்த ஆண்டில், ரீசெட் பட்டனை அழுத்தியதாக தெரிகிறது. தனது கடந்த கால தவறுகளை மீண்டும் செய்யாமல் இருக்க அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டார்.  ஷூட்டிங் இல்லாமல் இருந்தபோது பெற்ற உடல் எடையை குறைப்பதில் இருந்து, சரியான நேரத்தில் படப்பிடிப்பை முடித்துக் கொடுக்கும்வரை, அவர் சரியான பாதையில் செல்வதாக தெரிகிறது.

மேலும் சிம்பு கேரியரில் புதிய இன்னிங்ஸை தொடங்க மாநாடை விட சிறந்த படம் இருக்கமுடியாது.  ஒருநாளை மீட்டெடுக்கும் ஆற்றல் கொண்ட ஒரு ஹீரோவைப் பற்றிய படம். இது அவரது வழியில் ஒவ்வொரு அடியிலும் அவர் செய்த ஒவ்வொரு தவறையும் சரிசெய்ய அனுமதிக்கிறது.

நம் ஹீரோ அப்துல் காலிக் (சிம்பு)  பின்னோக்கி பயணிக்கவில்லை. மாறாக, அவர் அதை சரியாகப் பெறும் வரை, ஒரே நாளில் மீண்டும் மீண்டும் வாழ வேண்டும். கதாநாயகன் ஒரே இக்கட்டான நிலையில் இருக்கும் பில் முர்ரேயின் கிளாசிக் கிரவுண்ட்ஹாக் டே, டாம் குரூஸின் நவீன காவியமான எட்ஜ் ஆஃப் டுமாரோ மற்றும் ஆண்டி சாம்பெர்க்கின் சமீபத்திய காதல் நகைச்சுவை பாம் ஸ்பிரிங்ஸ் என குறைந்தது மூன்று பெரிய ஹாலிவுட் பிளாக்பஸ்டர்களை இது நமக்கு நினைவுப்படுத்துகிறது.

துபாயில் இருக்கும் அப்துல் காலிக் தனது நண்பன் பிரேம்ஜிக்கு உதவுவதற்காக ஊட்டிக்கு செல்கிறார், பிரேம்ஜியின் காதலி,வேறொருவரை திருமணம் செய்து கொள்ளவுள்ளார். மணமகளை காணவில்லை என்பதை யாரும் கவனிக்கும் முன், திருமணத்தில் நுழைந்து மணப்பெண்ணை கடத்தி அவரைத் தனது நண்பன் பிரேம்ஜிக்குத் திருமணம் செய்து வைப்பதுதான் சிம்புவின் திட்டம். ஆனால் எதிர்பாராதவிதமாக, தமிழக முதல்வர் அறிவழகனை (எஸ்.ஏ. சந்திரசேகர்) கொல்லும் பெரிய சதித்திட்டத்தில் காலிக்-கும் ஒருபகுதியாக ஆகிறார்.  

ஒரு சிலரின் அரசியல் ஆதாயங்களுக்காக, முதலமைச்சரை கொல்லும் திட்டத்துக்கு சிம்புவைப் பயன்படுத்துகிறார் தனுஷ்கோடி (எஸ்.ஜே.சூர்யா). மாநாட்டுக்கு செல்லும் சிம்பு அங்கு துப்பாக்கியை எடுத்து முதலமைச்சரைக் கொல்கிறார். அதன் பிறகு அங்கு வரும் போலீஸார் சிம்புவைச் சுட்டுக் கொல்கின்றனர். ஆனால் காலிக் மீண்டும் வருவதால், தனுஷ்கோடியின் சரியான கொலைத் திட்டம் வருத்தத்தில் முடிகிறது.

மாநாடு நடக்காமல் தடுக்கும் வரை அல்லது பல அப்பாவிகள் காயமடையும் வரை காலிக் இறந்து கொண்டே இருக்க வேண்டும். படத்தின் கதையை எழுதியிருக்கும் இயக்குநர் வெங்கட் பிரபு, பல விஷயங்களைச் சரியாகச் சொல்லியிருக்கிறார்.

மேலும் அவர் புத்திசாலித்தனமாக உரையாடல்களில் தெளிவின்மையைத் தழுவி, முடிவில்லாத சர்ச்சைகள் மற்றும் வழக்குகளில் இருந்து தன்னை பாதுகாத்துக் கொண்டார். நாட்டில் அரசியல் புயல்களை ஏற்படுத்திய பல சம்பவங்களை காலிக் பேசினாலும் எதையும் குறிப்பிட்டு சொல்லவில்லை. இதுபோன்ற ஒன்று சில காலத்திற்கு முன்பு இங்கே நடந்ததே இல்லை.

வெங்கட், கால பைரவாவின் புராணக்கதையை வகுப்புவாத கலவரங்களின் பின்னணியில் சிரமமின்றி நெய்ததன் மூலம் மாநாடுக்கு ஒரு புராணக்கதையை வழங்குகிறார். வெங்கட்டிடம் பல கவர்ச்சியான யோசனைகள் உள்ளன, அவற்றை ஈடுபாட்டுடன் ஒன்றாக இணைத்துள்ளார்.

ஆனால், எல்லா வேடிக்கைகளும் தீர்ந்தபிறகு, திரைப்பட வரலாற்றைப் பற்றிய சில அறிவால் நீங்கள் எரிக்கப்பட்டால்,வெங்கட் பல்வேறு பிளாக்பஸ்டர் படங்களில் இருந்து வெவ்வேறு பிட்களை ஒருங்கிணைத்ததை தவிர இந்தப் படம் வேறொன்றுமில்லை என்பதை நீங்கள் புரிந்துகொள்வீர்கள்.

அரசியல் ஆதாயங்களுக்காக ஒரு முழு சமூகத்தையும் அந்நியப்படுத்துவது எப்படித் தவறு என்பதைப் பற்றிய சில பொதுவான கருத்துகளை நாம் பெறுகிறோம். இது மோசமானது என்பது ஏற்கெனவே தெரியும். எனவே அதை மீண்டும் செய்ய வேண்டிய அவசியமில்லை. நாம் விரும்புவதெல்லாம், இதுபோன்ற விஷயங்களைக் கையாளும் படங்கள் இதுவரை கண்ணுக்கு தெரியாத வகையில் புதைந்து கிடக்கும் இடத்திற்கு நம்மை அழைத்துச் சென்று புதிய உணர்ச்சிகளை திறக்க வேண்டும்.

ஆனால், மாநாடு படம் கொண்டாடுவதற்கு பல காரணங்களை வழங்குகிறது. குறிப்பாக, சர்க்கஸை ஊருக்குள் கொண்டு வரும் எஸ்.ஜே.சூர்யாவின் நடிப்பு. மனதைக் கவரும் நிகழ்வுகளுக்கான எதிர்வினைகளால் அவர் உண்மையாக சிரிக்க வைக்கிறார். அவரிடமிருந்து என்ன எதிர்பார்க்கப்படுகிறது என்பது தெரிந்து அதைச் சரியாகக் கொடுத்திருக்கிறார். யுவன் ஷங்கர் ராஜாவின் இசையும், படத்தொகுப்பும் இன்னொரு பெரிய பிளஸ். எடிட்டர் பிரவீன் கே.எல்-ன் பணி, திரைப்படத்திற்கு நிறைய தெளிவைக் கொண்டு வருகிறது. இது பரந்த பார்வையாளர்களை ரசிக்க வைக்கிறது,

முடிவில்லாத லூப் மற்றும், நேரப் பொறியிலிருந்து வெளிவருவதற்கு கதாநாயகனின் முடிவில்லாத முயற்சிகளும் என மாநாடு படம் உள்ளார்ந்த புதுமையைக் கொண்டுள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil Movie Review Venkat Prabhu Simbu Yuvan Shankar Raja Str
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment