Advertisment

Vijay TV Seiral: எப்படி சமாளிக்கிறாங்க பாருங்க… கம்பம் மீனா கேரக்டர் செல்வியா? கஸ்தூரியா?

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் கஸ்தூரியாகவும் பாக்கியலட்சுமி சீரியலில் செல்வியாகவும் கம்பம் மீனா நடிக்கிறார். இதனால், கம்பம் மீனாவை டபுள் ஆக்‌ஷனாக காட்டப்போகிறார்களா அல்லது எப்படி காட்டப் போகிறார்கள் என்ற கேள்விக்கு படக்குழுவினர் எப்படி சமாளித்துள்ளார் பாருங்கள்...

author-image
WebDesk
New Update
Pandian Stores Serial, Baakiyalakshmi serial, Pandian Stores - Baakiyalakshmi serial, vijay tv, pandian stores, baakiyalakshmi, பாக்கியலட்சுமி, பாண்டியன் ஸ்டோர்ஸ், பாக்கியலட்சுமி பாண்டியன் ஸ்டோர்ஸ் மெகா சங்கமம், கம்பம் மீனா, கஸ்தூரி செல்வி, மல்லி, தனம், பிரசாந்த், ஐஸ்வர்யா, கண்ணன், முல்லை கதிர், கோபி, பாக்யா, ஜெனிஃபர், எழில், kambam meena, kasthuri, selvi, prashanth aishwarya, dhanam, malli, baakya, mullai, kathir, kannan, gopi, ezhil, chezhiyan, jeniffer

Pandian Stores Baakiyalakshmi serials: விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் - பாக்கியலட்சுமி சீரியல்களின் மெகா சங்கம் நடந்துகொண்டிருக்கிறது. இரண்டு சீரியல்களில் உள்ள குடும்பத்தினர்களும் ஒன்றாக சந்திக்கும்போது நடக்கும் நிகழ்வுகளை சுவாரஸ்யம் குறையாமல் இங்கே காணலாம்.

Advertisment

இன்றைய எபிசோடில் பாக்கியலட்சுமி சீரியலில் உள்ள பாக்யா, கோபி, செழியன், ஜெனிஃபர், எழிலன், இனியா, பாட்டி ஆகியோர் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் உள்ள தனலட்சுமி, முல்லை, ஆகியோர் மல்லியின் வீட்டில் வந்து பேசிக்கொண்டிருக்கிறார்கள்.

இந்த 2 சீரியல்களில் உள்ள அனைத்து காதாபாத்திரங்களும் ஒன்றாக சந்திக்கும்போது, ஒரு சிக்கல் ஏற்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. அது என்னவென்றால், பாக்கியலட்சுமி சீரியலில் வேலைக்காரி செல்வியாக கம்பம் மீனா நடிக்கிறார். அதே போல, பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் தனலட்சுமியின் அண்ணியாகவும் ஐஸ்வர்யாவின் சித்தியாகவும் கஸ்தூரி கதாபாத்திரத்தில் கம்பம் மீனாதான் நடிக்கிறார். அதனால், சீரியலில் 2 கதாபாத்திரங்களையும் ஒன்றாக அறிமுகப்படுத்தும்போது டபுள் ஆக்‌ஷன் காட்ட வேண்டிய நிலை ஏற்படும். படக்குழுவினர் இதை எப்படி சமாளிக்கப் போகிறார்கள் என்ற கேள்வி இருந்தது. ஆனால், படக்குழுவினரோ இதை தங்கள் கற்பனையால் மிகவும் சாதாரணமாக சமாளித்துள்ளார்கள்.

மல்லி வீட்டில் பாண்டியன் ஸ்டோர்ஸ் தனம், முல்லை, பாக்கியலட்சுமி சீரியல் குடும்பத்தினர் எல்லோரும் பேசிக்கொண்டிருக்கிறார்கள். அந்த நேரம் பார்த்து ஐஸ்வர்யாவுடன் கஸ்தூரி (கம்பம் மீனா) உள்ளே வருகிறார். பிரசாந்த் அவர்களை உள்ளே அழைத்து வருகிறான். மல்லி அத்தாச்சி வாங்க என்று வரவேற்கிறாள். கஸ்தூரி வருவதைப் பார்த்த பாக்யா, எழிலன் அனைவரும் அப்படியே ஆச்சரியமாகப் பார்க்கிறார்கள். எழிலன் தனது அம்மா பாக்யாவிடம் “ஏம்மா அப்படியே செல்வி அக்கா மாதிரியே இல்லை” என்று கேட்கிறான். அதற்கு பாக்யாவும் ஆமாம்டா என்று கூறுகிறாள். ஜெனிஃபர் ஒருபடி மேலே சென்று செல்வி அக்கா என்றே கூப்பிட்டு விடுகிறாள். தனம், “ஜெனி இந்து எங்க அண்ணி கஸ்தூரி” என்று அறிமுகப்படுத்துகிறாள்.

இனியா “அம்மா இவங்க அப்படியே செல்வி ஆண்ட்டி மாதிரியே இருக்காங்க… இல்ல” என்று கேட்கிறாள். எல்லோரும் ஆமாம், என்று ஆமோதிக்கிறாள். கஸ்தூரி இவங்க எல்லாம் யாரு என்று மல்லியிடம் கேட்கிறாள். அதற்கு மல்லி, கோபியின் அம்மாவைக் காட்டி இவங்க என் பெரியம்மா, அவங்க மருமக பாக்யா அண்ணி, இனியா, ஜெனி என எல்லோரையும் அறிமுகப்படுத்துகிறாள்.

பாக்யா, “நீங்க செல்வி மாதிரியேதான் இருக்கீங்க…” என்று கஸ்தூரியிடம் கூறுகிறாள். அதற்கு கஸ்தூரி யாரு செல்வி என்று கேட்கிறாள். அதற்கு பாக்யா “அவங்க எங்க வீட்ல வேலை செய்யறாங்க…” என்று கூறுகிறாள். இதைக் கேட்டு கஸ்தூரி என்னது வேலை செய்றாங்களா? ஏங்க என்னையப் பார்த்தா உங்களுக்கு வீட்டு வேலைக்காரி மாதிரி தெரியுமா? என்று கேள்வி கேட்கிறாள். உடனே பாக்யா, அவ வேலை மட்டும் செய்யல என் ஃபிரெண்ட்டும் அவதான்… உங்க பேச்சு குரல் எல்லாமே அப்படியே இருக்குது… இல்ல ஜெனி… என்று கூறுகிறாள். அதற்கு ஜெனி ஆமாம் ஆண்ட்டி என்று கூறுகிறாள்.

இனியா தனது அப்பா கோபியை அழைத்து வந்து கஸ்தூரியைக் காட்டி செல்வி ஆண்ட்டி மாதிரி இருக்காங்க பாருங்க என்று காட்டுகிறாள். கோபியும் ஆச்சரியமாக பார்க்கிறான். செழியன் அப்போது இது செல்வி அக்கா இல்லைய என்று கேட்கிறான். அதற்கு பாக்யா, தனத்தோட அண்ணி கஸ்தூரியாம் ஆச்சரியமா இருக்கு இல்லை என்று கூறுகிறாள். அவனும் ம்ம்ம் ஆமாம் என்று கூறுகிறான். பாக்யாவின் மாமியார், உலகத்தில ஒரே மாதிரி 7 பேர் இருப்பாங்கனு சொல்வாங்க… அதுவும் அச்சு அசலா அப்படியேவா இருப்பாங்க… என்று கேட்கிறார்.

இனியா, நான் உங்க கூட ஒரு போட்டோ எடுத்துக்கட்டுமா, நான் இதை செல்வி ஆண்ட்டி கிட்ட காட்டணும் என்று போட்டோ எடுத்துக்கொள்கிறாள். இப்படி எல்லோரும் கூட்டமாக இருக்கும்போது பிரசாந்த், ஐஸ்வர்யாவிடம் உனக்கு ஜூஸ் கொண்டுவரவா என்று கேட்கிறான். நீ உள்ள போய் ரெஸ்ட் எடுக்கிறயா? என்று கேட்கிறான். செல்வியும் கஸ்தூரியும் ஒரே மாதிரியா இருப்பதை செழியன், கோபி எல்லோரும் ஆச்சரியமாக இருப்பதாகப் பேசிக்கொள்கிறாள். இதையடுத்து, மல்லி கஸ்தூரியிடம் கோபியை தனது அண்ணன் பெரியம்மா பையன் என்று அறிமுகப்படுத்தி வைக்கிறார்.

தனம் ஐஸ்வர்யாவிடம் நலம் விசாரிக்கிறாள். சித்தி நீங்கள் இங்கே இருப்பது தெரியாமல் சித்தி கூட்டிக்கிட்டு வந்துவிட்டார்கள் என்று கூறுகிறாள். உடனே பாக்யாவின் மாமியார், செல்வி இது உன்னோட பொண்ணா என்று கேட்க கஸ்தூரி என்னது செல்வியா என்று கேட்கிறாள். உடனே பாட்டி, இல்லை எங்க வீட்டு வேலைக்காரி செல்வி ஞாபகத்துல கேட்டுவிட்டேன் என்று கூறுகிறார்.

அதற்கு கஸ்தூரி என்ன பார்த்தா இவ்வளவு பெரிய பொண்ணுக்கு அம்மா மாதிரியா இருக்கு…” என்று கேட்கிறாள். அப்போது, முல்லை, “இவங்க எங்க அண்ணி, இவங்களுக்கு 8 வயசுல ஒரு பையன் இருக்கான்… ஆனால், கல்யாணமாகி 8 வருஷம் கழிச்சுதான் பொறந்தான்.” என்று சொல்கிறாள். எழிலன் நீங்கள் இவங்களை எப்படி கூப்பிடுவீங்க என்று கேட்க, “இவங்க எங்க அண்ணி ஆனால் அத்தாச்சினுதான் கூப்பிடுவோம்” என்று கூறுகிறாள். தனமும் எங்க பக்கத்துல நாங்க அத்தாச்சினுதான் கூப்பிடுவோம் என்று கேட்கிறாள். சரி வாங்க என்று பிரசாந்த் அவர்களை உள்ளே அழைத்துச் செல்கிறான். பாட்டி ஒன்னுமே புரியலயே என்று கூறுகிறார்.

அடுத்த காட்சியில் மல்லி துணியை அயர்ன் செய்துகொண்டிருக்கிறாள். அப்போது, அங்கே வரும் பிரசாந்த் தான் அயர் செய்து தருவதாகக் கூறுகிறான். அவன் ஏதோ பொடி வைத்துப் பேசுவதை உணர்ந்துகொண்ட மல்லி அப்போ இந்த மொத்த துணியையும் அயர்ன் செய்து மடித்துவைத்துவிட என்று சொல்கிறாள். அப்போது, பிரசாந்த், உங்களுக்கு ஏதோ உதவி செய்யலாம்னு வந்தா மொத்தத்தையும் என் தலைமேல கட்டிவிட பார்க்கிறீங்க… என்று கூறுகிறான். பின்னர், மல்லி என்ன விஷயம் என்று பிரசாந்த்திடம் கேட்கிறாள். அதற்கு பிரசாந்த், ஐஸ்வர்யாவை அவங்க அத்தைகிட்ட கேட்ட்கிறேன்னு சொன்னிங்க இல்ல சித்தி அதான் என்று கூறுகிறான். மல்லி, நல்ல யோசனை பண்ணி முடிவாதான் சொல்றியா? ஏன்னா நீ பைக்ல போகனும்னு முடிவு பண்ணுவ அப்புறம் கார்ல போகலாம்னு சொல்லுவ அதனால உறுதியா சொல்லு என்று கேட்கிறான். பிரசாந்த்தும் ஐஸ்வர்யாவை கல்யாணம் செய்துகொள்ள விரும்புவதாக உறுதியாக சொல்கிறான்.

இதையடுத்து அங்கே வரும் கஸ்தூரியிடம் மல்லி, “பிரசாந்துக்கு ஐஸ்வர்யாவை பிடிச்சு இருக்கு. அவனுக்கு கட்டி கொடுப்பீங்களா?” என கேட்கிறாள். இதைக்கேட்டு சந்தோஷம் அடையும் கஸ்தூரி, “என்னாலே நம்பவே முடியலை மல்லி, கட்டி கொடுங்கன்னு உரிமையா கேட்டா நான் கட்டி வைக்க மாட்டேனா” என சொல்கிறாள். அடுத்த காட்சியில், தனியாக இருக்கும் ஐஸ்வர்யாவை சந்தோஷத்தில் கைகளைப் பிடித்து சுற்றி விடுகிறான். இதை தூரத்தில் இருந்து பார்க்கும் கண்ணன், வருத்தத்துடனும் கோபத்துடனும் செல்கிரான். பிறகு, ஐஸ்வர்யாவிடம், “நான் ரொம்ப நாள் ஆசைப்பட்ட ஒன்னு நடக்க போகுது” கூறுகிறான். அதற்கு ஐஸ்வர்யா, “என்ன விஷயம்” என அவள் கேட்கிறாள். அதற்கு பிரசந்த், “அதை நானே எப்படி என் வாயல சொல்றது. உனக்கே தெரிய வரும் பாரு… உனக்கு சொல்ல வேண்டியவங்க சொல்வாங்க…” என சொல்கிறான். அப்போது, பிரசாந்த், ஐஸ்வர்யாவுக்கு என்ன பிடிக்கும் என்று கேட்கிறான். அவள் தனக்கு பருத்தி பால் அயிரை மீன் குழம்பு பிடிக்கும் என்று கூறுகிறாள். அதை உடனடியாக வாங்கிவர கிளம்புகிறான்.

