Pandian Stores Serial Today Episode : கண்ணன் கல்யாணம் பண்ணிக்கிட்டான் என்று பிரஷாந்த் சொல்ல தனம் கண்ணன் அப்படியெல்லாம் செஞ்சிருக்க மாட்டான் என்று சொல்கிறாள். அப்போது பிரஷாந்த், கதிரும் ஜீவாவும் கல்யாணத்தை பார்த்துவிட்டுத்தான் வந்துருக்காங்க என்று சொல்கிறான். இதை கேட்டு மூர்த்தி என் தம்பி அப்படியெல்லாம் பண்ணமாட்டான் என்று சொல்கிறான். அதை கேட்டு கஸ்தூரி அவர் சொல்லதுல உண்மை இல்லான உங்க தம்பிங்க ஏன் இப்படி இருக்காங் என்று கேட்கிறாள்.
அதற்கு பிரஷாந்த் நீங்க வாங்க நான் காமிக்கிறேன் என்று மூர்த்தியை அழைத்துச்செல்ல அப்போது கண்ணனும் ஐஸ்வர்யாவும் காரில் வந்து இறங்குகின்றனர். இதை பார்த்து பிரஷாந்த் இவன் தப்பு பண்ணமாட்டானு சொன்ளீங்ளே இப்ப பாருங்க என்று சொல்ல மூர்த்தி அதிர்ச்சியில் நிற்கிறான். அப்போது கஸ்தூரி இப்படி பண்ணிட்டியேடி என்று ஐஸ்வர்யாவை அடிக்கிறாள். அப்போது ஜெகா மாப்ள நான் கூட இவன நம்புன ஆனா எல்லாரும் நம்புனேம். ஆனா இப்படி கல்யாணம் பண்ணிக்கிட்டு வந்து நிக்கிறான் பாரு என்று சொல்கிறான்.
அப்போது தனம் கொஞ்சம் மயங்கி விழ அதிர்ச்சியில் கண்ணன் அண்ணி என்று சொல்கிறான். ஆனால் அவன் அம்மா அங்கேயே நில்லுடா என்ன காரியம் பண்ணிட்டு வந்து நிக்கிற என்ன பண்ணிட்டு வந்து நிக்கிறான் பாரு மூர்த்தி என்று சொல்கிறாள். அப்போது கஸ்தூரி கண்ணன் நீங்க நினைக்கிற மாதிரியெல்லாம் இல்லனு சொன்னேனே யாராவது கேட்டீங்களா என்று கேட்கிறாள். மேலும் கஸ்தூரி ஐஸ்வர்யாவை அடிக்க மீனா விடுங்க அண்ணி என்று சொல்கிறாள்.
அடுத்து நீங்க ரெண்டுபேரும் ஒரே நேரத்துல ரெண்டு குடும்பத்தையும் தலைகுனிய வச்சிட்டீங்களே, ஏமா ஐஸ்வர்யா உனக்கு எவ்ளோ சப்போர்ட் பண்ண என்று ஜெகா சொல்ல நீ என் குடும்பத்துலயா வந்து பொறந்த என்று கஸ்தூரி கேட்கிறாள். அப்போது பிரஷாந்த் மீண்டும் கண்ணனை அடிக்க கதிர் வந்து தடுக்கிறான. அதற்கு பிரஷாந்த் தம்பிய அடித்தஉடன் கோபம் வருதோ என்று மீண்டும் அடிக்க போக கதிர் அவனை பிடித்து தள்ளி விடுகிறான். அப்போது மல்லி எல்லாரும் என்ன நினைச்சிட்டு இருக்கீங்க என்று கேட்டுவிட்டு எல்லாம் என்னோட தப்புதான் இந்த குடும்பத்துல திரும்பவும் வந்து சேந்தது தப்பு நீ ஐஸ்வர்யா மேல ஆசைப்பட்டதும் கல்யானத்துக்கு ஒத்துக்கிட்டது தப்பு என்று சொல்கிறாள்.
மேலும் உன்ன கட்டிக்க இவளுக்கு தான்ட கொடுத்து வைக்கல உனக்கு அப்டி ஒரு பொண்ணா பார்த்து கட்டி வைக்கிறேன்டா என்று சொல்கிறாள். அதன்பிறகு மூர்த்தியிடம் என்ன மாமா அமைதியா இருக்கீங்க என்று கேட்டுவிட்டு, தனத்திடம் இதுக்குதான் நீ என்ன கோவில்ல இருந்து கூட்டிக்கிட்டு வந்தியா என்று கேட்கிறாள். அதற்கு முல்லை புரியாம பேசாத அக்கா என்று சொல்ல யாரும் பேசக்கூடாது நீ உன் குடும்பத்துக்கு சப்போர்ட் பன்றல்ல என்று முல்லையிடம் கேட்கிறாள்.
அடுத்து மூர்த்தியிடம் உங்கள மண்டபத்துல உட்கார வைத்துவிட்டு வேற ஒருத்தர கல்யாணம் பண்ணிக்கிட்டு போய்டேனே அதுக்கு இப்போ பழி வாங்குறீங்களா என்று கேட்கிறாள். அடுத்து தனத்திடம் நீ இவ்ளோ பெரிய விஷமா இருப்பனு நினைக்கவே இல்ல ரொம்ப சந்தோஷம் என்று சொல்கிறாள். அப்போது கஸ்தூரி இவன அப்பவே கண்டிச்சிருந்தா இவ்வடி நடந்திருக்குமா என்று கேட்க, அதற்கு மீனா ரெண்டு பேரும் விரும்பிதான கல்யாணம் பண்ணிக்கிட்டாங்க ஐஸ்வர்யா மேலயும் தப்பு இருக்கு என்று சொல்கிறாள். இதை கேட்டு கோபமாகும் கஸ்தூரி ஐஸ்வர்யாவை அடிக்க போன கண்ணன் கஸ்தூரி கையை பிடித்துவிடுகிறான்.
இதை பார்த்து அனைவரும் அதிர்ச்சியாக என் கையவே பிடிக்கிறியா என்று கேட்டு கஸ்தூரி அவனை அடிக்கிறாள். எப்படியோ போகட்டும் விடு என்று ஜெகா சொல்ல, கஸ்தூரி நீங்க நல்லாவே இருக்க மாட்டீங்க என்று சொல்ல, சித்தி சித்தப்பா பாட்டினு சொல்லிக்கிட்டு வீட்டுப்பக்கம் வந்துடாத என்று ஜெகா சொல்கிறான்.
அதன்பிறகு என்க்கு மூர்த்தி மாமா புடிக்கலனு நா போய்ட்ட அதுக்கு இத்தனை வருஷம் கழிச்சி என்ன பழிவாங்கிட்டீங்களே நா இப்போ சொல்ர நீங்க யாரும் நல்லவே இருக்க மாட்டீங்க வீட்டு வாசல்ல இருந்து சொல்ல இந்த வீடு வெலங்காது என்று சொல்ல, தனம் அம்மா வாய மூடுமா கர்ப்பமா இருக்க வீட்ல என்ன பேசிட்டு இருக்க என்று கேட்க, மூர்த்தி அம்மா போதுமாடா கண்ணா உன்ன அம்மாவா இருந்து வளர்த்த்துக்கு இவளுக்கு தேவைதான் என்று சொல்கிறாள்.
அதற்கு கண்ணன் வேறு வழி தெரியலமா என்று சொல்ல இனிமே என்ன அம்மானு கூப்பிடாத என்று சொல்லி இனிமேல் நான் உனக்கு அம்மாவும் இல்ல நீ எனக்கு மகனும் இல்ல என்று சொல்ல கண்ணன் அதிர்ச்சியில் உரைகிறான் அத்துடன் முடிகிறது இன்றைய எபிசோடு
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.