Advertisment

பாண்டியன் ஸ்டோர்ஸ் மூர்த்தி கிட்ட வசமாய் மாட்டிக் கொண்ட கோபி - ராதிகா! மகா சங்கமம் ட்விஸ்ட்

மகா சங்கமம் எபிசோட் தொடங்கியது

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
pandian stores serial pandianstores vijay tv

pandian stores serial pandianstores vijay tv

pandian stores serial pandianstores vijay tv : விஜய் டிவி-யில் ஒளிபரப்பாகி வரும் ‘பாக்கிய லட்சுமி’ சீரியலுக்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு ஏராளம். ஒரு பெண்ணுக்கு, அம்மாவாக, மனைவியாக, மருமகளாக இருக்கும் சவால்களை மையப்படுத்திய கதை.

Advertisment

பாக்கிய லட்சுமியின் மகன் செழியன் பல பிரச்சனைகளுக்கு பிறகு ஜெனியை கரம் பிடித்துள்ளார். இந்த கல்யாணம் நடக்க காரணமே செழியனின் அம்மா தான். ஆனால் செழியனோ தனது வேலையை முடித்துக் கொண்டு வழக்கம் போல் வீட்டில் பாக்கியாவுக்கு எதிராகவே தனது அப்பா, தாத்தா உடன் சேர்ந்து கேலி செய்து வருகிறார்.

ஆனால், அவரிமன் மனைவி ஜெனி அப்படியில்லை. படித்த பண்பான பெண். தனது மாமியாருக்கு பல உதவிகளை செய்து மசாலா பொடி பிசினஸில் உதவியாக இருக்கிறார். ஜெனியுடன் சேர்ந்து பாக்கியா மசாலா பொடியை லாபமாக விற்று அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளார்.

இந்த நேரத்தில் தான் பாக்கியா, தனது தொழில் தொடர்பாக கும்பகோணம் செல்ல முடிவு எடுக்கிறார். அப்போது தான் மகா சங்கமம் எபிசோட் தொடங்கியது. அதாவது பாண்டிய ஸ்டோர் உடன், பாக்கியலட்சுமி சீரியலும் சேர்ந்து சங்கமம்.

ராதிகா தனது இடத்தை விற்க கும்பகோணம் வருகிறார். அவருடன் கோபியும் துணைக்கு வர, கும்பகோண கோயில் வேண்டுதலுக்காக பாக்கியாவும், இனியாவும் கோயியுடன் வருகிறார்கள். இப்படியே ஒரு வாரம் நகர, அடுத்த ட்விஸ்ட் வந்தது. கோபி- ராதிகா ஒன்றாக வெளியில் போகும் இடத்தை பாண்டியன் ஸ்டோர்ஸ் மூர்த்தி பார்த்து விடுகிறார். இதனை தனத்திடமும் சொல்கிறார். அடுத்து என்ன?

Vijay Tv
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment