Advertisment

தரக்குறைவாக பேசிய பவுன்சர்கள்... நயன்தாராவுடன் படம் பார்க்க வந்த ஜி.பி.முத்து வேதனை

டிக்டாக் வீடியோக்கள் மூலம் புகழின் உச்சத்திற்கு சென்ற ஜி.பி.முத்து தற்போது யூடியூப் தளத்தில் பிரபலமான ஸ்டாராக வலம் வருகிறார்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
தரக்குறைவாக பேசிய பவுன்சர்கள்... நயன்தாராவுடன் படம் பார்க்க வந்த ஜி.பி.முத்து வேதனை

நயன்தாராசுடன் படம் பார்க்கலாம் என்று அழைத்து தன்தை தரக்குறைவாக பேசிவிட்டார்கள் என்று பிக்பாஸ் ஜி.பி.முத்து கூறியுள்ளது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Advertisment

டிக்டாக் வீடியோக்கள் மூலம் புகழின் உச்சத்திற்கு சென்ற ஜி.பி.முத்து தற்போது யூடியூப் தளத்தில் பிரபலமான ஸ்டாராக வலம் வருகிறார். சமீபத்தில் தொடங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 6-ல் முதல் போட்டியாளராக வந்த ஜி.பி.முத்து தொடக்த்தில் இருந்தே ரசிகர்கள் ஆதரவை பெற்று பிக்பாஸ் வீட்டில் தனக்காக அடையாளத்தை உருவாக்கினார்.

அதே சமயம் தனது மகனுக்கு உடல்நிலை சரியில்லை என்று கூறி சில நாட்களில் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிவிட்டார். தொடர்ந்து தற்போது ஒருசில திரைப்படங்களில் ஜி.பி.முத்து நடித்து வரும் நிலையில், நடிகை சன்னி லியோனுடன் அவர் நடித்துள்ள ஓ மை கோஸ்ட் என்ற படம் வரும் டிசம்பர் 30-ந் தேதி வெளியாக உள்ளது.

இந்நிலையில், நயன்தாரா நடிப்பில் நேற்று (டிசம்பர் 21) வெளியான கனெக்ட் படத்தின் பிரீமியர் ஷோ கடந்த சில தினங்களுக்கு முன்பு நடைபெற்றது. பல திரையுலக பிரபலங்கள் பங்கேற்ற இந்த பிரீமியர் ஷோவில் படம் பார்க்க ஜி.பி.முத்துவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அழைப்பை ஏற்று படம் பார்க்க வந்த அவர் பாதியிலேயே வெளியேறிவிட்டார்.

இது தொடர்பான தற்போது பத்திரிக்கையாளர் சந்திப்பில் பேசிய ஜி.பி.முத்து, கனெக்ட் படத்தின் பிரீமியர் ஷோவில், சில தன்னை தரக்குறைவாக பேசியதால் வெளியேறிவிட்டதாக கூறியுள்ளார். மேலும் ஈவண்ட் நடத்தியவர்கள் என்னிடம் சொன்னது வேறு, இங்கே நடந்துகொண்டது வேறு.

நயன்தாராவுடன் அமர்ந்து படம் பார்க்கலாம் வாங்க என்று சொன்னார்கள். ஆனா இங்க வந்த உடனே என்னை ஒரு ஓரமா உட்கார வைத்துவிட்டார்கள். எனக்கு ஒரு மாதிரி ஆகிவிட்டது. அதனால் வெளியில் வந்துவிட்டேன். இதெல்லாம் நயன்தாராவுக்கு தெரியாது அவரது பவுன்சர்கள் என்னை தரக்குறைவாக பேசினார்கள்.

தூரப்போனு சொல்லிட்டாங்க. இதனால் நான் அங்கிருந்து கிளம்பி வந்துவிட்டேன். அதன்பிறகு நயன்தாராவின் கணவர் விக்னேஷ் சிவன் என்னை அழைத்தார். ஆனால் நான் பாதிதூரம் வந்துவிட்டேன். இன்னொரு நாள் பார்ப்போம் என்று சொல்லிவிட்டேன் என்று கூறியுள்ளார்.  

சமீபத்தில் பேட்டி ஒன்றில் ஆடியோ விழாக்களில் தன்னை மதிக்காமல் ஒரு ஓரமாக உட்கார வைத்ததனால்தால் நான் ஆடியோ விழாக்களில் பங்கேற்பதில்லை என்று நயன்தாரா கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Nayanthara Gp Muthu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment