K.K.B.Balakrishnan : இயக்குநர் சமுத்திரக்கனி இயக்கத்தில் சசிகுமார் நடிப்பில் கடந்த 2009 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ‘நாடோடிகள்’. அந்தப் படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானவர் கே.கே.பி.பாலகிருஷ்ணன். அந்தப் படத்தில் அனன்யாவுக்கு அப்பாவாகவும், சசிகுமாருக்கு மாமாவாகவும் நடித்திருப்பார். அரசு பணியில் இருப்பவருக்கு தான் தனது மகளை திருமணம் செய்துக் கொடுப்பேன், என்று கூறி சசிகுமாருக்கு பெண் கொடுக்க மறுத்துவிடுவார்.
”பெரியாரைப் பற்றி பேசுவேன், சபரிமலைக்கு போவேன், முஸ்லீமாக நடிப்பேன்” – சிம்பு ஓபன் டாக்!
இதனைத் தொடர்ந்து ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ உள்ளிட்ட சில படங்களில் துணை கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் வெளியாகி திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் நாடோடிகள் 2 படத்திலும் நடித்திருக்கிறார். இந்நிலையில் இன்று காலை ஈரோடு, குப்பக்கவுண்டன் பாளையத்திலுள்ள தனது இல்லத்தில் மாரடைப்பால் காலமானார் பாலகிருஷ்ணன்.
இந்திய முஸ்லிம்களை வெளியேறச் சொன்னால், முதல் ஆளாக குரல் கொடுப்பேன்: ரஜினிகாந்த் பேட்டி