'துருவங்கள் பதினாறு' என்ற ஒரு ப்ரில்லியண்ட்டான படத்தை இயக்கி, நம்மை ஆச்சர்யப்பட வைத்தவர் கார்த்திக் நரேன்.
இவர் தற்போது 'நரகாசூரன்' எனும் புதிய படத்தை இயக்குகிறார். இதன் டைட்டில் ஃபர்ஸ்ட் லுக் இன்று வெளியிடப்பட்டுள்ளது. இயக்குனர் கவுதம் வாசுதேவ் மேனனுடன் இணைந்து கார்த்திக் இப்படத்தை தயாரிக்கிறார்.
June 2017
இதில் அரவிந்த் சுவாமி, இந்திரஜித், சந்தீப் கிஷண் என மூன்று கதாநாயகர்கள் நடிக்கின்றனர். ஸ்ரேயா சரணும் இதில் நடிக்கிறார். படப்பிடிப்பு ஆகஸ்ட் மாதம் இறுதியில் அல்லது செப்டம்பர் மாதம் தொடக்கத்தில் ஆரம்பிக்கப்படும் என கூறப்படுகிறது.