இரட்டை குழந்தைகள் விவாகரத்தில் விசாரணைக்குழுவிடம் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் உரிய ஆதாரங்களை சமர்பித்ததாக தகவல் வெளியாகி உள்ளது.
நயன் மற்றும் விக்கி ஆகியோர் சமீபத்தில் திருமணம் செய்துகொண்டனர். இவர்களது திருமணம் எப்படி செய்தியானதோ அப்படித்தான் இவர்களது குழந்தை பிறப்பும் செய்தியானது. மேலும் பரபரப்பாக பேசப்பட்டது. சட்ட விரோதமாக வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற்று கொண்டாதாக சர்ச்சைகள் எழுந்தது. இந்நிலையில் இது தொடர்பாக சுகாதாரத்துறை சார்ப்பில் விசாரணை குழு அமைக்கப்பட்டது.
இந்நிலையில் விசாரணைக் குழுவிடம் நயன் – விக்கி உரிய ஆதாரங்களை சமர்பித்ததாக கூறப்படுகிறது. 6 ஆண்டுகளுக்கு முன்பே பதிவு திருமணம் செய்துகொண்டதாகவும், கடந்த டிசம்பர் மாதமே வாடகைத் தாய் முறையில் குழந்தை பெற பதிவு செய்ததாகவும் கூறியுள்ளனர். இந்நிலையில் ஜீன் மாதம்தான் வாடகைத்தாய் நெறிமுறை சட்டம் அமலுக்கு வந்தது என்றும் அது தங்களை கட்டுப்படுத்தாது என்றும் கூறியதாக கூறப்படுகிறது.