Advertisment

Raja Rani 2 Serial: பாஸ்கரை சமாளிக்க அர்ச்சனா - பார்வதி போடும் புது திட்டம்!

பார்வதி சீக்கிரம்னா எப்போ? அப்புறம் பிரச்னை கை மீறி போயிடுச்சுனா நான் உங்களை காப்பாத்த முடியாது. நீங்க இது உங்க வீடுனு சொல்லி உங்க தங்கச்சிய பொண்ணு பார்க்க வர சொன்னதுனு எல்லாத்தையும் அம்மாகிட்ட சொல்லிடுவேன் என்று கூறுகிறாள்.

author-image
WebDesk
New Update
Raja Rani 2, Raja Rani 2 Serial, Vijay TV, Raja Rani 2 serial today episode, ராஜா ராணி 2, ராஜா ராணி 2 சீரியல், பாஸ்கரை சமாளிக்க புது பிளான் போடும் அர்ச்சனா, பார்வதி, சந்தியா, சரவண, சிவகாமி, சுந்தரம், Raja Rani 2 serial today story, sandhya, saravanan, parvathy, archana, sivagami, Vijay TV Serials

Raja Rani 2 Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ராஜா ராணி 2 சீரியல் தினமும் விறுவிறுப்பான திருப்பங்களையும் பரபரப்பான கட்டங்களையும் சந்தித்து வருகிறது. அதை சுவாரஸ்யம் குறையாமல் இங்கே காணலாம்.

Advertisment

ராஜா ராணி 2 சீரியலில் மருமகள் சந்தியா மீது மாமியார் சிவகாமிக்கு நம்பிக்கை வந்துவிட்டது, புயல் ஓய்ந்தது என்று பார்த்தால் சிவகாமி இன்னும் சந்தியாவை நம்பவில்லை என்று கூறி அதிர வைத்தார். சிவகாமி சொன்னதைக் கேட்ட சந்தியாவும் கணவன் சரவணனிடம் நடந்த சம்பவத்தை சொல்லாமல் இனிமேல் பொறுத்துப் போக முடியாது. அதற்கெல்லாம் இவர்கள் தகுதி இலை என்று பொதுவாக கூறி அழுகிறார்.

இன்றைய எபிசோடில், மறு நாள் காலையில் சந்தியா குளித்துவிட்டு தலையை துவட்டிகொண்டு வருகிறார். அங்கே இருக்கும் சரவணன், ஏதாவது பேசலாம்னு பார்த்தால் இன்னும் இறுக்கமாவே இருக்காங்க நாம் தான் பேச வேண்டும் என்று மனதில் நினைக்கிறான்.

சந்தியாவிடம் பேச்சு கொடுக்கிறான். ஆனால், அவள் பேசாமல் இருக்கிறாள். சரி விட்டுப் பிடிக்கலாம் என்று மனதில் நினைத்துக்கொள்கிறான். அப்போது வீட்டு வேலைக்காரி மயில் வந்து சந்தியாவைப் பார்த்துவிட்டு என்ன முகம் வாடி இருக்கிறது என்று கேட்கிறாள். அதற்கு சந்தியா ஒன்றும் இல்லை என்று கூறுகிறாள். மயில் துணி துவைப்பதற்கு சரவணனின் துணிகளை வாங்கிச் செல்கிறாள். சந்தியாவும் அமைதியாக இருக்கிறாள். என்ன பேசுவது என்று சரவணன் யோசிக்கிறான்.

அடுத்த காட்சியில், அர்ச்சனா, தேவையில்லாமல் என் தங்கச்சிக்கு இந்த வீட்டுக்கு பொண்ணு பார்க்க வரவச்சி கல்யாணமும் நடக்கல. அந்த மாப்பிள்ளை பார்வதி மேல கண்ணு வச்சி தேவையில்லாமல் பிரச்னை பண்ணிகிட்டிருக்கான். முதல் வேலையா இதற்கு ஒரு முடிவு கட்டனும். என்ன பண்ணலாம் என்று யோசிக்கிறாள்.

அப்போது, அங்கே மயில் துவைப்பதற்கு துணியை எடுத்துக்கொண்டு வருகிறாள். மயில் அர்ச்சனாவிடம் உள்ள காபியை கொண்டு சென்று பார்வதியிடம் கொடுத்துவிடுவதாகக் கூறுகிறாள். ஆனால், அர்ச்சனா நானே கொடுத்துவிடுகிறேன் என்று கூறுகிறாள்.

பார்வதி, தன்னை தொந்தரவு செய்யும் பாஸ்கருக்கு ஒரு முடிவு கட்டனும் என்று மனதுக்குள் சொல்லிக்கொண்டிருக்கிறாள். அப்போது, அங்கே அர்ச்சனா வந்ததும் இப்பதான் உங்களைப் பற்றி நினைத்துக்கொண்டிருந்தேன் என்று கூறுகிறாள். அதற்கு அர்ச்சனா, நினைச்சுக்கிட்டு இருந்தியா இல்லை திட்டிக்கிட்டு இருந்தியா என்று கேட்கிறாள். அதற்கு பார்வதி என்ன அண்ணி, என் மைண்ட் வாய் எல்லாம் படிக்க ஆரம்பிச்சிட்டிங்க போல இருக்கு. சீக்கிரமா இந்த பாஸ்கர் பிரச்னைக்கு ஒரு முடிவு கட்டுங்க. வெளியில போனால் வந்து தொந்தரவு பண்றான். வீட்டுக்கு வந்தால் போன் பண்றான். ஒவ்வொரு முறையும் வீட்ல போன் அடிக்கும்போது ஒரே டென்ஷனா இருக்குது. ஒருவேளை நான் இல்லாதபோது போன் பண்ணி அம்மா இல்ல சந்தியா அண்ணி போன் எடுத்துட்டா பெரிய பிரச்னை ஆகிவிடும். இன்னைவரைக்கும், அந்த பூகொடுத்த விஷயத்துல அம்மா என்னை நம்பல. அப்புறம் செய்யாத தப்புக்கு என்னை வச்சி செஞ்சிடுவாங்க. முதல்ல இந்த பிரச்னைக்கு முடிவு கட்டப் பாருங்க என்று கூறுகிறாள்.

அதற்கு சந்தியா சரி சீக்கிரம் முடிவு கட்டிடலாம் என்று கூறுகிறாள். அதற்கு பார்வதி சீக்கிரம்னா எப்போ? அப்புறம் பிரச்னை கை மீறி போயிடுச்சுனா நான் உங்களை காப்பாத்த முடியாது. நீங்க இது உங்க வீடுனு சொல்லி உங்க தங்கச்சிய பொண்ணு பார்க்க வர சொன்னதுனு எல்லாத்தையும் அம்மாகிட்ட சொல்லிடுவேன் என்று கூறுகிறாள்.

இதைக்கேட்டு அதிர்ச்சி அடையும் அர்ச்சனா, இல்லை பார்வதி நான் பார்த்துக்கிறேன். இனிமேல் அவன் உனக்கு போன் பண்ண மாட்டான். ஆனால், எனக்காக நீ ஒன்னே ஒன்னு செய்யனும் என்று ஒரு திட்டத்தைக் கூறுகிறாள். இதைக் கேட்ட பார்வதி, திரும்பவும் இன்னொரு பிரச்னையில் என்னை இழுத்துவிடப் பார்க்கிறீர்களா? ஏற்கெனவே உங்க பிரச்னையை மறைக்க நான் சிக்கி சீரழிஞ்சுகிட்டு இருப்பேன். என்னால முடியாது என்று கூறுகிறாள்.

அதற்கு அர்ச்சனா, நான் உனக்கு எந்த பிரச்னையும் வராமல் பார்த்துக்கொள்கிறேன். ப்ளீஸ் இதைமட்டும் செய். இல்லைனா அத்தை என்னை இந்த வீட்டை விட்டு துறத்திவிட்டுவிட்டு உனக்கும் ஒரு கல்யாணத்த பண்ணிவச்சிடுவாங்க என்று கூறுகிறாள். பார்வதியும் இறுதியாக ஒப்புக்கொள்கிறாள்.

அடுத்த காட்சியில், சிவகாமி கலைப்பாக வெளியே இருந்து வருகிறார். குளுமையா இருக்கிற நம்ம ஊர்லயே இவ்வளவு வெயில் அடிக்குது என்று அமர்கிறார். அப்போது, சந்தியா ஒரு சொம்பில் தண்ணீர் எடுத்து வந்து தருகிறாள். முதலில் ஆச்சரியமாகப் பார்க்கும், சிவகாமி தண்ணீரை வாங்கிக் குடித்துவிட்டு தண்ணீர் மட்டுமே குடித்துக்கொண்டு இருக்கலாம் போல இருக்கு. சாப்பாடு கூட வேணாம் என்று கூறுகிறாள். பிறகு, மயில் எங்கே என்று விசாரித்துவிட்டு, இந்த டீப்பா ஏன் அழுக்கா இருக்கு என்று கேடிறாள். அதற்கு சந்தியா நான் வேணா துடைக்கிறேன் என்று கூறிவிட்டு சொம்பை வாங்கிச் செல்கிறாள். அப்போது, சிவகாமி இவள் ஏன் இப்படி இருக்கிறாள் என்று மனதுக்குள் நினைத்துக்கொள்கிறாள்.

அந்த நேரம் பார்த்து சிவகாமியின் கணவர் சுந்தரம் வயிறு வலியால் துடித்துக்கொண்டு முடியவில்லை என்று வருகிறார். சிவகாமி அவரை அமரவைத்து என்ன என்று விசாரிக்கிறாள். சந்தியாவும் வந்து என்ன மாமா என்று பதற்றத்துடன் விசாரிக்கிறாள். சிவகாமி நீங்க அந்த மருந்தை குடிக்கவே இல்லை இல்ல என்று கேட்கிறார். சுந்தரமும் ஆமாம் என்று கூறுகிறார். அதற்கு, சிவகாமி, கண்டதை திண்ணுட்டு வயிறு வலிக்கிறதுனு சொல்றது என்று திட்டுகிறாள். வயிறு வலிதாங்க முடியாமல் சுந்தரம், பாத்ரூமுக்கு செல்கிறார்.

சந்தியா, டீப்பாய் மேல் இருந்த நியூஸ் பேப்பரை எடுத்து படித்துக்கொண்டே டீப்பாயை துடைக்கிறாள். அதை மாமியார் சிவகாமியும் பார்க்கிறாள். அப்போது, பாத்ரூமில் இருந்து சுந்தரம் வயிறு வலியுடன் வருகிறார். அவருக்கு சிவகாமி மருந்து எடுத்துவந்து தருகிறாள். அதற்கு முன்பு, சந்தியாவை டீ போட்டு எடுத்து வரச் சொல்கிறார்கள்.

பிறகு, சிவகாமி தனது கணவர் சுந்தரத்தை வாயைக்கட்டுவதிலை பிறகு வயிறு வலிக்குது என்று சொல்வது என்று திட்டுகிறார். அப்போது, சந்தியா டீ போட்டு எடுத்துக்கொண்டு வந்து தருகிறாள். அப்போது, மதிய என்ன சமையல் செய்யலாம் என்று பேச்சு எழுகிறது. ஆதி மோர்குழம்பு வைக்கச் சொல்கிறான். ஆனால், தயிர் உறை ஊத்தி வைக்கவில்லை நாளைக்கு செய்கிறேன் என்று கூறுகிறார். சமையல் கட்டுக்கு உள்ளே வரும் சந்தியா, பால் இருப்பதைப் பார்த்து உறை ஊத்தி வைக்கிறாள். அப்போது அங்கே வரும் அர்ச்சனா தான் ஏற்கெனவே பால் உறை ஊற்றி வைத்ததைக் கூறுகிறாள். என்ன செய்வது என்று இருவரும் முழித்துக்கொண்டு நிற்கும்போது, அங்கே வரும் சிவகாமி, ஒருவருக்கொருவர் என்ன வேலை செய்ய வேண்டும் என்று கேட்டு செய்ய வேண்டும் என்று கூறுகிறார்.

அதோடு, அர்ச்சனாவுக்கும் சந்தியாவுக்கும் வேலைகளைப் பகிர்ந்து கொடுக்கிறார். அர்ச்சனாவுக்கு சமையல் வேலையும் சந்தியாவுக்கு கடைகளுக்கு சென்று பொருட்கள் வாங்கி வருவது என்று வேலையைப் பகிர்ந்து கொடுக்கிறார். அதோடு, சந்தியாவிடம், டீப்பா தடைச்சிக்கினே பேப்பர் படிகிறது. பேப்பர் படிச்சிக்கினே வேலை செய்றது எல்லாம் வேலைக்காவாது என்று திட்டிவிட்டு செல்கிறாள். மாமியார் சொன்னதைக் கேட்டு சந்தியா வருத்தம் அடைகிறாள். அவர்கள் போன பிறகு, அர்ச்சனா நான் எப்பவுமே இந்த சமையல் வேலைதான் செய்யனுமா என்று புலம்பிகொண்டே பாத்திரம் துலக்குகிறாள்.

அப்போது, சந்தியா மாமனார் டீ குடித்த டம்ப்ளரை எடுத்துக்கொண்டு வருகிறாள். பாத்திரம் துலக்கிக்கொண்டிருக்கும் அர்ச்சனாவிடம் இருந்து தான் பாத்திரம் கழுவுவதாகச் சொல்கிறாள். அதற்கு அர்ச்சனா, இந்த வேலையை அத்தை எனக்கு கொடுத்தாங்க. பிறகு அத்தை கேட்டால் என்னை மாட்டி விடக் கூடாது என்று சொல்லிவிட்டு செல்கிறாள். சந்தியாவும் அத்தை வந்தால் நான் செய்கிறேன் என்று சொல்லிவிட்டு கழுவுகிறாள். அப்பொது, அங்கே வரும் சரவணன், நீங்க ஏன் இந்த வேலையை எல்லாம் செய்றீங்க நான் செய்கிறேன் என்றுசொல்கிறாள். ஆனால், சரவணன், விடுங்க என்று வாங்குகிறான். அப்போது, சிவகாமி அங்கே வந்து கைத்தட்டிக்கொண்டே வருகிறார்.

publive-image

அதோட இந்த வேலையை நான் அர்ச்சனாவைத்தானே செய்யச் சொன்னேன். நீ ஏன் செய்ற என்று கேட்டு அர்ச்சனாவைக் கூப்பிடுகிறார். அதற்குள், சந்தியா நான் தான் செய்கிறேன்னு சொன்னேன். அர்ச்சனா செய்யச் சொல்லவில்லை என்று குறுகிறாள். இதற்கு சிவகாமி, “இவள் காலேஜ்ல படிச்சு ஃபர்ஸ்ட் மார்க் எல்லாம் எடுத்திருக்கா. யாருக்கு என்ன வேலை தரனும்னு எனக்கு தெரியாது. சொன்னதை கேட்காமல் செய்தால் அப்புறம் நம்ம வீட்டுக்கு மயிலு மாதிரி 4 வேலைக்காரி வைக்கனும் என்று சொல்கிறார். இதைக் கேட்ட சரவணன், வச்சிடலாமா என்று சொல்கிறான். இதைக்கேட்டு ஷாக் ஆன சிவகாமி என்ன சொல்கிற சரவணா என்று கேட்கிறார். அதற்கு சரவணன், பக்கத்து ஊர்ல இருந்து ஒரு பெரிய ஆர்டர் கிடைச்சிருக்கு. அதை செய்துகொடுத்தால் நிறைய ஆர்டர் கிடைக்கும். நம்ம ஸ்வீட் கடையில தனி ஆளா வேலை செய்ய முடியல. சந்தியாவை நான் கடைக்கு கூட்டிட்டு போறேன். அப்புறம் நீங்கதான் தனியா வீட்டு வேலை செய்ய வேண்டியிருக்கும். வீட்டு வேலை செய்ய ஆள் வேணும் என்று கூறுகிறான்.

எல்லோரும் மகிழ்சி அடைகிறார்கள். அப்போது அர்ச்சனா நானும் கடைக்கு போய்விடுவேன் என்று கூறுகிறாள். நீங்க ஆர்டர் பிடிக்க போகும்போது எங்க துணிக்கடை விசிட்டிங் கார்டையும் எடுத்துக்கொண்டு போய் கொடுங்க என்று கூறுகிறாள். சிவகாமி, சரவணனிடம் இந்த ஆர்டர் உனக்கு கிடைக்கனும். நீ பட்ட கஷ்டத்துக்கு எல்லாம் பலன் கிடைக்கனும் என்று சந்தோஷமாக கூறிவிட்டு பாத்திரத்தை கழுவி வைக்க சொல்லிவிட்டு செல்கிறாள். சந்தியா சரவணனை சாப்பிட்டுவிட்டு போகச் சொல்கிறாள். ஆனால், சரவணன், இப்போதுதான் டீ குடித்தேன். பசிக்கல நான் அப்புறம் வந்து சாப்பிடுகிறேன் என்று கூறுகிறான். சந்தியாவும் சரவணனும் சமையல் அறையில் இருந்து செல்கிறாள். அங்கே தனியாக இருக்கும் அர்ச்சனா, போற போக்கைப் பார்த்தால் இவங்கதான் சிறந்த ஜோடிக்கான் பரிசை வாங்குவாங்க போல விடக்கூடாது என்று வில்லித்தனமாக யோசிக்கிறாள். இத்துடன் இன்றைய எபிசோடு நிறைவடைகிறது.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"

Vijay Tv Raja Rani Serial Actress Raja Rani
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment