Advertisment

Raja Rani 2 Serial: வீடியோவை டெலிட் செய்தாலும் நகை திருட்டில் அம்பலப்பட்ட அர்ச்சனா!

Vijay TV Serial: நெக்லஸ் திருட்டில் வீடியோவை டெலிட் செய்தாலும் அர்ச்சனா எப்படி அம்பலப்பட்டார் என்பதை சுவாரஸ்யம் குறையாமல் இங்கே காணலாம்.

author-image
WebDesk
New Update
raja rani 2, raja rani 2 serial, vijay tv, sandhya, saravanan, archana, archana steal necklace, ராஜா ராணி 2, ராஜா ராணி 2 சீரியல், விஜய் டிவி, நகை திருட்டில் அம்பலப்பட்ட அர்ச்சனா, சரவணன், சந்தியா, saravanan produce video evidence, raja rani 2 archana shame, sivagami shouting archana, unexpected twist in raja rani 2 serial

Raja Rani 2 Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் ராஜா ராணி 2 சீரியல் இன்றைய எபிசோடில் விறுவிறுப்பான திருப்பங்களை சந்தித்துள்ளது. நெக்லஸ் திருட்டில் வீடியோவை டெலிட் செய்தாலும் அர்ச்சனா எப்படி அம்பலப்பட்டார் என்பதை சுவாரஸ்யம் குறையாமல் இங்கே காணலாம்.

Advertisment

ராஜா ராணி 2 சீரியலில் இன்றைய எபிசோடில் வீட்டில் நெக்லஸ் திருடு போன விவகாரம் பெரிய விஷயமாகிறது. வீட்டில் குடும்பத் தலைவியான சிவகாமி தனது மகன் சரவணன், மருமகள் சந்தியா, மற்றொரு மகன் செந்தில், மருமகள் அர்ச்சனா என அனைவரையும் கூட்டி நகையை யார் எடுத்தார்கள் என்று நடு கூடத்தில் வைத்து விசாரிக்கிறார். அப்போது கையை சந்தியா தான் திருடி அண்ணனிடம் கொடுத்து வைத்து பேங்க்கில் அடகு வைத்திருக்கிறார் என மாமியார் சிவகாமி குற்றம் சுமத்துகிரார். சந்தியா அந்த நகையை திருடவில்லை என நிரூபிக்க வேண்டும் என நினைக்கிறார். நகையைத் திருடிய அர்ச்சனாவும் செந்திலும் வீடியோ ஆதாரத்தை டெலிட் செய்துவிட்டோம் என்று சந்தியாவை மாட்டிவிட முயற்சிக்கிறார்கள்.

அர்ச்சனாவும் செந்திலும் நகையை எடுத்ததை வீடியோவில் பார்த்த சரவணன் அர்ச்சனாவிடம் யாருக்கும் தெரியாமல் நகையை கொண்டுவந்து கொடுத்துவிடு என்று கூறியிருந்தும், அவர்கள் இப்படி பேசுவதைப் பார்த்து கோபமடைந்த சரவணன் அந்த நகையை எடுத்தது வேறு யாருமில்லை அர்ச்சனாவும் செந்திலும்தான் என்று பொதுவில் போட்டு உடைக்கிறான்.

சரவணன் கூறியதைக் கேட்டு ஷாக் ஆன அர்ச்சனாவும் செந்திலும் அதற்கு என்ன ஆதாரம் என்று கேட்கிறார்கள். அன்றைக்கு ஒரு வீடியோ கேமிரா வாங்கி வந்தாங்க இல்லை அதை போய் எடுத்துக்கொண்டு வரச் சொல்கிறான். அந்த கேமிராவை எடுத்து பார்த்தால் அதில் எல்லாமே டெலிட் செய்யப்பட்டு நோ இமேஜ் என்று காட்டுகிறது. இதனால், அதிர்ச்சி அடையும் சரவணன், இவங்க 2 பேரும் அந்த நெக்லஸ்ஸை போட்டுக்கொண்டிருந்ததை நான் அந்த வீடியோவில் பார்த்தேன்மா என்று அம்மா சிவகாமியிடம் கூறுகிறான்.

வீடியோவை டெலிட் செய்துவிட்ட தைரியத்தில் அர்ச்சனா, ஆதாரம் இருந்தா காட்டுங்க, உங்க பொண்டாட்டியை காப்பாத்தா என்மேல திருட்டுப் பழியை போட பார்க்கறிங்க… நிரூபிச்சு காட்டுங்க என்று கூறுகிறாள். சந்தியாவும் கேமிராவை வாங்கி பார்க்கிறாள். அதில், எதுவும் இல்லை என்று கூறுகிறாள். இதனால், ஆதாரம் இல்லை என்று தெரிந்த அர்ச்சனா, நெக்லஸ் திருட்டில் என்ன ஒரு நாடகம் போடுகிறீர்கள், என்னை மாட்டிவிட பார்க்கிறீர்கள் என்று சரவணனனையும் சந்தியாவையும் பார்த்து கேட்டு ஆர்ப்பாட்டம் செய்கிறாள்.

ஆனாலும், சரவணன், நகையை எடுத்துக்கொண்டு வந்து கொடுத்துவிடுங்கள் என்று அர்ச்சனா செந்திலிடம் மீண்டும் பேசுகிறார். அப்போது, வீடியோவை டெலிட் செய்துவிட்டோம் என்ற தைரியத்தில் தவறை மறைத்துவிடலாம் என்ற நினைப்பில் சரவணனை எதிர்த்து பேசும் செந்தில் நகையை எடுக்கவே இல்லை என்று சொல்கிறோம் திரும்ப திரும்ப வந்து நகையைக் கொடு என்று கேட்கிற அண்ணனுகூட பார்க்க மாட்டேன் என்று செந்தில் வாக்குவாதத்தில் சரவணனை கீழே தள்ளிவிடுகிறான். அதற்குப் பிறகு, சரவணன், ரிலாக்ஸாக எழுந்து செந்திலிடம் பேச செல்கிறான். ஆனால், சந்தியா தடுக்கிறாள். கோபமடைந்த சரவணன் அனைவரையும் அதட்டி சத்தம் போடுகிறான்.

தான் அர்ச்சனாவிடம் நகையைக் கொண்டுவந்து கொடுத்துவிடும்படி தான் தனியாக பேசியதைக் கூறுகிறான். ஆனால், அர்ச்சனா நான் அப்படி பேசவே இல்லை என்று கூறுகிறாள். கடைசி வாய்ப்பாக நான் 1லிருந்து 10 எண்ணுவதற்குள் நகையைக் கொண்டுவந்து கொடுத்துவிட வேண்டும் என்று கவுண்டவுனைத் தொடங்குகிறான். ஆனால், அப்போதும் அமைதியாகவே இருக்கிறார்கள். வேறு வழி இல்லாமல் சரவணன் தனது போனில் இருக்கும் வீடியோ ஆதாரத்தை எடுத்து காட்டுகிறான்.

அதில், அர்ச்சனாவும் செந்திலும் நகையை எடுத்து அணியும் காட்சி பதிவாகியிருப்பதைப் பார்த்து அதிர்ச்சி அடைகிறார்கள். சிவகாமி கோபடமடைந்து அர்ச்சனாவையும் செந்திலையும் திட்டுகிறார். நகையைத் திருடியது மட்டுமில்லாமல் ஆதாரத்தையும் அழிச்சிருக்கீங்க என்று திட்டுகிறாள். சொந்த அண்ணன் அண்ணி என்று பார்க்காமல் எப்படி உனக்கு இப்படி செய்ய மனம் வந்தது என்று செந்திலைக் கடுமையாக திட்டுகிறார்.

நெக்லஸ் திருட்டில் மாட்டிக்கொன்டோமே என்று அவமானத்தில் அழுகிறாள் அர்ச்சனா. அத்தை தெரியாமல் பண்ணிவிட்டேன் என்னை மன்னித்துவிடுங்கள் என்று அர்ச்சனா மாமியார் சிவகாமியின் காலில் விழுகிறாள். இதை தெரியாமல் செய்தியா, திருடியது மட்டுமில்லாமல் அதை திட்டம்போட்டு மறைச்சிருக்க, சந்தியாவை மாட்டிவிட பார்த்திருக்க உன்னை எப்படி சும்மா விடுவது என்று திட்டுகிறார். பிறகு, சிவகாமி அந்த நெக்லஸ் நகையை எடுத்துக்கொண்டுவந்து தரும்படி கூறுகிறார்.

அர்ச்சனா அவமானத்துடன் அழுதுகொண்டே உள்ளே சென்று நெக்லஸை எடுத்துக்கொண்டு வந்து தருகிறாள். சிவகாமி அதை சந்தியாவிடம் கொடுக்க கூறுகிறாள். அந்த நெக்லஸை வாங்கிய சந்தியா எனக்கு கல்யாணத்தின்போது என்ன நகை போட்டிங்கனு எனக்கு தெரியாது. அப்போது எனக்கு போட்ட நகைகளைக் காட்டி எந்த நகைனு அடையாளம் காட்டச் சொன்னாலும் எனக்கு தெரியாது. ஏன்னா எனக்கு நகைமேல எந்த ஆசையும் இல்லை. இதை எங்கிட்ட கேட்டு இருந்தால் நானே உங்கிட்ட கொடுத்திருப்பேனே அர்ச்சனா என்று கூறி இந்த நகை உன்னோட நகை நீயே வச்சுக்கோ என்று சந்தியா அர்ச்சனாவின் கையைப் பிடித்து அவளிடமே நகையைத் தருகிறாள்.

சிவகாமியும் நகை திருட்டுப் பழியை அபாண்டமாக சந்தியா மீது சுமத்திவிட்டோமே என்று வருத்தப்பட்டு சந்தியாவிடம் மன்னிப்பு கேட்கிறார். பிறகு, இந்த வீட்டில் என்ன நடக்கிறது, நான் அர்ச்சனாவைக்கூட மன்னிப்பேன் ஆனால் உன்னை மன்னிக்க மாட்டேன். நீ எனக்கு மகனே இல்லை என்று செந்திலை கடுமையாக திட்டிவிட்டு அறைக்குள் சென்று கதவைச் சாத்திக்கொள்கிறார்.

சரவணன், ஒரு தவறு செய்துவிட்டால் அதை ஒப்புக்கொண்டு திருத்திக்கொள்ள வேண்டும். ஆனால், இப்படி அந்த தவறை மறைக்க மற்றவர்கள் மீது பழி போடக்கூடாது. தவறு செய்தால் அதை மாற்றிக்கொள்ள வேண்டும். தவறு செய்வதை முழுநேர வேலையாக வைத்திருக்கக் கூடாது என்று கூறிவிட்டு உள்ளே செல்கிறான். அவனுடன் சந்தியாவும் செல்கிறாள். பின்னாடியே சென்ற அர்ச்சனா, சந்தியாவிடம் மன்னிப்பு கேட்கிறாள். ஆனால், சந்தியா இதை நான் தப்பா எடுத்துக்கல என்று சொல்லிவிட்டு செல்கிறாள்.

செந்தில் நெக்லஸ் திருட்டில் மாட்டிகொண்ட அவமனாத்தில் அப்பாவிடம் மன்னிப்பு கேட்கிறான். சரி விடுடா, அதற்கு அப்பா, இது எல்லாம் சரியாக கொஞ்ச நாள் ஆகும் என்று சொல்லிட்டு செல்கிறார். எல்லோரும் போன பிறகு, அர்ச்சனாவின் நாத்தனார், அர்ச்சனாவைப் பார்த்து , “அண்ணி நான் உங்களை என்னவோ நினைச்சேன். ஆனால், நீங்க வேற லெவல்” என்று கூறி அவமானப்படுத்திவிட்டு செல்கிறாள். நெக்லஸ் திருட்டில் அதை ஒப்புக்கொள்ள எத்தனை வாய்ப்புகள் இருந்தும் வீடியோ ஆதாரங்களை டெலிட் செய்ததோடு அந்த திருட்டு பழியை சந்தியா மீது போட முயற்சி செய்த வில்லி அர்ச்சனா பொதுவில் மாட்டிக்கொண்டு அவமானப்பட்டு அசிங்கப்பட்டதைப் பார்த்த சீரியல் பார்வையாளர்கள் இவளுக்கு நல்லா வேணும் என்று முனுமுனுக்கிறார்கள்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Vijay Tv Raja Rani Serial Actress Raja Rani
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment