Advertisment

'பத்ம விபூஷண்' விருதை பெற்றார் இளையராஜா!

'இசைஞானி' இளையராஜா உட்பட மூவருக்கு பத்ம விபூஷண் விருதுகள் வழங்கப்பட்டது

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
'பத்ம விபூஷண்' விருதை பெற்றார் இளையராஜா!

இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு பத்ம விபூஷண் விருது வழங்கினார் குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த்.

Advertisment

குடியரசுத் தலைவர் மாளிகையில் 2018ம் ஆண்டுக்கான பத்ம விருதுகள் வழங்கும் விழா டெல்லியில் தொடங்கியது. குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் விருதுகளை வழங்கி கௌரவித்து வருகிறார். விழாவில் குடியரசு துணைத்தலைவர் வெங்கையா நாயுடு, பிரதமர் மோடி மற்றும் மத்திய அமைச்சர்கள் பங்கேற்றனர்.

பல்வேறு துறைகளில் சாதனை படைத்த 84 பேருக்கு 2018ம் ஆண்டுக்கான பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டன. இளையராஜா உட்பட மூன்று பேருக்கு பத்ம விபூஷண் விருதும், கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் தோனி உட்பட ஒன்பது பேருக்கு பத்ம பூஷண் விருதும், தமிழகத்தை சேர்ந்த நாட்டுப்புற பாடகி விஜயலட்சுமி நவநீத கிருஷ்ணன் உட்பட 72 பேருக்கு பத்மஸ்ரீ விருதும் அறிவிக்கப்பட்டது. அதன்படி டெல்லி்யில் இன்று நடைபெற்ற விழாவில் பத்ம விருதுகள் வழங்கி கவுரவித்தார் ராம்நாத் கோவிந்த்.

இதில், 'இசைஞானி' இளையராஜா உட்பட மூவருக்கு பத்ம விபூஷண் விருதுகள் வழங்கப்பட்டுள்ளது. தமிழகத்தை சேர்ந்த ஞானம்மாளுக்கு பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டுள்ளது.

Ilaiyaraja
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment