Advertisment

குடும்பத்தை விமர்சித்தவர்களுக்கு தக்க பதிலடி கொடுத்த ரயான் ராதிகா

பந்தம் என்பது, யாருடைய டி.என்.ஏ யாருடன் சேர்ந்திருக்கிறது என்பதல்ல, அது முழுக்க முழுக்க அன்பால் மட்டுமே நிறைந்த ஓர் உணர்வு.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Radhika's daughter Rayane's bold reply for trolls

தனது குடும்பத்தை விமர்சித்தவர்களுக்கு ராதிகாவின் மகள் ரயான் ட்விட்டரில் பதிலடி கொடுத்திருப்பது வைரலாகி வருகிறது.

Advertisment

விஷயம் இது தான். ரயானும் அவரது குழந்தையும் சரத்குமாருடன் இருக்கும் படத்தைப் பகிர்ந்து, ‘சரத்குமார் இஸ் ஃபீலிங் ப்ளஸ்டு வித் ரெண்டாவது மனைவி ராதிகாவோட ரெண்டாவது கணவரோட மகளோட சன்’ என்ற கேப்ஷனிடப்பட்டிருந்தது.

இந்த படம் மற்றும் கேப்ஷன் ஆங்காங்கே இணையத்திலும் பகிரப்பட்டது. இது தொடர்பாக நீண்ட அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார் ரயான். அதில் “பொதுவாக இதுபோன்ற ட்ரோல்களை பார்க்க நேரிட்டால் மறந்துக் கூட இன்னொரு முறை பார்ப்பதை தவிர்த்து விடுவேன்.

எனது சின்ன வயதிலிருந்தே இது போன்ற ட்ரோல்களை சந்தித்து வருவதால், எதுவும் எனக்குப் பெரிதாக தோன்றாது. என் கல்யாணம் வரை தொடர்ந்த அந்த விமர்சனங்கள், இப்போது எனது குழந்தை வரை நீண்டிருக்கிறது. ஆனால் இனியும் இதனை விடக்கூடாது, முடிவு கட்ட வேண்டும் எனத் தோன்றியதன் காரணமாகவே நான் இப்போது வாய் திறக்கிறேன்.

ஒத்து வராத திருமணத்தை முறித்துக் கொண்டு, அதிலிருந்து வெளியேற சுயமரியாதையும், நிறைய துணிச்சலும் தேவைப்படுகிறது. அதுவும் கைக்குழந்தையுடன் வெளியேறுவதற்கு நிறைய தன்னம்பிக்கையும் மனதிடமும் அதீதமாக தேவைப்படுகிறது.

தனக்கென ஒரு தொழிலைத் தேர்ந்தெடுத்து, அதனை அடிப்படையிலிருந்து கட்டமைத்து வெற்றிக்கொடி நாட்டிய என் தாய் ஒரு சூப்பர் வுமன்.

எல்லா ஆண்களாலும் குழந்தைப் பெற்றுக் கொள்ள முடியும். ஆனால் அடுத்தவர் குழந்தையையும் தான் பெற்ற பிள்ளை போல் பாசம் காட்டி வளர்க்க உண்மையான ஆணால் மட்டுமே முடியும். அவர் தான் என் தந்தை.

என் தாய் வேண்டும் என்பதற்காக, என்னையும் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்ற நிர்பந்தத்தில், ஒரு பேக்கேஜ் டீலாக அவர் என்னை ஏற்றுக்கொள்ளவில்லை. அவரது கண்களில் நான் எப்போதுமே சுமையாகத் தெரிந்ததில்லை. பதிலாக அவருக்கு நான் போனஸாகத்தான் தெரிந்தேன். ஒரு வலிமையானவரால் தான் அப்படி எண்ண முடியும்.

பந்தம் என்பது, யாருடைய டி.என்.ஏ யாருடன் சேர்ந்திருக்கிறது என்பதல்ல, அது முழுக்க முழுக்க அன்பால் மட்டுமே நிறைந்த ஓர் உணர்வு. எல்லாம் தவறாக நடக்கையில், நான் இருக்கிறேன் என சொல்லும் ஆறுதலில் இருக்கிறது.

குடும்பம் என்பது எப்போதும் ரத்தம் சார்ந்ததாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை. உங்களை தனது சொந்தமாக ஏற்றுக்கொண்டு உங்களது மகிழ்ச்சியை உறுதி செய்ய தன்னை முழுமையாக அர்ப்பணித்து என்ன நடந்தாலும் உங்கள் மீது அன்பை செலுத்தும் உறவுகள் நிறைந்ததே குடும்பம். நாங்கள் அப்படிப்பட்ட உணர்வால் ஒன்றிணைந்த குடும்பம். நாங்கள் மகிழ்ச்சியாகவும் உறுதியாகவும் இருக்கிறோம்.

அதனால், என்னை இப்படி பொழுதுபோகாமல் விமர்சிப்பவர்களே, ஒருநாள் நீங்கள் உங்கள் பாதுகாப்பற்ற உணர்விலிருந்து மீண்டு, வெறுப்புக்குப் பதிலாக அன்பை பரப்புவீர்கள் என நம்புகிறேன்” என தக்க பதிலடி கொடுத்துள்ளார்.

தவிர ட்விட்டரில் இந்த அறிக்கையை, “இந்த மாதிரியான உலகத்தில் தான் நாம் வாழ்கிறோம். ஆம் அப்பா மிகவும் ஆசிர்வதிக்கப்பட்டவர் தான் (ப்ளஸ்டு), ஏன் இருக்கக் கூடாது. அவருக்கென அமேஸிங் மனைவி, 4 குழந்தைகள், பேரன் என அளவுகடந்து அன்பு செலுத்தும் குடும்பம் இருக்கையில்?” என்ற கேப்ஷனோடு பதிவிட்டிருக்கிறார் ரயான்.

Tamil Cinema Radhika Sarathkumar Sarath Kumar R Sarathkumar
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment