ஆந்திரா மாநிலத்தில் தான் அதிகம் விரும்பும் பிரபல நடிகரின் திரைப்படம் வெளியாகவில்லை என ரசிகர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.
பொதுவாகவே அனைத்து நடிகர்களின் ரசிகர்களும் எதிர்பார்ப்பது, அவர்கள் விரும்பும் நடிகரின் படம் பற்றிய அப்டேட் அடிக்கடி வரவேண்டும் என்பது தான்.
ரசிகர் தற்கொலை
அப்படி தெலுங்கில் பிரபாஸ் நடித்துவரும் சாஹோ படத்தின் அப்டேட் எதுவும் வெளிவரவில்லை என கூறி ரசிகர் ஒருவர் தற்கொலை செய்துகொண்டுள்ளார். அதற்குமுன் அவர் எழுதிய கடிதம் ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
fan suicide, ரசிகர் தற்கொலை
இந்த கடிதம் உண்மையா, பொய்யா என நம்பத்தகுந்த தகவல் எதுவும் இல்லை. இருப்பினும் பலரும் இந்த செயலை முட்டாள்தனம் என்று கடுமையாக கூறிவருகின்றனர்.