Pandian Stores Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில், இன்றைய எபிசோடில் நடந்த கதையை சுவாரஸ்யம் குறையாமல் இங்கே காணலாம்.
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் சத்யமூர்த்தி குடும்பத்தினர் கார் வாங்க வேண்டும் என்று முடிவு செய்கிறார்கள். இதையடுத்து, சத்யமூர்த்தி, ஜீவா, கதிர் ஆகியோர் கார் பார்த்துவிட்டு வந்து அதைப்பற்றி குடும்பத்தினரிடம் சொல்கிறார்கள்.
இதைக் கேட்டு மகிழ்ச்சி அடையும் தனம், “கார் எப்போ வருது” என ஆவலுடன் கேட்கிறாள். அதற்கு, “நாளைக்கு காலைல பத்து மணிக்கு வந்துடும். இல்லன்னா மதியத்துக்குள்ள வந்துடும்” என பதில் சொல்கிறார்கள். கார் வரப் போகிறது என்ற மகிழ்ச்சியில் தனம், “வண்டிக்கு எவ்வளவு ஆச்சு. கார் பெரிசா இருக்குமா?” என்று கார் பற்றியே கேள்வி கேட்கிறாள்.
தனம் கார் பற்றியே கேள்வி கேட்பதால், “இவளை பாருடா சின்ன பிள்ளை மாதிரி கார் பற்றியே கேள்வி கேட்குறா” என்று சத்யமூர்த்தி தனது மனைவி தனத்தை கிண்டல் செய்கிறான்.
வீட்டில் கார் வாங்குகிறார்கள் என்று சந்தோஷப்படும் கண்ணன், அப்போது “எனக்கு கார் ஓட்ட கற்று கொடுங்க” என ஜீவாவிடம் கேட்கிறான். அதற்கு கதிர் “நான் கத்து கொடுக்கிறேன்” என சொல்கிறான். “உன்கிட்ட அடி வாங்கி கத்துக்கிறதுக்கு, நான் ஜீவா அண்ணன் கிட்டயே கத்துக்கிறேன்” என சொல்கிறான்.
தொடர்ந்து பேசும் கண்ணன், “இந்த பிரசாந்த் பையன் ஒரு காரை வச்சுட்டு ஓவரா சீன் போடுறான். நானும் கார் ஓட்ட கத்துக்கிட்டு அவன் முன்னாடி போய் நிக்கனும்” என்று சொல்கிறான். இதைக் கேட்ட கதிர், “காரை காலேஜ்க்கு கொண்டு போக பிளான் பண்றியாடா? கொன்றுவேன்” என அன்பாக எச்சரிக்கிறான்.
கார் என்ன கலர், என்ன என்ன கம்பனி கார் என்பதை பற்றி சொல்லாமல் கதிர் எல்லாம் சஸ்பென்ஸ் என கூறுகிறான். கதிர். நாளைக்கு யார் கார் ஓட்டுவது, காரில் யார் எல்லாம் எங்கே உட்காருவது என்பதை பற்றி பெரிய ஆவலுடன் பேசி கொள்கிறார்கள்.
அடுத்த நாள் காலையில், கதிர் எக்ஸாம்க்கு கிளம்பும் போது, “நீ எனக்காக வெளியே ரொம்ப நேரம் உட்கார்ந்து இருக்குறதை பார்த்தா பாவமா இருக்கு. நீ இங்கேயே இரு, நான் போயிட்டு வர்றேன்” என சொல்கிறான். அவள் பிடிவாதமாக நானும் வருவேன் என சொல்கிறாள். அதன்பிறகு, வெளியே வந்து, முல்லையும் கதிரும் “பிசியோதெரபி பண்ணனும்… இன்னைக்கும் ஹாஸ்பிட்டல் போகணும்” என்று சொல்லிவிட்டு கிளம்புகிறார்கள்.
கதிர் - முல்லை கிளம்பிச் சென்ற பிறகு, மீனா, “இவர்கள் நெஜமாவே ஹாஸ்பிட்டல் தான் போகிறார்களா? என்று தனத்திடம் கேட்கிறாள். “இதோ இவ ஆரம்பிச்சுட்டா” என சொல்லும் போது, “கதிர் இப்போலாம் அடிக்கடி பேன்ட், ஷர்ட் போடுறாங்கா... முல்லையும் கையில அந்த கவரோடையே போறாங்க... சீக்கிரம் என்ன நடக்குதுன்னு கண்டுபிடிக்கிறேன்” என மீனா சிஐடி கணக்காக கண்டுபிடிக்கிறேன் பாருங்க என்று சொல்கிறாள்.
இதையடுத்து, சத்யமூர்த்தி வீட்டை விட்டு கிளம்பும்போது, “இன்னைக்கு கார் வந்துடும்ல” என மீனா கேட்கிறாள். அதற்கு சத்யமூர்த்தி “காரோட வந்து ஹாரன் அடிக்கிறேன். ரெண்டு பேரும் வாசலுக்கு வந்து பாருங்க” என சொல்கிறாள்.
இதையடுத்து, தனம் தனது அண்ணனுக்கும், மல்லிக்கும் இன்று வீட்டிற்கு கார் வர போவதை பற்றி சொல்கிறாள். அப்போது மீனா “உங்க காரை விட எங்க காரு பெரிய காரு” என மல்லியை கலாய்க்கிறாள்.
அதோட நிற்காமல், மீனா அவளுடைய அம்மாவுக்கு போன் பண்ணி, “இன்னைக்கு எங்க வீட்டுக்கு கார் வருது. நீங்களும், அப்பாவும் வந்து பார்த்துட்டு போங்க…” என சொல்கிறாள். தொடர்ந்து பேசும் மீனா, “நீங்க வரலன்னாலும் பரவாயில்லை, நாங்க கார் வாங்குன விஷயத்தை அப்பா காதுல போட்டு வை…” என சொல்கிறாள். பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலின் இன்றைய எபிசோடு இத்துடன் நிறைவடைகிறது. அடுத்த எபிசோடில், பந்தாவாக கார் வாங்கிய சத்யமூர்த்தி குடும்பத்தினர், கடையில் கரகாட்டக்காரன் கோஷ்டி கதையாக தள்ளிக்கொண்டு போவதை பாருங்கள்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.