அடுத்த காட்சியில், தனம், பாக்யா அனைவரும் பேசி கொண்டிருக்கும் போது, ஜெனி அங்கு வருகிறாள். அப்போது தனம், “உங்களை பார்த்த மாமியார் மருமகள் மாதிரி இல்லை. அம்மா பொண்ணு மாதிரி இருக்கீங்க…” என சொல்கிறாள். இதனிடையே, அங்கே வரும் மல்லியும், கஸ்தூரியும் அனைவரையும் உட்கார வைத்து பிரசாந்துக்கும் நம்ம ஐஸ்வர்யாவுக்கும் கல்யாணம் பண்லாம்ன்னு முடிவு பண்ணிருக்கோம் என சொல்கிறார்கள். அதனை கேட்டு அனைவரும் சந்தோசம் அடைகிறார்கள்.

மல்லி, கோபியிடம் “நீங்கதான் பிரசாந்துக்கு தாய் மாமாவா இருந்து இந்த கல்யாணத்தை நடத்தி வைக்கணும்” என சொல்கிறாள். கோபியும் கண்டிப்பா பண்ணி வைக்கிறேன் என்று சொல்கிறான். இதையடுத்து, ஜெனியும், இனியாவும் கண்ணனிடம் வந்து பேசுகிறார்கள். கண்ணன் மாமா முன்னல்லாம் ஜாலியா பேசுவாங்க. ஆனால், இப்போ பேசவே மாட்றாரு என இனியா சொல்கிறாள். அதற்கு கண்ணன், “அதெல்லாம் ஒன்னும் இல்லை. நம்ம வீட்ல இருக்கும் போது பேசுனேன். இது வேற வீடு இல்ல, அதான்” என்று கூறுகிறான்.

ஜெனி, இனியா, கண்ணன் மூன்று பேரும் பேசி கொண்டிருக்கும்போது, அங்கே ஐஸ்வர்யா வருகிறாள். அப்போது கண்ணன், “நீங்க பேசிட்டு இருங்க, நான் அங்க உட்கார்ந்து இருக்கேன்” என்று சொல்லிவிட்டு எழுந்து செல்கிறான்.

கண்ணன் போன பிறகு, ஐஸ்வர்யா, “இவன் ஏன் நம்மளை அவாய்ட் பண்றான். நம்மளையே அவனுக்கு பிடிக்கலை போல” என நினைக்கிறாள். இதையடுத்து, இனியா போரடிக்குது என கூறும் போது, ஐஸ்வர்யா வாங்க விளையாடலாம் என அழைக்கிறாள். இதையடுத்து, மூன்று பேரும் உட்கார்ந்து தாயம் விளையாடுகிறார்கள்.

அடுத்த காட்சியில், தனம், மல்லி அனைவரும் சமையல் செய்வது பற்றி பேசி கொண்டிருக்கிறார்கள். அப்போது, அங்கே ஐஸ்வர்யா வருகிறாள். நீங்க எல்லாரும் உட்காருங்க, நான் சமையல் பண்றேன் என சொல்லிவிட்டு சமைக்க ஆரம்பிக்கிறாள். இதனைத் தொடர்ந்து, முல்லை கதிருடன் போனில் பேசுகிறாள். அப்போது அங்கே வரும் எழில் அவளை கிண்டல் செய்கிறான். அப்போது பாக்யாவும் அங்கே வந்து அனைவரும் பேசிக் கொண்டிருக்கிறார்கள். இத்துடன் பாண்டியன் ஸ்டோர்ஸ் - பாக்கியலட்சுமி சீரியல்களின் மெகா சங்கமத்தில் இன்றைய எபிசோட் நிறைவடைகிறது.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"

Pandian Stores Serial Baakiyalakshmi Serial Kathir Mullai Pandian Stores Vs Baakiyalakshmi
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment